ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

வியாழன், நவம்பர் 02, 2023

என் கேள்வியில் உன் பதில்..!

 

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

🔥தனக்குள் இருக்கின்ற இயல் ஆனந்தத்தை உணர தன்னை தன்னுள் உணர வேண்டும்...இதற்கு தான் குருவின் போதனைகள் என்பதை உணர்ந்து இறை நாமத்தை உச்சரித்து  குருவின் உபதேசங்களை கடைப்பிடிப்பீர்களாக..🔥

என் கேள்வியில் உன் பதில்..!

"எல்லாருமே துக்கம் என்பதே இன்றி எப்போதும் சுகமாயிருக்க விரும்புகிறார்கள்.. எல்லாருக்குமே தன்னிடத்தில் தான் மிக அதிகம் பிரியம் இருக்கிறது...எங்கு சுகம் இருக்கிறதோ அங்கு பிரியம் இருக்கிறது. மனம் வேலை செய்யாது இருக்கும் ஆழ்ந்த உறக்கநிலையில் தினமும் அந்த சுகத்தையே சுபாவமாகவே அனுபவிக்க முடிகிறது. ஆக, தன்னுள்ளேயே பொதிந்திருக்கும் அந்த சுகத்தை அடைய தன்னைதானே அறிதல் வேண்டும். அப்படி அறிவதற்கு ‘நான் யார்’ என்னும் ஞான ஆராய்ச்சியே முக்கிய சாதனம் ஆகும்...

திருச்சிற்றம்பலம்..தில்லையம்பலம்..🙏

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

உன்னை உணர உன்னில் உள்ளவன் நானே என்று அறிவாயாக...!?



ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏

உன்னை உணர உன்னில் உள்ளவன் நானே என்று அறிவாயாக...!?

"God is within us"...கடவுள் நம்முள்ளேயே இருக்கிறார் என்பதாகும்...இதை அறியும்போது கடவுள் ஆகிறான்.

."தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்..

தன்னை அறிய தனக்கு ஒரு கேடில்லை

தன்னை அறியும் அறிவால் அறிந்த பின்

தன்னையே அர்ச்சிக்கத் தானிருந்தேனே. "

- திருமூலர்

"உள்ளும் உள்ளான், புறத்தும் உள்ளான் என்பார்க்கு....

உள்ளும் உள்ளான் புறத்தும் உள்ளான்...


உள்ளும் இல்லை புறத்தும் இல்லை என்பார்க்கு


உள்ளும் இல்லை புறத்தும் இல்லை" 


 திருமூலர் - திருமந்திரம்...

திருச்சிற்றம்பலம்..தில்லையம்பலம்...🙏

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

புதன், நவம்பர் 01, 2023

நம் மனம்...!!??

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

🔥🔥நான் என்கிற நினைவு  இல்லாத இடமே சொரூபமாகும்.....அதுவே மௌனம் எனப்படும். சொரூபமே ஜகம், சொரூபமே நான், சொரூபமே ஈசுவரன், எல்லாம் சிவஸ்வரூபமே..🔥🔥

என்னென்ன நினைவுகள் நம் மனம் எத்தனை எண்ணங்களை எழுப்பினால் என்ன, ஜாக்கிறதையாய் ஒவ்வொரு எண்ணமும் கிளம்பும் போதே இது யாருக்குண்டாயிற்று என்று விசாரித்தால் எனக்கு என்று தோன்றும்...நினைவே மனிதன் சொரூபம்... நான் என்னும் நினைவே மனத்தின் முதல் நினைவு. அதுவே அகங்காரம்..

மனம் அளவிறந்த நினைவுகளால் விரிகின்றபடியால் ஒவ்வொரு நினைவும் அதிபலவீனமாகப் போகின்றது. நினைவுகள் அடங்க, ஏகாக்கிரகத் தன்மையடைந்து அதனால் பலத்தை அடைந்த மனத்திற்கு ஆத்ம விசாரம் சுலபமாய் சித்திக்கும்....

தொன்று தொட்டு வருகின்ற சகல விஷய வாசனைகளும் ஒடுங்கிச் சொரூப மாத்திரமாய் இருக்கமுடியுமா, முடியாதா என்கிற சந்தேக நினைவுக்கு இடம் கொடுக்காமல் சொரூப தியானத்தை விடாப்பிடியாகப் பிடிக்க வேண்டும். தான்  என்னும் எண்ணத்தையும் அறவே ஒழித்து சொரூப தியானத்தில் ஊக்கமுள்ளவனாயிருந்தால் அவன் நிச்சயம் கடைத்ததேறுவான்.....

நல்ல மனம், கெட்ட மனம் என்று இரண்டு மனங்கள் இல்லை. மனம் ஒன்றே. வாசனைகளே சுபமென்றும் அசுபமென்றும் இரண்டுவிதம், மனம் சுபவாசனை உள்ளதாய் நிற்கும்போது நல்ல மனம் என்றும், அசுபவாசனை உள்ளதாய் நிற்கும்போது கெட்ட மனமென்னும் சொல்லப்படும்...

உலக விஷயங்களிலும், பிறர் காரியங்களிலும் – மனதை விடக்கூடாது. பிறர் எவ்வளவு கெட்டவர்களாய் இருந்தாலும் அவர்களிடத்தில் துவேஷம் வைக்கலாகாது...எ

எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்து நடக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நன்மையுண்டு. மனத்தை அடக்கிக் கொண்டிருந்தால் எங்கேயிருந்தாலும் இருக்கலாம்...நான் என்கிற நினைவு  இல்லாத இடமே சொரூபமாகும். அதுவே மௌனம் எனப்படும். சொரூபமே ஜகம், சொரூபமே நான், சொரூபமே ஈசுவரன், எல்லாம் சிவஸ்வரூபமே.

என்னென்ன நினைவுகள் உற்பத்தியாகின்றனவோ அவற்றை ஒன்றுகூட விடாமல் உற்பத்தி ஸ்தானத்திலேயே நசுக்கிப் போடுவதே வைராக்கியம். வைராக்கியத்துடன் தன்னுள் ஆழ்ந்து மூழ்கி முத்தை அடையலாம்.

🙏எவன் தன்னையே கடவுளாகிய – சொரூபத்தினடத்தில் தியாகம் செய்கிறானோ அவனே சிறந்த பக்திமான்....🙏

திருச்சிற்றம்பலம்...🙏தில்லையம்பலம்.🙏

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏


நீ இறைவனை காண வேண்டுமா அல்லது இறைவனே உன்னை தேடி வந்து காட்சி கொடுக்கவேண்டுமா...!??

  

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏🙏

🔥🔥படைத்தவனையே ஈர்க்கக்கூடிய தன்மைகளாக  சத்தியம், உண்மை, நேர்மை, மனிதநேயம், கருணை, ஒழுக்கத்துடன் கூடிய நற்பண்புகள், நல் எண்ணங்கள், ஒழுங்கியல் சார்ந்த  உணர்வுகள்,சிந்தனைகள், சொற்கள், அறச்செயல்கள் ஆகியவற்றை உட்புகுத்திக்கொண்டு  வாழ்ந்து அது நம்மை சுற்றி உள்ள மனிதர்களுக்கு…நல்லது செய்யுமெனில்…இறைவனை நாம் தேட வேண்டியதில்லை…இறைவனே நம்மை தேடி வருவார்…இறைவனையே நாம் ஈர்த்துக்கொண்டால் அவன் படைத்தையும் பெற்று விடலாம் தானே..🔥🔥 

நீங்கள்  இறைவனை காண வேண்டுமா அல்லது இறைவனே உன்னை தேடி வந்து காட்சி கொடுக்க வேண்டுமா...!புரிகிறதா..

இல்லையென்றால் குரு சொல்வதை கேளுங்கள் ...சீடனாக புதிதாக வந்து சேர்ந்தவரிடம் குரு கேட்டார்,“ஆன்மீகத்தின் நோக்கம் என்ன என்று சொல்ல முடியுமா..?”

புதிய சீடன், “இறைவனை அறிவதும், அடைவது தான் ஆன்மீகத்தின் நோக்கம்…”

“அப்படியா..?”

“என்ன அப்படியா என்று கேட்கிறீர்கள்… அப்படித்தானே இருக்க முடியும்..?”

“சரி… இத்தனை நாள் ஆன்மீகத்தில் சாதகம் செய்து வருகிறாயே இறைவனை அறிந்தாயோ..?”

“இல்லை… ஆனால் முயன்று கொண்டிருக்கிறேன்.”

“நல்லது… உண்மையிலேயே இறைவனை அறிந்துக் கொண்டுவிட முடியும் என்று நம்புகிறாயா..?”

சீடன் சற்றே யோசித்துவிட்டுச் சொன்னான்.

“நம்புகிறேன்… இருப்பினும், கொஞ்சம் சந்தேகமாகவே இருக்கிறது.”

“எதனால் இந்த சந்தேகம் வருகிறது..?”

“பலர் பலவிதமாக இறைவனைப் பற்றிச் சொல்கிறார்கள். மிகவும் ஆராய்ந்து பார்த்தால் தெளிவை விடக் குழப்பமே மிஞ்சுகிறது.”

“நல்லது… எப்போது நீ உள்ளது உள்ளபடி சொன்னாயோ அதுவே நல்லது சீடனே…

இப்போது நான் வேறு விதமாகக் கேட்கிறேன்.

நீ ஆண்டவனைத் தெரிந்துக் கொள்ள, அடைய உண்மையிலேயே விரும்புகிறாயா…?”

“ஆமாம் குருவே.”

“உன் விருப்பத்தின் காரணமாகத்தான் நீ ஆன்மீகப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறாய். அப்படித்தானே..?”

“ஆமாம் குருவே.”

“அன்புள்ள சீடனே..! நீ இறைவனை அடைய, ஓர் எளிமையான மாற்று வழியைச் சொல்லித் தருகிறேன்…”

“மிகவும் சந்தோஷம் குருவே… இந்த வழிக்காகத்தான் நான் காத்துக் கொண்டிருக்கிறேன்.”

“ஆனால் இந்த வழியில் நீ இறைவனை அடைய முடியாது…ஆனால் இறைவன் தான் உன்னை வந்து அடைவான்.”

“இது குழப்பமாக இருக்கிறதே.”

“ஒரு குழப்பமும் இல்லை....!

ஒரு அரசன் இருக்கிறான்…

பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு அவன் ராஜா...அவன் அருகே நெருங்குவதோ பேசுவதோ அறிவதோ எளிமையான விஷயம் அல்ல.முடியவும் முடியாது.”“ஆம்.”“ஆனால், ராஜாவை சந்திக்க வேண்டும் என்கிற பிரஜையில், ஓர் அருமையான காரியத்தைச் செய்கிறான்…அவன் தேசத்தில் உள்ள மக்கள் எல்லோருக்கும் பயன்படும்படியாக உழைக்கிறான்...பல அறச் செயல்களைச் செய்கிறான்...இந்தச் செய்தி ராஜாவுக்குப் போகிறது....உடனே ராஜா பிரதிநிதிகளை அனுப்பி தன் அரசவைக்கு அவனை வரவழைக்கிறார்...அல்லது அவரே நேரில் அவனைப் பார்க்க வருகிறார்.அவனோடு உரையாடுகிறார்…பாராட்டுகிறார்...பரிசுகள் தருகிறார்...இது நடக்கும் இல்லையா...?”

“நிச்சயமாக நடக்கும் குருவே.”

“இப்போது ராஜாதான் இறைவன்...நீதான் அவன்...நீ என்ன முயற்சி செய்தாலும் ராஜாவைப் நெருங்குவது கஷ்டம்..ஆனால், உன் செயல்கள் பலருக்கும் பயனுடையதாக இருந்தால்…அந்த ராஜாவே (இறைவனே) உன்னைப் பார்க்க வருவார்...எனவே, இறைவனைப் பார்க்கும் முயற்சியைக் கைவிடு.இறைவன் உன்னைத் தேடி வரும் தகுதியான செயல்களில் மட்டுமே ஈடுபடு…இறைவனே உன்னை வந்து அடைவான்… சரிதானே…?”

“மிகவும் சரிதான் குருவே…”“நல்லது சீடனே, இனி ஆன்மீகம் உனக்கு கை கூடும். போய் வா…”சீடன் தெளிவடைந்து குருவிற்கு நன்றி தெரிவித்தான்...!

நம் எண்ணங்களும் உணர்வுகளும் சிந்தனைகளும்,சொல்களும், செயல்களும் நம்மை சுற்றி உள்ள மனிதர்களுக்கு…நல்லது செய்யுமெனில்…இறைவனை நாம் தேட வேண்டியதில்லை…இறைவனே நம்மை தேடி வருவார்…

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏

ஞாயிறு, அக்டோபர் 29, 2023

குரு உபதேசம்...எல்லோருக்குமான ஒரு ரகசிய பெட்டி..உங்கள் கைகளில் கொடுத்துள்ளேன் ...!?


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்.....🙏🙏🙏

🙏குரு உபதேசம்.....🙏

எல்லோருக்குமான ஒரு ரகசிய பெட்டி..உங்கள் கைகளில் கொடுத்துள்ளேன் ...!?குரு மரண படுக்கையில் இருந்தார்....அருகில் அவரின் சீடன் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டான்...குரு மெல்ல அவனை அழைத்து, “ சிஷ்யா.. ஏன் கவலைப்படுகிறாய்..? உனக்காக நான் எப்பொழுதும் இருப்பேன். கலக்கம் அடையாதே...”!?கலங்கிய கண்களுடன் சிஷ்யன் கூறினான்.. “குருதேவா... நீங்கள் கூறியபடி ஜபம் தியானம் எல்லாம் செய்து வருகிறேன். ஆனால் ஆன்மீக உயர்நிலை அடையும் காலம் எப்பொழுது என தெரியவில்லை. எதுவரை எனது ஆன்மீக பயிற்சியை தொடர்வது. உங்கள் காலத்திற்கு பிறகு யாரிடம் நான் கேட்பது..?”அணையும் ஜோதி பிரகாசகமாக சுடர்விடும் என்பதைப் போல ஜோதிர்மயமான முகத்துடன் சிஷ்யனைப் பார்த்தார் குரு.. “கவலை கொள்ளாதே. இந்த கட்டிலுக்கு அடியில் ஓர் பெட்டி இருக்கிறது. அதன் உள்ளே உனக்கு பிற்காலத்தில் உபதேசிக்க வேண்டியதை வைத்திருக்கிறேன்...அது அனைத்து விஷயங்களையும் போதிக்கும். எனது உபதேசம் தேவைப்படும் பொழுது மட்டும் பெட்டியை திறந்து பார். எனது ஆசிகள்”...என கூறியபடி அவரின் ப்ராணன் உள்ளே அடங்கியது...

நாட்கள் சென்றன....தனது ஆன்மீக சாதனையில் தனக்கு பலன் கிடைப்பதாக சிஷ்யனுக்கு தெரியவில்லை.. தியானம் , ஜபம் ஆகியவற்றை விட்டுவிடலாமா என எண்ணினான்...குருவின் உபதேசத்தை கேட்க பெட்டியை திறந்தான்....சிஷ்யன் ஞானம் அடைந்தான்..நாட்கள் சென்றன...சிஷ்யன் கூறிய கருத்துகளை மக்கள் ஏற்காமல் கலகம் செய்தனர்...மீண்டும் குருவின் உபதேசத்தை கேட்க பெட்டியை திறந்தான்.அதற்கு பின் வரும் காலத்தில் மக்கள் கருத்துக்களை ஏற்றுக்கொண்டனர்...நாட்கள் சென்றன..தனது இறுதி காலத்தை அடைந்தான்.. தனது சிஷ்யனை கூப்பிட்டு கூறினான்..

“எனது பிரிய சிஷ்யா.. எனது குரு எனக்கு அளித்த உபதேசத்தை உனக்கு அளிக்கிறேன். எனது உபதேசம் தேவையான பொழுது மட்டும் இந்த பெட்டியை திற. எனது உபதேசம் கிட்டும்.”சிஷ்யனுக்கு சிஷ்யனான பரம சிஷ்யன்.. தனது ஆன்மீக சாதனையில் தோய்வு ஏற்பட்டது. குருவின் உபதேசம் அறிய பெட்டியை திறந்தான்.....அதில் எழுதி இருந்த வாசகம்...“இன்னொரு முறை முயற்சி செய்”சிஷ்யனுக்கு மட்டுமல்ல நமக்கும் ஆன்மீக சாதனையில் தோய்வு ஏற்படும் பொழுதும் இந்த உபதேசம் உதவும்....

குரு என்பவர் உபதேசிக்க மட்டுமே முடியும். ஆன்மீக சாதனையை தனி ஒரு மனிதன் செய்து உயர்வடைய வேண்டும்.....எளிமையாக சொல்ல வேண்டுமானால் குரு சமைத்து கொடுக்கலாம், ஏன் ஊட்டிகூட விடலாம். ஆனால் நாம் தான் ஜீரணிக்க வேண்டும்...

ஓம் ஶ்ரீ சாயீராம்....🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏🙏


குருவின் உபதேசம்...!?

 


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏

குருவின் உபதேசம்...!?

சிஷ்யனுக்கு பெருத்த சந்தேகம். பலகாலமாக குருவுடன் இருக்கிறோம். அவரின் கண் அசைவை புரிந்து கொண்டு செயல்படும் முதல் மாணவனாக இருக்கிறோம். இருந்தும் நமது குரு நம்மை பாரட்டுவதில்லையே. நமக்கு சுகந்திரமாக பொறுப்புகளை கொடுப்பதில்லையே என கவலை...குருவை போல ஆன்மீக விஷயங்கள் பேசுவதற்கும் சாஸ்திர கருத்திகளுக்கு பதில் சொல்ல தெரிந்தாலும் நம்மை அவர் அளவுக்கு யாரும் மதிப்பதில்லையே ஏன் இந்த நிலை என யோசிக்க துவங்கினான்....

குருவுடன் தனியாக பயணப்படும் தருணத்திற்காக காத்திருந்தான்....அதற்கான சந்தர்ப்பம் விரைவிலேயே வாய்த்தது. ஓர் தொழிற்சாலையில் உழியர்களுக்கான கூட்டத்தில் அவர்களின் பணியை ஊக்குவிக்கும் பொருட்டு குரு அழைக்கப்படிருந்தார்...கூட்டத்தில் பேசியது அனைத்தும் சிஷ்யனுக்கு புதிய விஷயமாக தெரியவில்லை. குருவுடன் எப்பொழுதும் இருப்பதால், அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் அடுத்த வார்த்தை மனதில் உதிக்கும் வண்ணம் அவனுக்கு குருவின் உரை பழகி இருந்தது. அது வரை பொருமையாக இருந்த சிஷ்யன்  தனது கேள்வியை இன்று கேட்டே விட வேண்டும் என முடிவு செய்தான்.

அன்று மதிய உணவு அருந்திய பின் குரு ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும் பொழுது அவரின் கால்களை மெல்ல பிடித்து விட்டபடியே சிஷ்யன்  கேட்டான், “குருவே, நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா..?”படுக்கையில் சாய்ந்த நிலையில் அமர்ந்திருந்த குரு ஜன்னலுக்கு வெளியே எங்கோ பார்த்த வண்ணம் இருந்தார். சிஷ்யனின் கேள்விக்கு “ம்” என ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாலும் அவரின் கண்கள் வெளியே எங்கோ பார்த்த வண்ணம் இருந்தது...சிஷ்யன்  தனது கேள்விகளை கேட்க துவங்கினான்...“நீங்கள் சொன்ன அனைத்து ஆன்மீக சாதனைகளையும் செய்து வருகிறேன். மக்களுக்கு நீங்கள் சொன்ன அனைத்து கருத்துகளும் எனக்கு தெரிந்த விஷயம் தான். நானும் குரு நிலையை அடைந்து விட்டேனா...? இன் நிலையில் எனக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்..?” என்றான்.

கேள்வி கேட்கும் வரை திரும்பாத அவர் முகம் , கேள்வி கேட்டு முடித்ததும் அவனை பார்த்து திரும்பிய போது சிறிது கலங்கித்தான் போனான் சிஷ்யன்...அவனது கலக்கத்தை போக்கும் வகையில் அவரின் முகத்தில் ஓர் புன்னகை வெளிப்பட்டது....“சிஷ்யா, வெளியே ஓர் கட்டிடத்தின் முகப்பில் என்ன எழுதியிருக்கிறது என பார்” என்றார் குரு...கேட்ட கேள்விக்கு சம்பந்தம் இல்லாத விஷயமாக இருந்தாலும், குருவின் கட்டளைக்காக உட்கார்ந்த நிலையிலேயே எட்டி பார்த்துவிட்டு சொன்னான். “Go Down" - கீழே போ என எழுதியிருக்கிறது குருவே..”

குரு அவனை மேலும் ஓர் அகலமான புன்னகையுடன் பார்த்துவிட்டு சொன்னார்... “சிஷ்யா , இந்த தொழிற்சாலையில் வேலை செய்பவர்களுக்கு அது Godown (கிடங்கு). உனக்கு அது Go Down.(கீழே போ). ஆனால் எனக்கோ அது God Own (கடவுளுக்கு சொந்தமானது)...சாமானிய மனிதர்கள் சாஸ்திரங்களை மூதாதயர்களின் சேமிப்பாக பார்க்கிறார்கள். நீ அதை கீழ் நிலையில் ஓர் புத்தகமாகவோ உரையாகவோ பார்க்கிறாய். நான் அதை கடவுளின் சொந்த பொருளாக பார்க்கிறேன். குரு நிலையை அடைய சாஸ்திரம் தேவையில்லை. விழிப்புணர்வே தேவை”....

அன்று முதல் மஞ்சுநாதன் தன்னை கடவுளுக்கு சொந்தமாக்க துவங்கினான்....குரு நிலை என்பதை நாம் எளிமையாக எண்ணி விடுகிறோம். பகவத் கீதையையோ அல்லது வேறு ஆன்மீக கருத்துக்களையோ சுவை பட பிரசங்கம் செய்பவர்கள் குரு நிலையில் இருக்கிறார்கள் என நினைத்து கொள்ளுவது தவறு. அதே நேரத்தில் கடவுளை பற்றி சுவை பட பேச தெரியாதவர்கள் எல்லாம் குரு இல்லை என முடிவு செய்வதும் தவறு. குருவை விழிப்புணர்வு நிலையிலேயே புரிந்துகொள்ள முடியும்...

குரு நிலை அடைய விரும்புனால் விழிப்புணர்வு அடைவதே வழி அதை விடுத்து, சித்துக்களை கற்பதோ- புராணங்களை மனப்பாடம் செய்வதோ முட்டாள் தனம்....விழிப்புணர்வு பெற்றவர்களுக்கு எதுவும் கற்க வேண்டியதில்லை...விழிப்புணர்வற்றவர்களுக்கு அனைத்தையும் கற்றாலும் எதுவும் பயனில்லை....

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏🙏

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...