ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

சனி, பிப்ரவரி 24, 2024

மரப்பலகை - பாபாவின் படுக்கைக்கானது,


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ... 🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்... 🙏🙏

மரப்பலகையில் பாபா உறங்குவதில் இருக்கும் சூட்சமம் என்ன....🙏🏻

தமது ஆரம்ப நாட்களில் நாலு முழ நீளமும் ஒரு முழ அகலமும் உள்ள ஒரு மரப்பலகையின் நான்கு மூலைகளிலும் சிட்டி (அகல்) விளக்குகள் எரிந்துக் கொண்டிருக்க பாபா உறங்கினார்.  பின்னர் அவர் அப்பலகையைத் துண்டுத் துண்டாக உடைத்துத் தூக்கி எறிந்துவிட்டார்.  (அத்தியாயம் 10) ஒருமுறை இப்பலகையின் பெருமையையும், முக்கியத்துவத்தையும் காகா சாஹேப் தீஷித்திடம் பாபா விவரித்தார்.  இதைக்கேட்டுக்கொண்டிருந்த அவர் பாபாவிடம், "நீங்கள் இன்னும் மரப்பலகையை விரும்பினால் சௌகரியமாகத் தூங்குவதற்காக மசூதியில் மீண்டும் ஒன்றைத் தொங்க விடுகிறேன்" என்றார்...

பாபா:  மஹல்ஸாபதியைக் கீழே விட்டுவிட்டு நான் மேலே துயில விரும்பவில்லை.

காகா: ...பகத் மஹல்ஸாபதிக்காக நான் மற்றொரு பலகையையும் ஏற்பாடு செய்கிறேன்.

பாபா:  அவன் எங்ஙனம் பலகையில் தூங்கமுடியும்...?  பலகையின் மீது தூங்குவது எளிதல்ல.  தன்னிடத்து பல நல்ல குணங்கள் - பண்புகள் உள்ள ஒருவனே அங்ஙனம் செய்ய இயலும்... தனது கண்கள் 'அகல விழித்திருக்கும் நிலையில்' தூங்கக் கூடியவனே அதில் தூங்கமுடியும்....நான் தூங்கப்போகும்முன் மஹல்ஸாபதியை என் அருகில் அமரச் சொல்லி எனது நெஞ்சின் மீது கைவைத்துநாமஸ்மரணம் கேட்கிறதா எனக் கவனிக்கும்படியும், தூங்கிவிட்டால் எழுப்பும்படியும் அவனைக் கேட்கிறேன்.  இதைக்கூட அவனால் செய்ய இயலுவதில்லை.  தூக்க மயக்கத்தில் தலையை ஆட்ட ஆரம்பிக்கிறான்...எனது நெஞ்சில் அவனது கை ஒரு கல்லைப் போல் கனப்பதை உணர்ந்து நான், "ஓ! பகத்" என்று கூவும்போது அவன் அசைந்து கண் விழிக்கிறான்...தரையின் மீதே சரியாக அமர முடியாமலும், தூங்க முடியாமல் தடுமாறுபவனும் தனது ஆசனம் (தோற்ற அமைவு) நிலையுறுதியாக இல்லாதவனும், தூக்கத்திற்கு அடிமையானவனுமான அவன் உயரத்திலுள்ள பலகையில் எவ்விதம் தூங்க இயலும்?மற்ற அநேக முறைகளில் அடியோர்கள் மேல் கொண்ட அன்பினால், "எது நம்முடையதோ (நன்மையோ, தீமையோ) அது நம்மிடம் இருக்கிறது." " எது மற்றவனுடையதோ அது அவனிடம் இருக்கிறது" என்று பாபா கூறினார். பாபா மகல்சாபதியை மிகவும் நேசித்தார் என்பது தெரிகிறது. 

ஒரு சமயம்"மகல்சபாதி வருகிறான். அவன் சாப்பிடவில்லை. அவன் பசி தாங்க மாட்டான். அதனால் அவனுக்கு உணவை எடுத்து வையுங்கள்.” என்றார் சாய்பாபா. அதற்கு சாய்பாபாவின் அருகில் இருந்தவர், “பாபா..மகல்சபாதி அஸ்தினாபுரம் சென்று இருக்கிறார். நாளைதான் வருவார்.” என்றார். அப்போது, “பாபா” என்று வேதனை கலந்த குரல் வந்த திசையை அனைவரும் திரும்பி பார்த்தார்கள். மகல்சபாதி கண்ணீருடன் நின்றிருந்தார். “வா மகல்சபாதி. உனக்காகதான் காத்திருக்கிறேன். அஸ்தினாபுரத்தில் நடந்த தகராறில், உன்னை அழைத்தவர்கள் உன்னையே மறந்துவிட்டார்கள். முதலில் நீ போய் சாப்பிடு. பிறகு பேசலாம்.” என்றார். சாய்பாபா. “பாபா… என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் பேச்சை கேளாமல் சென்று, உடலாலும் உள்ளத்தாலும் மிகவும் வேதனையும் கஷ்டங்களும் அனுபவித்துவிட்டேன். இனி உங்கள் பேச்சை மீற மாட்டேன்.” என்றார் மகல்சபாதி...காகா சாஹேப் தீஷித் அவரேப்பற்றி- ஆன்மீகத்தின் அதிகாரம் என்று கூறினார். அவர் உலக விஷயங்களுக்கு எந்தவிதமான ஆசைகளும் இல்லாமல் இருக்கிறார். இவர் மூலம்   பாபாவின் அடியவர்கள் பலர்    ஆன்மீகத்தை கற்றுக் கொண்டனர். 

பாபா மூலம்   பல தெய்வீக அனுபவங்கள் அவர்  பெற்றார். ஒரு சமயம்  கண்டோபா கோயிலின் வருடாந்திர விழாவுக்கு செல்கையில்,  தண்ணீர் கிடைக்காமல் கஷ்டப்பட்டார். வரும் வழியில் கிணறுகள் வற்றி விட்டன. பாபாவை மனதில் வேண்டிக் கொண்ட சில நிமிடங்களில் கிணற்றில் தண்ணீர் வந்தது அதை  அவருடன் வந்தவர்கள்  அருந்தி தாகம் தீர்த்தனர்....இன்னொரு சமயம்  கண்டோபா பல்கி யாத்திரை செல்கையில்,  ஒரு இடத்தில் பிளேக் நோய் பரவியிருந்தது. அனைவரும் மேலே எவ்வாறு செல்லமுடியும் திகைத்தனர். மகல்சபாதி பாபாவை வேண்டியபடி இருந்தார். தீடீரென்று தன்அருகில் யாரோ இருப்பதை உணர்ந்து திரும்பினார். பாபா அங்கே அவருக்கு தரிசனம் தந்தார். சிறிது நேரத்தில் பாபாவை அங்கு காணவில்லை. ஆனால் அதன் பிறகு அவர்களிடமிருந்த பயம் போய்விட்டது. பிரயாணத்தில்  தடங்கல் இல்லாமல் சென்றனர்.

திரும்பவும்  சீரடி வந்து பாபாவை பார்க்கையில்"" ,பகத்,விழா நன்றாக நடந்தது இல்லையா..? "என்றார்   பின்பு பாபா தான் அவரது பின்புறம் வந்து நின்றதும், விழாவுக்கு தான் வந்ததையும்  தெரிவித்தவுடன் மகல்சபாதி  பாபாவை வணங்கினார்...தான் எப்போது   போவோம் என்பதை முன்கூட்டியே அறிந்த மகல்சபாதி  தன்னுடைய குடும்பத்தில் இருப்பவர்க்கு இது பற்றி கூறினார். காகா சாஹேப் தீஷித் வருவதற்காக ஒரு நாள் காத்திருந்தார்.பாபா அவருக்கு 12ம் தேதி செப்டம்பர் 1922ல்  சத்கதி அளித்தார். ..ஒரு சமயம் பாபாவின் கஃனி, தண்டம், பாபாவின் உதி மூன்று வெள்ளி காசுகள்  இவை எல்லாம் பாபாவால்   மகல்சாபதிக்கு கொடுக்கப்பட்டது.

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻 

வியாழன், பிப்ரவரி 22, 2024

ரமண மகரிஷி ,சுவாமி சின்மயானந்தா , வேதாத்திரி மகரிஷி, ஸ்ரீராமகிருஷ்ணர்,சுவாமி ஷீரடீ சாய்பாபா போன்ற எல்லா சக்தி படைத்த குருக்களும் நோயினால் அவதிப்பட்டே இறந்துள்ளார்கள்..அவர்கள் சக்தியால்( self -healing) அவர்களை அவர்கலாலே காப்பாற்ற முடியாமல் போனதா...?

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏

ரமண மகரிஷி ,சுவாமி சின்மயானந்தா , வேதாத்திரி மகரிஷி, ஸ்ரீராமகிருஷ்ணர், சுவாமி சீரடீ சாய்பாபா போன்ற எல்லா சக்தி படைத்த குருக்களும் நோயினால் அவதிப்பட்டே இறந்துள்ளார்கள்..அவர்கள் சக்தியால்( self -healing) அவர்களை அவர்கலாலே காப்பாற்ற முடியாமல் போனதா...?இந்த உடம்பே ஆத்மாவுக்கு வந்த வியாதி தான்...அந்த உடம்புக்கு நோய் வந்தால் அது வியாதிக்கே வியாதி வந்த மாதிரிதான்....இது ஷீரடீ சாய்பாபா,பகவான் ரமண மகரிஷியின் கூற்று.

ஆன்மீக அனுபவத்தின் உச்சத்தை அடைந்து நிலை பெற்ற மகான்களுக்குத் தான் உடல் அல்ல என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அவர்களுக்கு உடல் துச்சம். எப்படி பசி, தாகம் இவையெல்லாம் உடலுக்கு வருகின்றனவோ அதைப் போலவவே உடலுக்கு நோயும் நோவும் வரத்தான் செய்யும். பஞ்ச பூதங்களால் ஆன இந்த உடம்பு நோகும், தேயும், அழியும். அது இம் மகாத்மாக்களுக்கு ஒரு பொருட்டல்ல.

கண்டிப்பாக மகாத்மாக்கள் தமது சங்கற்பத்தால் தம் உடல் நோயை நீக்கிக்கொள்ள முடியும். எத்தனையோ பக்தர்களின் நோய்களைத் தீர்ப்பவர்களுக்குத் தம் உடலிலுள்ள நோயைக் குணப்படுத்திக்கொள்ள முடியாதா என்ன...!பக்தன், தன் உடல் மீது பற்று வைத்திருக்கிறான்...அவன், தன் உடல் நோயைத் தாங்க முடியாமல் வேதனையில் தவிக்கிறான்...அவன் குடும்பத்தினர் அவனைக் குறித்துத் தீராக் கவலையில் வாடுகின்றனர்.. அதனால் மகாத்மாக்கள் தமது அபார கருணையின் காரணமாக, தம் பக்தர்களின் பிராரப்தங்களைத் தாம் ஏற்றுக்கொண்டு அவர்களை நோயிலிருந்து விடுவிக்கின்றனர். தாம் ஏற்றேடுத்த நோய்களை அனுபவித்துத் தீர்க்கின்றனர்.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரே தாம் புற்று நோயால் அல்லலுறுவது பக்தர்களின் நோய்களை ஏற்றெடுத்ததால் தான் என்று சொல்லியதுண்டு...மகான்களுக்குத் தமது உடம்பைப் பேணி நீண்ட நாள் வாழ்ந்து மேலும் பலருக்கு வழி காட்டலாமே என்கிற கணக்குப் போடும் புத்தியெல்லாம் இல்லை. அவர்கள் இயற்கையின் போக்குக்கு வணங்கி அதன் வழியே நடப்பது நடக்குமாறு விட்டு விடுகிறார்கள்...

மெய்யாய் நோக்குகையில், இந்த உடம்பைச் சுமந்துகொண்டு அவர்கள் சுற்றி வருவது ஒரு விதத்தில் பாரம் தான். பக்தர்கள் மீது உள்ள தம் கருணையின் காரணமாகவே அவர்கள் உடம்பைச் சுமந்துகொண்டு திரிகின்றனர். அதன் காலம் முடியவரும் சமயத்தில், அவர்களுக்கு அதனை நீட்டிக்க யாதொரு ஆர்வமும் இருப்பதில்லை.

"தலையில் பெரும் பாரத்தை சுமந்துகொண்டு நடக்கும் ஒரு கூலியாள் 'எப்போதடா பாரத்தை இறக்கி வைப்போம்' என்று இருப்பானா, இல்லை இன்னும் இன்னும் சுமந்துகொண்டு தூரம் நடக்கலாமே என்று நினைப்பானா...?" என்பார்கள் ரமண மகரிஷியும்..ஷீரடீ சாயீபாபாவும்...!

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🙏

ஓம் நமசிவாய....🙏🙏

செவ்வாய், பிப்ரவரி 20, 2024

நான் அல்லாவிடம்(இறைவனிடம்)சென்று திரும்ப வேண்டும்..

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

நான் அல்லாவிடம்(இறைவனிடம்)சென்று திரும்ப வேண்டும்..

நீ எனது உயிரற்ற உடலை மூன்று நாட்கள் பாதுகாக்க வேண்டும். மூன்று நாட்கள் கழித்துக் காப்பாற்றப்பட்ட அந்த சடலத்தில் எனது உயிர் திரும்பவும் புகுந்துவிடும்...பக்தர் பகத்  மஹல்சாபதியிடம் சீரடி சாயீபாபா கூறியபோது, அப்படியே செய்வதாக அவரும் வாக்களித்தார்..அவர் வாக்களித்த மறுவினாடியே பாபாவின் உயிர் அவரது உடலைவிட்டு வெளியேறியது. பாபாவின் உயிரற்ற உடல் மட்டும் கிடந்தது. ஊரார் கூடினர். உயிரற்ற உடலாகக் கிடந்த பாபாவின் பிரேத விசாரணைக்காக அதிகாரிகள் வந்துவிட்டனர்.

“பாபா இறந்துவிட்டார். இவரது சடலத்தை உடனே நல்லடக்கம் செய்யுங்கள்” என்று அதிகாரிகள் கூறினர்...“அய்யா அது சாத்தியமில்லை. பாபாவின் உயிர் அல்லாவைச் சந்திக்கச் சென்றிருக்கிறது. மூன்று நாள் கழித்து அவர் மீண்டும் உயிர் பெற்று வருவார். அதுவரை நாங்கள் எதுவும் செய்ய முடியாது” என்று பக்தர் மஹல்சாபதி கூறினார்...

“இதென்ன சுத்த பைத்தியக்காரத்தனமாக இருக்கிறதே. செத்தவராவது பிழைத்து எழுவதாவது… பிணத்தை வைத்துக் கொண்டு நாறடிக்காதீர்கள். நீங்கள் கூறயதுபோல் நடக்கவில்லையென்றால் நாங்கள் நான்காவது நாள் வந்து அடக்கம் செய்துவிடுவோம்” என்று வெறுப்படைந்தவராய் அதிகாரி ஒருவர் கூறிவிட்டுப் போய்விட்டார்..ஆனால், என்ன ஆச்சர்யம். சாயிபாபா கூறியபடி மூன்று நாள் கழித்து தமது உயிரற்ற உடலை எழுப்பித்து உயிருடன் நின்றபோது பக்தர்களும், ஊர் மக்களும் ஆனந்தம் அடைந்தனர்...எளிமையான தோற்றத்தில் இருந்தாலும் எண்ணற்ற சித்து விளையாட்டுகளை விளையாடி பக்தர்களின் மனம் கவர்ந்தார் பாபா..சாயீபாபாவிடம் ஒரு சாக்குத் துணி இருந்தது. படுப்பதற்கும், சில நேரங்களில் உட்காருவதற்கும், குளிர் காலத்தில் போர்த்திக் கொள்வதற்கும் அவர் அதனைப் பயன்படுத்தி வந்தார்.

அதனைப்பார்த்து மனம் சங்கடப்பட்ட பக்தர்கள், “பாபா இதென்ன ஒரு சாக்குத் துணியை வைத்துக் கொண்டு எல்லாவற்றுக்கும் பயன்படுத்தி வருகிறீர்கள். நீங்கள் இனிமேல் சாக்குத் துணியில் படுக்கக் கூடாது. நீங்கள் இனிமேல் இந்த பலகை மீதுதான் படுக்கவேண்டும்” என்று அன்புடன் கேட்டுக் கொண்டு ஐந்தடி  நீளமும், ஓரடி அகலமுள்ள ஒரு பலகையைக் கொண்டு வந்து கொடுத்தனர்.

பாபாவும் பக்தர்கள் வேண்டிக் கேட்டுக் கொண்டார்களே என்பதற்காகப் புன்முறுவலுடன் ஏற்றுக்கொண்டார்...பாபா அந்த மரப்பலகையை மசூதியின் கூரையிலிருந்து மூன்றடி தாழ்வாகவும், தரையிலிருந்து ஏழடி உயரத்தில் அந்தரத்தில் இருக்குமாறு செய்து நான்கு மூலையிலும் மண் அகல் விளக்குகளையும் எரியவிட்டு அதன் மீது இரவு முழுவதும் படுத்து உறங்குவார். பின்பு விடியற்காலை நான்கு மணிக்குள் கீழே வந்துவிடுவார்...பாபா அந்தரத்தில் படுத்துறங்கும் செய்தி பக்தர்கள் மூலம் ஊர் முழுக்கத் தெரிய ஆரம்பித்ததும் அவர்கள் அந்த அதிசயத்தினைப் பார்க்க வந்து தொல்லை கொடுத்தனர். இதனால் எரிச்சலுற்ற பாபா அந்தப் பலகையை ஹோம குண்டத்திலிட்டு எரித்துவிட்டார்...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஒருவருடைய மனம் எப்போது அமைதி பெறுகிறதோ,...!???

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

🔥ஒருவருடைய மனம் எப்போது அமைதி பெறுகிறதோ, எப்போது அது மதிப்பிடுதல் என்பதை நிறுத்துகிறதோ, அது பெற்ற அறிவில் இருந்து எப்போது தன்னை விடுவித்துக் கொள்கிறதோ, அப்போது அவர் தனது வாழ்வின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்...!🔥

இறைவனுடன் ஒரே ஒரு தொடர்பு ஏற்பட்டுவிட்டால், ஓர் உண்மையான, இயல்பான நேர்மையான அனுபவம் ஏற்பட்டுவிட்டால்,அந்த கணத்தில் அந்த அனுபவத்தில், நாம் எல்லாவற்றையும், அதற்கு மேலும் , அறிந்து கொள்வோம்....னணஅதனால்தான் உனக்குத் தெரிந்தது சிறிதளவே ஆயினும் நீ முழு நேர்மையுடன் அதன்படி வாழ்வது மிகவும் முக்கியமாகும் . அப்பொழுது உன்னால் அனுபவங்கள் பெறவும் , அனுபவங்களின்மூலம் அறிந்துக் கொள்ளவும் முடியும்...இங்கே அறிதல் என்று சொல்வது மனத்தினால் அறிதல் அல்ல ,நீ அந்த உண்மைகளின்படி வாழ்வாய்..அவை உன்னுடைய ஜீவனின், உன்னுடைய உணர்வின் ஒரு பாகமாக ஆகிவிடும்...நீ சிறிதளவே தெரிந்து கொண்டிருந்தபோதிலும் அதன்படி வாழ்வதே மேலும் தெரிந்து கொள்வதற்கு மிகச் சிறந்த வழியாகும் . உண்மையிலே நேர்மையாகச் சிறிதளவு நடைமுறைக்குக் கொண்டுவருவது ஆன்மீகப் பாதையில் முன்னேறுவதற்கு மிகச் சக்தி வாய்ந்த சாதனம் ஆகும் ....

உதாரணமாக செய்யக்கூடாது என்று தெரிந்த ஒன்றைச் செய்யாதிருத்தல் . உன்னுடைய ஜீவனில் ஒரு பலவீனத்தை, ஒரு இயலாமையைக் கண்டு கொண்டபின், மீண்டும் அது நிகழுமாறு நீ அனுமதிக்க கூடாது ; நீ எதுவாக வேண்டுமோ அதன் காட்சியைக் கண்டு விட்டப்பின் அதுவாக ஆக வேண்டும் என்பதை நீ ஒரு போதும் மறக்கக்கூடாது...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻🙏🏻

திங்கள், பிப்ரவரி 19, 2024

லட்சுமிபாய் தாமோதர் அண்ணா நினைவலைகள்..


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

லட்சுமிபாய் தாமோதர் அண்ணா நினைவலைகள்...🙏🏻🙏🏻

லட்சுமிபாயின் முன்னோர்கள் கோரே என்னும் சிறு கிராமத்தை சேர்ந்தவர்கள். லட்சுமிபாய் அங்குதான் பிறந்தார். அவருடைய குடும்ப பெயர் புரந்தரே என்பதாகும். அவர்கள் விவசாயம் செய்பவர்களாகவும், ஏராளமான பண்ணை நிலங்களின் சொந்தக்காரர்களாகவும் விளங்கினர். லட்சுமி பாய் 1862- ல் பிறந்தார். அவர் குழந்தையாக இருக்கும் போதே தாமோதர் அண்ணாவிற்கு மணம் முடித்து வைக்கப்பட்டார்...அது ஓர் குழந்தை திருமணம் ஆகும். லட்சுமியை விட அண்ணாவிற்கு இரண்டு வயதுதான் அதிகம். அண்ணா லட்சுமியை விட மிகுந்த வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருக்கு வாடே, நெவாலே, சிஞ்சினி, ஆகிய ஊர்களில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஏராளமான நிலபுலன்கள் சொந்தமாக இருந்தன. துரதிர்ஷவசமாக அந்த நிலங்களின் மீது சட்ட சிக்கல்களும், வழக்குகளும் அதிகமாக இருந்தன.

தன் வாழ்நாளில் பெரும்பகுதி, சிஞ்சினி என்னும் சிறு கிராமத்திலேயே வாழ்ந்த அண்ணாவிற்கு எழுத, படிக்க வராது. உண்மையில் அவர் கிராமத்தை விட்டு வெளியில் வந்ததே கிடையாது. மற்ற நகரங்களை பார்த்ததும் கூட கிடையாது. தன் நிலங்களின் மீதுள்ள வழக்குகளின் காரணமாகவும், உறவினர்களோடு கொண்ட இடைவிடாத  சண்டைகளாலும், மனத்தாங்கல்களாலும், நிம்மதி இழந்த அவர் ஒரு சத்புருஷரின் பாதங்களில் சரணடைந்து அமைதியும், ஆறுதலும் அடைய விரும்பினார்.

அவர் அதிகம் படிக்காதவராக இருந்த போதும் அவருக்கு ஒரு நல்ல குணம் இருந்தது. அதாவது, அவர் தன்னுடைய எல்லா கொடுக்கல் வாங்கல்களையும் சட்டப்பூர்வமாக எழுதி வைக்கக் கூடியவர்.  அவர் வாடே யிலுள்ள தன் நிலங்களில் இருந்து வரும் வருமானத்தை வசூலிக்கும் பொறுப்பை பண்டரிநாத் ஆத்மாராம் என்ற தன் உறவினரிடம் ஒப்படைத்திருந்தார்...

நெவாலே மற்றும் சிஞ்சினியிலிருந்து தன் நிலங்களில் வரும் வருவாயை அவரே நிர்வகித்தார். அவர்கள் பொருளாதார ரீதியாக மிகுந்த வசதி படைத்தவர்களாக இருந்தபோதும் அவர்களுக்கு குழந்தைப்பேறு இல்லை. அந்த சமயத்தில் தம்பதிகள் இருவரும் ஐம்பதுகளில் இருந்ததால் குழந்தை பெறும் நம்பிக்கையையே முற்றிலுமாக இழந்து விட்டிருந்தனர்..

அண்ணா இளைஞராக இருக்கும்போதே அவருடைய தந்தையார் இறந்து விட்டார். அவருக்கு இருபது வயதான போது அவரது தாயாரும் இறந்து போனார். அதன்பிறகு சிறிது காலத்திலேயே அவரது தம்பியும் இறந்து போனார். எனவே வாரிசுகளற்ற தன் தம்பியின் மனைவியின் குடும்பத்தை பராமரிக்கும் பொறுப்பும் அண்ணாவின் மீதே விழுந்தது.

இப்படி அனைத்து பிரச்சனைகளையும் ஒழுங்கு செய்து விட்டு தன் சற்குருவை தேடி புறப்பட அவருக்கு எந்த தடையும் இருக்கவில்லை. இப்போது அவரது முக்கிய கவலையே "மெய்ஞான மடைந்த சற்குருவை எங்கனம் கண்டறிவது"  என்பதேயாகும். ஆனால் சரியான நேரம் வரும் போது சற்குருவே நம்மை தேடி வருவார். என்று சொல்லப்படுகின்றது. இதைப்பற்றி அவர் சிந்தித்த வேளையில், சாய்பாபாவின் தெய்வீகத்தன்மையை பற்றி அவர் கேள்விப்பட்டார்....

காலத்தை வீணாக்காமல் உடனடியாக அண்ணா தன் குடும்பத்துடன் பாபாவின் தரிசனச்துக்காக சீரடிக்குப் புறப்பட்டார். அதன் பின் நடந்ததெல்லாம் சீரடி வரலாற்றில் பதியப்பட்டதாகும். பாபாவின் சாவடிக்கு மேல் உள்ள பெயர் பலகையில் ஸ்ரீ சாய்நாத் பாபாஞ்சி லட்சுமி பாய் தாமோதர் பாப்ரே, சிஞ்சனகர் சாவடி, ஷகே 1850 என்று பொறிக்கப்பட்டிருப்பதை காணலாம்.

சீரடியையே தமது இல்லமாக்கிக் கொண்ட அந்த தம்பதியர் பாபாவின் சேவையில் தமது நேரத்தை செலவிட்டனர். அவர் சீரடிக்கு வந்த போது கோண்ட்கர் சந்தில் தங்கியிருந்தார். பிறகு அவர் ஷிண்டே சத்திரத்தில் தங்கத் தொடங்கினார்...அண்ணா பாபாவை விட்டு எங்குமே செல்வது கிடையாது. பாபாதான் முதல்முதலாக அவரை அண்ணா என்று பெயரிட்டு அழைத்தார். பிறகு எல்லோரும் அவரை அண்ணா என்றே அழைக்கத் தொடங்கினர்..அண்ணாவிற்கு பிடித்தமான சேவை, பாபாவின் முதுகையும், வயிற்றையும் அமுக்கி மசாஜ் செய்வதாகும்.

10.7.1919 அன்று அண்ணா, தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் சீரடி சாய்பாபா சமஸ்தானத்திற்கு தானமாக உயில் எழுதி வைத்துவிட்டார். அந்த சொத்துக்கள் மீதான சட்ட சிக்கல்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டு கடன்களும் செலுத்தப்பட்ட பிறகு அந்த சொத்துக்களில் இருந்து சமஸ்தானத்திற்கு மாதம் ஐநூறு முதல் எழுநூறு ரூபாய் வரை நிரந்தரமான வருமானம் கிடைக்கத் தொடங்கியது...

அந்தப் பணம், பாபாவின் நைவேத்தியத்திற்கும், சமாதி மந்திரில் அகண்ட விளக்குகளை ஏற்றுவதற்கு எண்ணை வாங்கவும் பயன் படுத்தப்பட்டது. அந்நாட்களில் இத்தொகை ஒரு பெரிய தொகை என்பதால் இச்சேவை மிகப் பெரிதென மதிக்கப்பட்டது...கிராமத்து மனிதராக இருந்தாலும், பாபாவின் மிகப்பெரிய பக்தராக வாழ்ந்த இவர் 15.4.1920 அன்று இவ்வுலக வாழ்வை நீத்தார். அதற்கு ஒரு வருடம் முன்னதாகவே லட்சுமிபாய் உயிர் நீத்தார். சிஞ்சனியில் உள்ள அவருக்கு சொந்தமான இடத்தில் பாபாவிற்கென ஒரு அழகான கோவில் கட்ட வேண்டும்  என்பது அண்ணாவின் மிகப் பெரிய ஆசை...

இன்று அவருடைய விருப்பம் வடிவம் பெற்று சிஞ்சனியில் அவருடைய இடத்திலேயே அழகிய பாபாவின் திருக்கோவிலாக கம்பீரமாக எழுந்து நிற்கின்றது. இக்கோவிலின் கட்டுமான பணிகளுக்கு சீரடி சாய்பாபா சனஸ்தான் நிதியுதவி செய்திருப்பதை பார்க்கும் போது பாபாவே தன் வாயால் அண்ணா என்று அழைத்த அன்பு பக்தனின் விருப்பத்தை நிறைவு செய்திருக்கின்றார் என்பதை உணர முடிகின்றது.

எல்லாம் சாயீ..!  எல்லாமே சாயீ..!

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...