ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

சனி, மார்ச் 16, 2024

ஆனந்தத்தை வெளியே தேடுவது தான் மனிதனுடைய துக்கத்தின் மூல வேர்.

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

ஆனந்தத்தை வெளியே தேடுவது தான் மனிதனுடைய துக்கத்தின் மூல வேர்.. வெளி உலகம் உள் உலகின் பிரதிபலிப்பே. யாருமே தனக்குள்ளே கிடைக்காததை வெளியில்இருந்தும் பெற முடியாது என்பது ஆணித்தரமான உண்மை....வெளியில் ஆனந்தத்தைத் தேடுகிறோம். தோன்றும் தேவைகளையும், ஆசைகளையும் பூர்த்தி செய்தால் அந்த ஆனந்தம் கிடைத்து விடும் என்று தோன்றுகிறது. சரி என்றுஆசைகளைப் பூர்த்தி செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறோம். அந்த முயற்சியிலேயே குறுக்கீடுகள் வந்தால் குமுறுகிறோம், அழுகிறோம், அங்கலாய்க்கிறோம்....

ஒருவழியாக அந்த தேவைகளையும், ஆசைகளை எப்படியோ பூர்த்தி செய்து விடுகிறோம்...சரி இனியாவது ஆனந்தமாய் இருந்து விட வேண்டியது தானே. அப்படி எந்த மனிதனும்  ஆனந்தமாய் இருந்ததாய் இது வரை வரலாறு இல்லை. இனியும் அப்படி ஒரு வரலாறுஉருவாகப் போவதில்லை.கிடைக்கின்ற ஆனந்தம் அலுத்துப் போகிறது.அந்த மகிழ்ச்சிக்கு எப்போதும் அற்பாயுசு தான். மனம் அடுத்த ஆசைகளையும்,

தேவைகளையும் அடையாளம் காட்டுகிறது. இது கிடைத்தால் தான் ஆனந்தம் என்று சொல்கிறது மறுபடி அவற்றைப் பூர்த்தி செய்யப் போராட ஆரம்பிக்கிறோம். இந்தசக்கர வட்டத்தைத் தாண்டி வெளியே வந்தால் தான் தெளிவு பிறக்குமே ஒழியஅதிலேயே பிரயாணித்து இதற்கு ஒரு முடிவை எட்டி விடலாம் என்று எண்ணுவது புத்திசாலித்தனமல்ல. வட்டப் பாதையில் முடிவு என்பது எங்கே இருக்கிறது..?

திருவள்ளுவர் மிக அழகாகக் கூறுவார்.

“ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

பேரா இயற்கை தரும்”

(ஒரு பொழுதும் நிரம்பாத தன்மை உடைய ஆசையை ஒழித்தால், ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாத இன்பத்தைத் தரும்)..

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

வியாழன், மார்ச் 14, 2024

உங்களுக்குத் தெரியுமா....?

 

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

உங்களுக்குத் தெரியுமா....? 

போன தலைமுறை வரையிலுமே கூட நம் பெரியவர்கள், அதாவது ஆன்மீக நெறிமுறையில் பக்திபூர்வமாகப் பற்றற்று வாழ்ந்தவர்கள், தங்கள் இறப்பைப்பற்றி முன்னரே அறிந்து வைத்திருந்தனர் என்பது! மகாபாரதத்தில் துரோணர், பீஷ்மர் போன்ற சான்றோர்களுக்குத் தங்கள் மரணம், அது நிகழும் காலம், நிகழும் விதம் போன்ற எல்லாமே தெரிந்திருந்தது.

ஏன், பதினெட்டாம் நூற்றாண்டு வரையிலும் கூட இத்தகைய தீர்க்கதரிசிகள் நம் சமூகத்தில் வாழ்ந்திருந்தார்கள். எனவே நாம் அறிந்துகொள்ள வேண்டியது என்னவெனில், வேதங்கள் சொல்லியபடி இவ்வுலகத்திலிருந்து நீங்கிச் செல்லும் வழிகள் இரண்டு. ஒன்று ஒளியின் வழி. மற்றது இருளில் செல்வது. ஒளியில் நீங்குபவன் மீண்டும் வருவதில்லை. இருளில் நீங்குபவன் மீண்டும் வருகிறான். ஆனால் இரண்டுமே நம் விருப்பப்படி அமைவதில்லை என்பதும் உண்மை.

இப்படி இந்த இரண்டு மார்க்கங்களைப் பற்றிய விபரங்களைக் குருவின் வாயிலாக நன்கு அறிந்துகொள்ளும் ஆன்ம சாதகர்கள் பிறகு இவ்வுலக வாழ்வில் மயங்கி ஈடுபடுவதில்லை. உலகியல் வாழ்வில் வாழ்கின்றபோதே எவ்விதப் பற்று, வெறுப்பு, ஒட்டுறவு என்று எதுவுமில்லாத நிலையில் இறைபக்தியிலேயே மனதைச் செலுத்தித் தாமரை இலைத் தண்ணீர் போல வாழ்ந்து வருகின்றனர்.

இப்படி ஆன்ம சாதனையில் ஈடுபட்டு இறைவனிடம் பக்தி செலுத்தி, செய்கின்ற செயல் அனைத்தையும் சேவையாகச் செய்பவர்களின் வாழ்வு தவம், யாகங்கள், தானங்கள், தத்துவங்கள் இவற்றிற்கெல்லாம் அப்பால் மேம்பட்ட உயர் உணர்வு நிலையில் அமைகின்றது. இறுதியில் அவர்கள் இருள் பாதையை விலக்கி, ஒளிப்பாதையில் குரு கிருபையாலும், இறையருளாலும் பயணித்து ஆதி நிலையாகிய பரமாத்மாவை அடைகின்றனர்...

ஓம் ஸ்ரீ சாயீராம்.. 🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய..🙏🏻🙏🏻

புதன், மார்ச் 13, 2024

உண்மையை உணரவே போராடுகிறேன்...???!!!



ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ....🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

உண்மையை உணரவே போராடுகிறேன்...???!!!

இறக்கும் தருவாயில் பிராணனைப் புருவ மத்தியில் நிறுத்தி வைத்து ஒளிமயமான என்னை தியானிப்பவன் என்னையே வந்தடைகின்றான். எல்லா வாயில்களையும் நன்கு கட்டி, மனதை உள்ளத்தில் நிறுத்தி உயிரைத் தலையின் உச்சியில் நிலை நிறுத்தி யோக தாரணையில் உறுதி பெற்று, ஓம் என்ற ஒற்றைப் பிரம்ம எழுத்தை ஜபித்துக் கொண்டு என்னையே துதித்துக் கொண்டிருக்கும் நிலையில் உடலைத் துறப்பவன், பரமகதி பெறுகின்றான்”“என்னைத் தவிர வேறு எந்த ஒன்றிலும் தன் சித்தத்தைச் செலுத்தாத பக்தன் நித்திய நிரந்தரமான என்னையே சிந்தித்து வாழ்வதால், என்னிடமே எப்போதும் ஈடுபட்டிருக்கின்ற இந்த யோகிக்கு நான் எளிதில் கிட்டுகிறேன்.”

“இப்படி எந்த மகாத்மாக்கள் என்னிடம் பேரன்பு கொண்டு என்னையே புகலாகக் கொண்டு என்னோடு இணைகிறார்களோ அவர்களுக்கு அழிவுள்ளதும், துயரங்களுக்கு இருப்பிடமானதுமான மறுபிறவி ஏற்படுவதில்லை...!” என்றெல்லாம் ஸ்ரீ கிருஷ்ணர் அழியாத பிரம்ம தத்துவத்தின் சிறப்பையும், அதைத் தானாக அறிவதனால் உண்டாகும் நன்மையையும் அர்ச்சுனனுக்கு எடுத்துரைக்கின்றார். இந்நிலையில் அர்ச்சுனன் அத்தகைய யோகத்தைச் சாராத ஜீவனின் நிலை என்ன...? என்று வினவுகின்றான்.

“என்னில் சித்தத்தை வைக்காமல் உலக நினைவுகளுடன் ஆசாபாசங்களுடன் உடலை விட்டுப் பிரிகின்ற ஜீவன் என்னை அடையாமல் தங்களின் பாவ புண்ணியங்களுக்கேற்ப வேறு வேறு உலகங்களை அடைந்து பிறகு மீண்டும் மழை மூலமாக பூமியை அடைந்து பிறக்கின்றன.”ஜீவன் என்னென்ன ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாமற் போனதோ அதற்குரிய பிறப்பையே அவை அடைகின்றன. உடலின் மிருக இச்சையைத் தீர்க்கின்ற அந்த வாழ்க்கைக்காகக் கீழ் மட்ட நிலைப் பிறப்பிற்கே போய்விடும். இப்படிப் புலனின்பங்களில் ஆசை இருக்கும் மட்டும் பிறப்பு இருந்துதான் தீரும். மாறி மாறி, மாறி மாறிப் பிறந்து இறக்கத் தான் வேண்டும்.”

இந்த உண்மையை அறிந்து, ஏற்பட்ட சிந்தனை மாற்றத்தால் நான் அவன் என்பதையே தொடர்ந்து தியானித்துக் கொண்டிருந்தால் இறக்கும் தருவாயில் நமக்கு இயல்பாகவே அந்த இறை சிந்தனை ஏற்பட்டு, அவனையே அடைந்து விடுவோம். இதை அறிந்தவராய்த்தான் நம் முன்னோர், நான் மறக்கினும் என் நா மறக்காத நாமம் நமசிவாயவே...! என்று சொல்லியிருக்கின்றனர். மூச்சுக் காற்றின் ஓட்டத்தையே ஸோஹம்...! என்ற ஒலியாகக் கேட்கப் பழகி நான் அவன்...! என்ற உணர்வைத் தமக்குள் உருவேற்றியிருக்கின்றனர். இவ்வாறு மிகப்பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்...

ஓம் நமசிவாய....🙏🏻🙏🏻

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

செவ்வாய், மார்ச் 12, 2024

பஞ்சபூதங்கள், மனம், புத்தி, அகங்காரம் ஆகிய இயற்கையின் எட்டு அம்சங்களும் நமக்குள் இருக்கும் சத்தியத்தை மறைக்கின்றன.



ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

 பஞ்சபூதங்கள், மனம், புத்தி, அகங்காரம் ஆகிய இயற்கையின் எட்டு அம்சங்களும் நமக்குள் இருக்கும் சத்தியத்தை மறைக்கின்றன. கிருஷ்ணர் சொல்கிறார், “இவற்றிற்குள்ளே, இவற்றிற்கப்பாலாய் நான் மூலமாய் இ ஶ்ரீ ருக்கின்றேன். எனக்கு இரு வகை சொரூபங்கள் உள்ளன. உயிருள்ளதாயும், உயிரற்ற ஜடப்பொருளாகவும் இருப்பது நானே! இவ்விரு சொரூபங்களின் சேர்க்கையால் தான் எல்லா உயிரினங்களும் உற்பத்தியாகின்றன” என்று. அதாவது இயற்கைத் தன்மையுடன் கூடியதாய் அமைந்துள்ள இந்த உடலும் பிரபஞ்சமும் ஜடப்பொருள்கள். இவற்றோடு சைதன்யம் சேருகின்றபோது அவை இயங்குகின்றன. சைதன்யம் இவற்றைக் கைவிடுகின்றபோது இயக்கம் நின்று சடப்பொருளாகிவிடுகிறது. கண் இருந்தாலும் பார்க்க முடியாது, கைகள் இருந்தாலும் அசைக்க முடியாது...

ஓம் நமசிவாய..🙏🏻🙏🏻

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

தன்னைப்பற்றி அறிய முற்படுபவர்கள் அரிதிலும் அரிது.

 ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

குருவின் பணி...

என்னவன்றால் ஒரு தனிப்பட்ட மனித உயிரின் மனதின் உள்ள மனமாயைகளை அகற்றி, அவ்வுயிரின்  ஆத்ம திருப்திக்காகவும் மறுமலர்ச்சிக்காகவும்  பாடுபடுவதே...அவ்வாறு குரு என்பவர் மனதை உழுகின்ற உழவன் போல் மனதை செம்மைப்படுத்தக்கூடிய  முயற்சியை சிஷ்யனுக்காக மேற்க்கொள்கிறார்....இதற்கு இறைவன் என்பவரே தான் படைத்த உயிரின் அக புறத்தேவைகளை நிறைவேற்றும் விதமாக அந்தந்த உயிருக்கு எந்த ஊடகம் வாயிலாக அதாவது புறத்தேவைகளுக்கு பல பற்பல மனித உயிர்கள் மூலமாகவும் தானே செயலாற்றுகிறார்...அகத்தேவைகளுக்கு  எவ்வாறு நாம் விரும்பி தேர்ந்தெடுத்த குருவின் மூலம் நாம்  போதிக்க முடியுமோ அவ்வாறாக போதிக்கவே குருமூலமாகவும் மனித உயிரின் ஆன்ம விடுதலைக்காக பாடுபடுகிறார்....தன் சிஷ்யனுக்காக இறைவனிடம் தான் பெற்றதை பகிர்கின்றார்...ஆகவே ஆன்மாவே குரு...குருவே சிவம்...

தன்னைப்பற்றி அறிய முற்படுபவர்கள் அரிதிலும் அரிது. அப்படி முயல்பவர்களும் தானாக அறிந்துகொள்ள முடியாது. பிரம்மத்தைப்பற்றி அறிந்த, பிரம்மத்தைத் தான் என்று உணர்ந்துகொண்ட, அந்த பிரம்மத்திலேயே தன்னை மூழ்கடித்துக்கொண்ட, அதைப்பற்றி அறிந்தவர்களின் தொடர்பிற்குள்ளே இருப்பவரான தக்க குருவின் மூலமாகவே ஒருவன் இந்த அறிவைப் பெற முடியும்.

ஓம் நமசிவாய..🙏🏻🙏🏻

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

திங்கள், மார்ச் 11, 2024

ஞான உபதேசம் செய்ய குரு வேண்டும்.


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻🙏🏻

ஞான உபதேசம் செய்ய குரு வேண்டும். அவர் சொல்வதைக் கேட்பதற்கு நான் உடலால் அங்கு இருக்க வேண்டும். என் காது எந்தவிதக் குறையுமின்றி நன்றாகச் செயல்பட வேண்டும். மனம் அங்கு இருந்து சொல்வதைக் கவனிக்க வேண்டும். குரு சொல்வதைக் கேட்பதற்குரிய தயார் நிலையில் நான் இருத்தல் மிக மிக அவசியம். அதாவது மனம் தூய்மை பெற்று கேட்பதற்குரிய தகுதியுடன் இருத்தல் வேண்டும். குரு எவ்வளவு விளக்கமாகவும் நுணுக்கமாகவும் வேதாந்தக் கருத்துக்களை எடுத்துக் கூறி விளக்கினாலும் அதைக் கேட்டுப் புரிந்து அனுபவிக்கின்ற பக்குவ நிலை மாணவருக்கு இருந்தால் தான் அந்த போதனை பயனளிக்கும்...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻🙏🏻

ஞான அறிவைப் பெற்று என்னை நான் ஆத்மா என்று உணர்ந்து ஆத்மாவைக் காண வைத்தால் ஜீவனாகப் பிரிந்து நிற்பது மூலத்துடன் சேர்ந்துவிடும்.



ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

ஞான அறிவைப் பெற்று என்னை நான் ஆத்மா என்று உணர்ந்து ஆத்மாவைக் காண வைத்தால் ஜீவனாகப் பிரிந்து நிற்பது மூலத்துடன் சேர்ந்துவிடும். நான், நான் என்று மார்தட்டி, எனக்கும் நிம்மதியின்றி மற்றவருக்கும் நிம்மதியைத் தராமற் செய்த இந்த நான் என்பது இப்போது ஆத்மாவுடன் சேர்ந்துகொள்ளும் வழியைத் தெரிந்துகொண்டுவிட்டது என்று சொல்லலாமா...? வேதாந்தத்தின் துணையுடன் இந்த நானைப் பிரித்தெடுத்து ஆத்மாவுடன் இணைக்கின்ற பரமாத்மாவாகிய  சிவத்துடன் கலக்க வைப்பதே குரு ஆவார்...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஞாயிறு, மார்ச் 10, 2024

ஒரு செயல் வெகு சிறப்பாக இருக்க வேண்டுமானால் செயலைச் செய்பவனுடைய முழு மனதும் அந்தச் செயலிலேயே இருத்தல் வேண்டும்.



ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

ஒரு செயல் வெகு சிறப்பாக இருக்க வேண்டுமானால் செயலைச் செய்பவனுடைய முழு மனதும் அந்தச் செயலிலேயேருத்தல் வேண்டும். பலனில் பற்று வைப்பது என்பது தேவையில்லாத கனவுகளையும், கவலைகளையும், பயங்களையும், பரபரப்புகளையும் தூண்டி விடக் கூடியது. அது போன்ற பலன் குறித்த உணர்வுகள் ஒருவனை நூறு சதவீத கவனத்தோடு, மனஐக்கியத்தோடு அந்த செயலைச் செய்ய அனுமதிக்காது. உதாரணத்திற்கு சுமார் இருபது சதவீத கவனம் பலன் குறித்த உணர்வுகளில் தங்கி விடுமானால் நமது செயல்திறத்திற்குத் தேவையான கவனத்தில் 20 சதவீதம் குறைந்து அதற்கேற்ப அவனதுஆற்றலும், அறிவுக் கூர்மையும் குறைந்து அதனால் ஏற்படும் குறைபாடு அந்தசெயலில் கண்டிப்பாக இருந்தே தீருமல்லவா...?

ஒருசில சமயங்களில் பலன் குறித்த அதீத கவலைகளும் சந்தேகங்களும் ஒட்டு மொத்த செயலையுமே ஸ்தம்பிக்க வைத்து விடுவதும் உண்டு. சில மாணவர்கள் மிக நன்றாகப் படித்திருந்தாலும் தேர்வு எழுதும் சமயத்தில் அனைத்தும் மறந்து போய் சூன்யமாகி விடுவதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்...மனிதனால் பயன்படுத்த முடிந்த காலம் நிகழ்காலமே. எனவே வாழ்க்கையை முழுமையாக வாழவிரும்புபவன், நிறைய சாதிக்க விரும்புபவன் நிகழ்காலத்தை அலட்சியம் செய்து விட முடியாது. அவன் செயல் புரிகையில் பலன் பற்றிய எண்ணங்கள் அவன் மனதை ஆக்கிரமிக்குமானால் அவன் கவனம் பலன் கிடைக்கக் கூடிய எதிர்காலத்திற்குப் போய் விடுவதன் மூலம் நிகழ்காலத்தை தவறவே விடுகிறான். நிகழ்காலத்தைத் தவறவிடும் போது எதிர்கால நலனையும் சேர்த்தே அவன் இழக்கிறான். மாறாகநிகழ்காலத்தில் முழுக் கவனம் வைத்து செய்ய வேண்டியதைக் குறைவில்லாமல்செய்வானேயானால் அதன் மூலமாக எதிர்கால நலனும் அவனுக்கு உறுதியாகிறது...

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻

அனுபவம் என்பது உணர்வோடு கலப்பது.


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்..🙏🏻🙏🏻

அனுபவம் என்பது உணர்வோடு கலப்பது. அனுபவிக்கின்ற நிலை அது. அனுபவத்தைச் சொல்ல முடியாது. உணரத்தான் முடியும். அப்படி உணர்ந்ததை உணர்த்தவும் சொற்கள் மட்டும் தான் வழி. இது தான் ஞான விஞ்ஞானச் சிறப்பு. உணர்த்தவும் உணரவும் கூடிய யோக வழி இது. அதுவே சொல்கின்றது. அப்படிச் சொல்வதை அதுவே கேட்கின்றது...

நீ முழுமையானவன். நீ பிரம்மம்..! என்று சொல்வது வேதாந்தம். வேதத்தின் முடிவு இதுதான். வேதங்கள் நம்மைப்பற்றித்தான் எடுத்துச் சொல்கின்றன. நம்மைக் கடவுளாக நமக்குத் தெரியப்படுத்துகின்றன. வேதம் நீ, நீ என்று என்னை நேரடியாகச் சுட்டிக் காட்டுவதற்குக் குருவின் சொற்களே பிரமாணமாக அமைகின்றன...

ஒன்றைப்பற்றி அறிவதற்கு அறிபவர், அறியக்கூடிய பொருள், அறிவதற்கு உரிய கருவி ஆகிய மூன்று அம்சங்கள் தேவை. இங்கு குருவின் சொற்களைக் கேட்கின்ற நான், என் காது, கேட்கும் சத்தம் மூன்றும் என்னைப்பற்றி அறிய உதவுபவை. இவை மூன்றும் ஒத்து இருந்தால் தான் இவ்வறிவு ஏற்பட முடியும்...

ஓம் நமசிவாய..🙏🏻

ஓம் ஸ்ரீ சாயீராம்.. 🙏🏻🙏🏻

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...