ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

சனி, பிப்ரவரி 10, 2024

இறைவனிடம் செலுத்தும் பக்தியின் பரிமாணத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

 


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻🙏🏻

இறைவனிடம் செலுத்தும் பக்தியின் பரிமாணத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம். கடவுள் நம் கண்களுக்கும் புலன்களுக்கும் எட்டாத நிலையில் எங்கோ வியாபித்திருக்கிறார். அவர் என்னைக் காத்து ரக்ஷிக்கிறார். அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்’ என்று கருதி, அவரைச் சரணடைந்து பக்தி செலுத்துவது முதல் வகை.

'கடவுள், உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளிலும் ஒவ்வொரு அணுவிலும் வியாபித்திருக்கிறார்..'உயிர்களிடம் காட்டும் அன்பின் மூலம் இறைவனுக்குச் சேவை செய்யலாம்’ என்று கருதி, கடவுளை வழிபடுவது இரண்டாவது வகை. 

கடவுள் என்னுள்ளேயே இருக்கிறார்...அவரை வேறெங்கும் தேடத் தேவையில்லை. என்னுள்ளே இருந்து என்னை இயக்கும் இறைவனே என்னை வழிநடத்துகிறான்’ என்றுகருதி,, தன்னை தூய்மைபப் படுத்திக்கொண்டு,...தன்னுள்ளே வாழும் இறைவனிடம் சரணாகதி அடைந்து சேவை செய்வது மூன்றாவது வகை...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

வெள்ளி, பிப்ரவரி 09, 2024

நாங்கள் கண்டிப்பு மிகுந்த, இரக்கமில்லாத ஜாதி...!

 

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻🙏🏻

நாங்கள் கண்டிப்பு மிகுந்த, இரக்கமில்லாத ஜாதி..ஓரிரு முறை சொல்லிப்பார்ப்போம். திருந்தாவிட்டால் கடுமையான தண்டனை கொடுப்போம். எம்முடைய சொல்லைக் கேட்காதவனை இரண்டாகத் துண்டித்துத் தூக்கியெறிந்து விடுவோம்; எம் குழந்தையாக இருப்பினும் சரி." - ஸ்ரீசீரடி சாய்பாபா...🙏🏻🙏🏻

 கருணையே வடிவான பாபா இதுபோன்ற மொழிகளை கூறியிருக்க மாட்டார் என்று பலர் நினைப்பர். அனால், சில பக்தர்களின்  குடிப்பழக்கம் போன்ற தீய பழக்கங்களை விடுவதற்காக மிகவும் அதிகார தோரணையில் பாபா ப்ரயோகித்த வார்த்தைகள் இவை. தெய்வீக அவதாரமான பாபாவின், வசவுகளும் மறைமுகமான ஆசிர்வாதமே என்பதை நினைவில் கொள்ளவும்...

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻


உனக்காக நான் ..எனக்காக யார்...என்ற கேள்வியை உனக்குள் நீயே கேட்டுக்கொள்....


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

நான் யார்...என்ற கேள்வியை உனக்குள் நீயே கேட்டுக்கொள்....!

குதிரைகள் தாறுமாறாக ஓட முயன்றாலும் கடிவாளங்கள் அவற்றைக் கட்டுபாட்டுக்குள் வைக்கும். கடிவாளங்களை தேரோட்டியிடம்(புத்தியிடம்) ஒப்படைத்துவிட்டு நீர் அமைதியாக உட்கார்ந்துக் கொள்ளும்...தேரோட்டி நிபுணவாகவும் சாமார்திய சாலியாகவும் இருந்தால்தான், குதிரைகள் வேகமாகவும் ஒழுங்காகவும் ஓடும். ஆனால், தேரோட்டியே (புத்தி) கடிவாளங்களின் (மனதின்) பிடியில் மாட்டிகொண்டால், குதிரைகள் பலவீனமாகிவிடும்...

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻


புதன், பிப்ரவரி 07, 2024

எப்போது உணரபோகிறாய்..!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻🙏🏻

எப்போது உணரப்போகிறாய்..!

இயற்கையின் ஒரே தடவை மட்டும் நிகழ்கின்ற நிகழ்ச்சி ஒன்றுமில்லை. எல்லா நிகழ்ச்சிகளும் எல்லாப் பொருள்களிடத்தும் திரும்பத் திரும்ப நிகழ்கின்றன. ஒரு தடவை மழையாக விழுந்த நீர் பல தடவை மழையாக விழவல்லது. அங்ஙனம் நிகழ்ந்து கொண்டும் இருக்கிறது. பிறப்பு மட்டும் ஏன் ஒரு தடவையோடு நின்று விடவேண்டும்..!

ஜீவன் என்பது ஓர் ஆத்மா, அதற்கு உடல்கள் மாறி மாறி அமைவது அதற்குப் புதிய புதிய அனுபவங்களைத் தருவதற்க்காக தான். ஒரே தடவை ஒரு நாள் பள்ளிக்கூடத்துக்குப் போகும் மாணவர்கள் அதிகம் கற்க முடியாது. கல்வி பூர்த்தியாகும் வரையில் திரும்பத் திரும்ப அவன் பள்ளிக்கூடத்துக்குப் போய்க் கொண்டிருக்க வேண்டும். ஆத்மாவானது பரிபூரணத் தன்மை அடையும் வரையில் பிறந்துகொண்டே இருக்க வேண்டும். அதுதான் இயற்கையின் பேரமைப்பாகிறது....

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய..🙏🏻🙏🏻

இந்த உடம்பு பஞ்சபூதங்களால் ஆனது என்கிறோம்....!

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

இந்த உடம்பு பஞ்சபூதங்களால் ஆனது என்கிறோம்...எந்தெந்த உறுப்பும், உருவாகும் பொருள்களும் எந்த எந்த பூதத்திற்கு உரியவை என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்...நிலம் : உறுப்புகளில் பெரியதும், நிலையானதும், உருவுள்ளதும், பளுவுள்ளதும், கடின உறுப்புகளான நகங்கள், எலும்புகள், பற்கள், மாமிசம், தலைமயிர், தாடி உரோமங்கள், மலம் ஆகியவை நிலத் தாது சம்பந்தப்பட்டவை.

நீர்:... நகரும் இயல்புள்ள திரவம், ரசம் ஆகியவையும், பிசுக்குத் தன்மையுள்ள மந்தமான திரவமும், மென்மையான திரவமும், ஒட்டும் தன்மையுள்ள பிச்சிலம் என்ற இயல்புகொண்ட ரசமும், இரத்தம், மாமிசப் பசை, கபம், பித்தம், சிறுநீர், வியர்வை போன்றவை நீர் சம்பந்தப்பட்ட உறுப்புகள்.

நெருப்பு :... உடலிலுள்ள பித்தம், சூடு, பளபளப்பு இவற்றைச் சேர்ந்தவைகளும், நீலம், மஞ்சள் (பில்லிரூபின்கள்) போன்ற நிறங்களும், கண் புலன்கள் ஆகிய இவை அனைத்தும் அக்னி என்னும் பூதத்தைச் சேர்ந்தவை...

வாயு :... மூ்ச்சுக் காற்று, திறத்தல், மூடுதல், விரித்தல் சுருக்குதல், செல்லுதல், தூண்டுதல், தரித்தல், தொடுதல் மற்றும் தொடு புலன்கள் ஆகியவை காற்று என்னும் பூதத்தைச் சேர்ந்தவை...

ஆகாயம் :...  நாசித் துவாரங்கள், ரோமத் துவாரங்கள், செவித் துவாரங்கள் மற்றும் புலன்கள், ஓசைகள் இவை அனைத்தும் ஆகாயம் சார்ந்த உறுப்புகள்

ஆத்மா :... மனம், உணர்வு, அறிவு எனச் செயல்பட்டு உடலைத் தூண்டுகிற இதுவே ஆத்மா என்னும் சொல்லால் குறிக்கப்படுகிறது...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻.

செவ்வாய், பிப்ரவரி 06, 2024

உண்மையை உணர உனக்கு தகுதி உண்மையாகவே வந்ததா என யோசி...போலியாக நடிக்காதே....!


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

உண்மையை உணர உனக்கு தகுதி உண்மையாகவே வந்ததா என யோசி...போலியாக நடிக்காதே....!

மற்றோரிடம் கருணை காட்டும் போது, நாம் நம்மை மறந்து அவர்களுக்காக, அவர்கள் நன்மைக்காக என்று ஏதோ செய்வோம். அப்போது நாம் நம்மை இழப்பதால், நமக்கு ஆனந்தமே ஏற்படும். மாறாக துக்கம் வருகிறது என்றால், அந்தக் கருணையில் நான்-எனது என்ற மனோபாவம் இருக்கிறது, நாம் நம்மை இழக்கவில்லை என்றுதான் அர்த்தம் ஆகிறது...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

திங்கள், பிப்ரவரி 05, 2024

ரகசியம் பரம ரகசியம்

 

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

ரகசியம் பரம ரகசியம் ...

ஒரு சமயம் ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் கடுமையாக போர் நடந்து கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் கடும் புயல் வீசியது. இதனால் மூன்று நீராவிக் கப்பல் தவிர மற்ற எல்லா கப்பலும் புயலில் சிக்கி கடலுக்குள் முழ்கியது. எங்கு தன்னுடைய கப்பலும் கடலுக்குள் மூழ்கிவிடுமோ என்று பயந்தார் அந்த கப்பலின் கேப்டன் ஜஹாங்கீர்ஜி ப்ராமி தர்வாலா. இவர் சிறந்த பாபா பக்தர். எந்த நேரமும் மகான் சீரடி சாய்பாபா படத்தை தன் சட்டை பாக்கெட்டிலேயே வைத்திருப்பார். தன் பாக்கெட்டில் இருந்த பாபா படத்தை எடுத்து, “பாபா.. ஆபத்தில் இருக்கிறோம். இந்த ஆபத்தில் இருந்த எங்களை காப்பாற்றுங்கள் பாபா.“ என்று கண்ணீருடன் வணங்கினார். அப்போது உடன் இருந்த வெளிநாட்டு நண்பர் ஒருவர், “ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் நடுகடல் எல்லையில் இருக்கும் நம்மை, எங்கோ சீரடி கிராமத்தில் இருக்கும் பாபா காப்பாற்றுவார் என்று எப்படி நம்புகிறாய்.?“ என்றார்.

“ஒரு சிவபக்தை எங்கள் ஊரில் இருந்தாள். அவளின் மகள் நிறைமாத கற்பிணி பெண். ஒருநாள் பிரசவ வலியால் அவள் துடித்து அழுத போது, அவளின் தாய் அவள் அருகில் இல்லை. இதனால் அந்த பெண்ணின் ஊரில் இருக்கும் சிவபெருமான் அந்த பெண்ணின் தாயாக வந்து பிரசவம் பார்த்து சென்றார். அதனால் அவரை நாங்கள் “தாயுமானவர்.“ என்று அழைக்கிறோம். ஒரு குழந்தைக்கு வேதனை என்றால் அதன் தாய்க்கும் அந்த வேதனை அல்லவா. அதுபோல் ஒரு பக்தனுக்கு துன்பம் என்றால் அவனின் இஷ்ட தெய்வத்திற்கும் அந்த கஷ்டம் உண்டு. அதனால் நம்மை காப்பாற்றும் ஒரே தெய்வம் நம் இஷ்ட தெய்வமாகதான் இருக்கும். நம்பிக்கை இருக்கிறது. என் சாய்பாபா நம்மை காப்பாற்றுவார்.“ என்றார் கேப்டன். அதே சமயம் ஷீரடியில் – “ஓ…“ என்று கூச்சல் இட்டார் சாய்பாபா. பாபாவை தரிசிக்க வந்தவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. சில நிமிடத்தில் பாபாவின் மீது தண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. எப்படி – எங்கிருந்து இவ்வளவு தண்ணீர் வருகிறது.? என்று அதிசயித்தார்கள் பக்தர்கள்.

அங்கிருந்த பலர், அந்த தணணீரை ருசி பார்த்து, “இது கடல் நீர்.“ என்றனர். கடல் நீர் பக்தர்களின் கால் பாதம் அளவு நிரம்பியது. உடன் இருந்த ஷாமா, பாபாவின் உடலை துணியால் துடைத்துக்கொண்டு இருந்தார். இப்படியே மூன்று நாட்கள் இந்த அதிசயம் நடந்து கொண்டு இருந்தது. ஏன் இப்படி நடக்கிறது என்று குழம்பினார்கள் பக்தர்கள். அதை பாபாவிடம் கேட்கவும் தயக்கம். மூன்றாம் நாள், வெளிநாட்டில் இருந்து ஒரு கடிதம் வந்து உள்ளது என்று பாபாவிடம் ஷாமா ஒரு கடிதத்தை கொடுத்தார். அதை வாங்கிய பாபா, தன் அருகில் இருப்பவரிடம் கடிதத்தை கொடுத்து படி என்றார். அது கப்பல் கேப்டன் ஜஹாங்கீர்ஜி ப்ராமி தர்வாலா எழுதிய கடிதம். சாய்பாபாவை நலம் விசாரித்துவிட்டு, “பாபா புயல் காற்றால் பல கப்பல்கள் கடலில் முழ்கியது. கடலில் எங்கள் கப்பலும் முழ்கும் நிலைக்கு வந்துவிட்டது. என் வாழ்நாளின் கடைசியாக உங்களை பிராத்தனை செய்யலாம் என உங்கள் படத்தை வைத்து பிராத்தனை செய்தேன்.

அற்புதம் நடந்தது பாபா… எந்த பாதிப்பும் இல்லாமல் எங்கள் கப்பல் பாதுகாப்பாக நாடு வந்து சேர்ந்தது. எல்லாம் உங்கள் கருனைதான். உங்கள் மகிமை எனக்கு தெரியும் பாபா.“ என்று கேப்டன் ஜஹாங்கீர்ஜி ப்ராமி தர்வாலா எழுதி இருந்தார். பிறகுதான் பாபாவுடன் இருந்த பக்தர்களுக்கு புரிந்தது. மூன்று நாட்களாக அந்த கப்பலை காப்பாற்றவே பாபா போராடினார். பாபா வசிக்கும் இடத்தை கடல் நீர் கொஞ்சம் சூழ்ந்ததற்கும் அவர் உடலை கடல் நீர் நனைத்ததற்கு காரணம் இதுதான். மனிதர்கள் ஸ்ரீசாய்பாபாவின் மகிமையை சொன்னால் அது பக்தி நிலை. ஆனால் விஷ்ணுபகவானே, “சாய்பாபாதான் உன் இன்னல்களை தீர்ப்பார்.“ என்றால், அதன் காரணம் ஸ்ரீசாய்பாபா இறைவனின் ஓர் அம்சம். இறைவனின் மகத்துவங்களின் ஒரு வடிவம்தான் சீரடிசாய்பாபா என்பதே உண்மை...

ஓம் ஸ்ரீ சாயீராம்... 🙏🏻🙏🏻

ஞானம் என்றால் என்ன....? ஞானத்தை எப்படி விளக்குவது...?


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻🙏🏻

ஞானம் என்றால் என்ன....? ஞானத்தை எப்படி விளக்குவது...?

ஞானம் என்பது ... ஒரு பிரமாண்டமான அனுபவம் அல்ல. ஞானம் என்பது ஒரு எளிய அறிவு ப்பூர்வமான புரிதல் மட்டுமே...ஞானம் பெறுவதற்கு பயிற்சியும் தேவை இல்லை, முயற்சியும் தேவை இல்லை. ஒரு நொடிபொழுது போதும் இதனை புரிந்துக் கொள்வதற்கு...

ஞானம் என்பது ... நம் அறிவு தன் எல்லையை புரிந்து கொள்ளுவது …. நம் அறிவு ... தனக்கு எங்கே வேலை இருக்கிறது... தனக்கு எங்கே வேலை இல்லை என்று புரிந்து கொள்ளுவது தான் ஞானம்...

நாம் நமது மனோ இயக்கம் சம்பந்தமாக, நாமாகச் செயல்படுவதற்கு எதுவும் இல்லை என்பதைக் கண்டுகொள்வதே 'ஞானம்'...நம்முடைய மன உணர்வுகளைச் சீரமைக்கும் வல்லமை நமக்கு கிடையாது என்ற நமது இயலாமையை  நாம்  அறிவுப்பூர்வமாகப்  புரிந்துக் கொள்வது தான் ஞானம்'....நம் அறிவு புறச்செயல்களை நிர்வாகம் செய்யலாம். மனதையும் நிர்வாகம் செய்ய முயலுவது தான் நம் எல்லா மன பிரச்சனைகளுக்கும் காரணம். நம் அறிவு நம் மனதை நிர்வாகம் செய்ய முடியாது என்று புரிந்து கொள்வது தான் … ‘ஞானம்’....

மனதில் எண்ணங்கள்....அதன் போக்கில் தான் வரும்... அவை நம் அறிவின் கட்டுபாட்டுக்குள் இல்லை என்று புரிந்துக் கொள்வது தான் … ‘ஞானம்’...நாம் தூங்குவதற்கு செல்கிறோம் ...எண்ணங்கள் வந்து கொண்டே இருக்கின்றன..." எண்ணங்களே...! நான் தூங்க போகிறேன்.... நாளை வாருங்கள் " என்று சொன்னால் கேட்குமா...? "மனசே, இன்று முழுவதும் மகிழ்ச்சியான எண்ணங்கள் மட்டுமே வர வேண்டும் ... கோபம், துக்க எண்ணங்கள் வர கூடாது" என்று நம் மனதிடம் நம் அறிவு ஒரு கோரிக்கை வைத்தால் … நம் மனது கேட்குமா?நம் மனம் நம் அறிவின் கைகளில் இல்லை என்று அறிவுபூர்வமாக புரிந்து  கொள்வது தான் ‘ஞானம்’....

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻

ஞாயிறு, பிப்ரவரி 04, 2024

பாபா தன் நெருக்கமான மகல்சாபதயிடம் ...!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

பாபா தன்   நெருக்கமான  மகல்சாபதயிடம் ஆன்மிக முன்னேற்றத்துக்குப் பணத்தை ஒரு அபாயமாக, தடையாக அவர் கருதினார்.  தமது பக்தர்களை அதன் பிடியில் விழ அனுமதிப்பதில்லை..இது விஷயத்தில் பகத் மஹல்ஸாபதி ஓர் உதாரணம் ஆவார்...அவர் பரம ஏழை...வரவையும் செலவையும் ஒன்றாக்க அவரால் இயலவில்லை.  பாபா அவரை ஒருபோதும் எந்தப் பணத்தையும் சம்பாதிக்க அனுமதிக்கவில்லை.  தமது தஷிணைப பணத்தினின்றும் ஏதும் கொடுக்கவுமில்லை.  ஒருமுறை ஹம்ஸ்ராஜ் என்ற தயாளமும், தாராள குணமும் உள்ள ஒருங்கிணைத்து வியாபாரி பாபாவின் முன்னால் மஹல்ஸாபதிக்கு ஒரு பெருந்தொகை அளித்தார்.  ஆனால் பாபா அதை ஏற்றுக்கொள்ள அவரை அனுமதிக்கவில்லை...

1886ல் பாபா எல்லைக்கோட்டை (ஆயுள் என்ற எல்லை) தாண்ட முற்சித்தார்.  ஒரு மார்கழிப் பௌர்ணமி தினத்தன்று பாபா கடுமையான ஆஸ்த்மாவால் பீடிக்கப்பட்டார்.  அதைத் தொலைப்பதற்கு பாபா தனது பிராணனை மிகஉயர எடுத்துச்சென்று சமதிநிலையை அடையத் தீர்மானித்தார்...பகத் மஹல் ஸாபதியிடம் "எனது உடலை மூன்று நாட்கள் பாதுகாப்பாயாக...நான் திரும்பினால் எல்லாம் சரியாகிவிடும்...நான் திரும்பவில்லை என்றால் அந்த திறந்தவெளியில் (சுட்டிக்காண்பித்து) எனது உடலைப் புதைத்துவிட்டு அதன்மேல் இரண்டு கொடிகளை அடையாளமாக நட்டுவிடு" என்று கூறினார்...

இதைக் கூறிவிட்டு இரவு சுமார் பத்துமணிக்கு பாபா கீழே சாய்ந்தார்.  அவரது மூச்சும், நாடியும் நின்றுபோயின.  உடம்பை விட்டுவிட்டு உயிர் அகன்றுவிட்டதைப்போல் தோன்றியது.  கிராம மக்கள் உள்ளிட்ட அனைவரும் அங்குவந்து விசாரணை ஒன்றை நடத்தி, பாபாவால் சுட்டிக்காண்பிக்கபட்ட இடத்தில் அவரை அடக்கம்செய்ய வந்தனர்...ஆனால் மஹல்ஸாபதி இதைத் தடை செய்தார்.  தமது மடியிலேயே வைத்துக்கொண்டு மூன்று நாட்கள் விடாமல் காத்திருந்தார்.  மூன்று நாட்கள் கழிந்ததும் காலை 3 மணிக்கு பாவாவிடம் உயிரின் அறிகுறிகள் தெரிந்தன.  அவரது சுவாசம் ஆரம்பித்து, அடிவயிறு அசையத் தொடங்கியது.  கண்கள் திறந்தன.  தனது அங்கங்களை நீட்டிக்கொண்டு மீண்டும் உணர்வுக்கு வந்தார்.மகல்சாபதி அப்பேற்பட்ட பாக்கியம் செய்தவர்...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻

கர்மம், ஞானம், யோகம், பக்தி...!

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

கர்மம், ஞானம், யோகம், பக்தி என்ற நான்கு வழிகள் நம்மைத் தனித்தனியே கடவுளிடம் இட்டுச்செல்கின்றன.  இவைகளில் பக்திவழி முட்கள், பள்ளங்கள், படுகுழிகள் நிறைந்ததாயும்,  கடப்பதற்கு மிகவும் கடினமாயும் இருக்கிறது.  ஆனால் நீங்கள் சாயியையே சார்ந்து, குழிகளையும், முட்களையும் விலக்கி நேராக நடப்பீர்களானால், அது உங்கள் குறிக்கோளிடத்தில் (கடவுளிடத்தில்) அழைத்துச் செல்கிறது.  இவ்வாறாக சாயிபாபா நிச்சயம் கூறுகிறார்.  அந்தர்யாமியாய் இருக்கிற பிரம்மத்தைப் பற்றியும், இவ்வுலகைப் படைத்த அவரின் சக்தியைப் பற்றியும் (மாயை) அவ்வாறு உண்டாக்கப்பட்ட உலகத்தைப் பற்றியும் தத்துவம் பேசி, இவை மூன்றும் முடிவில் ஒன்றே என்றும் எடுத்துரைத்த பின்னர் பக்தர்களின் நலனுக்காக உத்திரவாதம் அளிக்கும் கீழ்கண்ட சாயிபாபாவின் மொழிகளை ஆசிரியர் கூறுகிறார். 

"உணவு, உடை இவற்றைப் பொறுத்தமட்டில் வறுமையோ, இல்லாமையோ எனது அடியவர்களின்  வீட்டில் இருக்காது.  தங்கள் மனதை எப்போதும் என்மீது ஸ்திரப்படுத்தியவர்களாய் என்னையே முழு இதயத்துடன் வழிபாடு செய்யும் அடியவர்களின் நலன்களை எப்போதும் கவனிப்பதே, எனது சிறப்பியல்பு...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

எத்தனை தடவை சொன்னாலும் இது தான் உண்மை...!

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ....🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻🙏🏻

எத்தனை தடவை சொன்னாலும் இது தான் உண்மை...!

மாயை, ஒரு மலைப் பாம்பைப்போல் உடலைச் சுற்றிக் கொண்டு எல்லா அங்கங்களையும் அழுத்தி, உள்ளிருக்கும் குடலையும் வெளிப்புறத்தில் இருந்து கொடுக்கும் மரணத் தழுவலால் பிழிந்து விடுகிறது. அவளிடமிருந்து தப்புவதற்கு யாருக்கு சக்தியிருக்கிறது...?"நான் கேட்ட ஐந்து ரூபாயைப் போல ஐம்பது மடங்கு வைத்துக் கொண்டு, எதிலுமே சம்பந்தபடாதவர் போல் அங்கு உட்கார்ந்து இருக்கிறீர்..! அதை இப்பொழுது வெளியே எடும்...! அங்கு, உம்முடைய ஜோபியிலேயே பிரம்மம் இருக்கிறது..!"

பாபா இவ்வாறு கூறியவுடன் அம்மனிதர் ஜோபியில் கையிட்டு, ஒரு கட்டு ரூபாய் நோட்டுகளை  எடுத்தார்... இருபத்தைந்து பத்து ரூபாய் நோட்டுகளை எண்ணினார்...மனதின் ஆழத்தில் வெட்கத்தால் அம்மனிதர் குன்றிபோனார். பாபாவின் அந்தர்ஞானத்தை அறிந்து வியப்படைந்தார். ஆசிகள் வேண்டி, உடனே சிரத்தை பாபாவின் பாதங்களில் வைத்தார்.

பாபா அப்பொழுது அவரிடம் கூறினார், "உம்முடைய பிரம்ம ஞானக் கட்டைச் சுருட்டிக் கொள்ளும். உம்முடைய பேராசை சுத்தமாக அழியாதவரை உமக்கு பிரம்ம ஞானம் கிடைக்காது...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...