ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

ஞாயிறு, நவம்பர் 19, 2023

ஞானத்தை தேடி...!

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

ஞானத்தை தேடி...!

இது உயர்ந்தது, இது தாழ்ந்தது என்று எந்தக் கணம் பிரிக்கிறீர்களோ, அந்தக் கணமே ஞானோதயத்துக்கான கதவு முற்றிலும்  மூடப்பட்டுவிடுகிறது. புனிதம் என்றும், அசிங்கம் என்றும் பாகுபாடு எதையும் காட்டாதவர்கள்தாம் மேன்மையான நிலைக்குப் போகிறார்கள்...ஒரு சாது கடைத்தெரு வழியே நடந்துகொண்டு இருந்தார்..இறைச்சி விற்கும் கடையில் நின்றிருந்த ஒரு வாடிக்கையாளரின் குரல் சாதுவின் காதில் விழுந்தது. “பன்றி இறைச்சி வேண்டும். இருப்பதிலேயே எது முதன்மையான பகுதியோ, அங்கே இருந்து வெட்டிக் கொடு...!கடைக்காரன் குரல் சொன்னது...“இந்த இறைச்சியில் முதன்மையான பகுதி என்று எதுவும் இல்லை”இதைக் கேட்டதும் சாது ஞானம் அடைந்தார்...ஞானம் அடைவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று, எல்லாமே புனிதம் என்று பார்ப்பது. இரண்டாவது எல்லாமே அசிங்கம் என்று பார்ப்பது. இரண்டிலும் பாரபட்சமற்ற தன்மை இருக்கிறது...இது உயர்ந்தது, இது தாழ்ந்தது என்று எந்தக் கணம் பிரிக்கிறீர்களோ, அந்தக் கணமே ஞானோதயத்துக்கான கதவு முற்றிலும்  மூடப்பட்டுவிடுகிறது. புனிதம் என்றும், அசிங்கம் என்றும் பாகுபாடு எதையும் காட்டாதவர்கள்தாம் மேன்மையான நிலைக்குப் போகிறார்கள்...

‘பன்றி இறைச்சியில் இந்தப் பகுதி ருசியாக இருக்கும். இதில் அவ்வளவு ருசி இருக்காது’ என்று இறைச்சி விற்பவன் பாகுபாடு பார்க்கத் தயாராக இல்லை. இதைக் கவனிக்கும் சாதுவுக்கு, இந்தப் பிரபஞ்சத்தில் மேன்மையற்ற அம்சம் என்று எதுவும் இல்லை என்பது சடாரென்று உறைக்கிறது. பகுதி பகுதியாகப் பிரிவினை செய்து, ஒரு பகுதியைக் கொண்டாடிக் கொண்டும், மற்றதை அவதூறு சொல்லிக்கொண்டும் உலகத்தைப் பார்ப்பதை விடுத்து, எல்லாவற்றையும் ஒருமித்த ஒன்றாகவே பார்க்கத் தொடங்குவதே ஞானத்துக்கான வழி என்பது விளங்குகிறது...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

உண்மையே ஆன்மீகம், சத்தியமே ஆன்மீகம்...!


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ....🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

🙏🏻🙏🏻உண்மையே ஆன்மீகம், சத்தியமே ஆன்மீகம்...!  அதைவிடச் சிறந்த ஆன்மீகமில்லை...🙏🙏

யார் உண்மையைப் பின்பற்றி மனம், மொழி, செயல்களால் நல்லவர்க்கு உதவியாயிருக்கின்றாரோ அவரே சிறந்த ஆன்மீகவாதி.  கற்றல், கேட்டல், தெரிதல், அறிதல், புரிதலால் மட்டுமே ஒருவர் ஆன்மீக குருவாக முடியாது...உணர்பவரே மற்றவர்களை வழிநடத்த முடியும்.  ஆம், இயற்கையின் நியதிகளை, பிரம்மத்தின் செயல்களை உணர்பவரே பிரம்மஞானி...உண்மை பேசுபவனுக்கே இயற்கை (பிரம்மம்) தன் இரகசியங்களை வெளிப்படுத்தும்.  காரணம், இயற்கை உண்மையானது.  இயற்கையை  உணரும் ஒருவரே ஆன்மீக குருவாக முடியும்.  மற்றவர்கள் பெரும்பாலும் தமது தவறான வழிகாட்டுதலால் மக்களிடையே குழப்பத்தையே விளைவிப்பர்.  அது ஆன்மீகத்தின் தவறன்று.  போலி ஆன்மீகவாதிகளின் தவறு...

ஒரு நாள் வகுப்பறையில்  மாணவர்களிடம் ‘இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் எத்தனை பேர் உள்ளீர்கள்..?  கையை உயர்த்துங்கள்’ என்றார் ஆசிரியர் .  அனைவரும் கையை உயர்த்தினர். ஆசிரியர்  அவர்களிடம், ‘இந்து என்றால் யார் தெரியுமா..? இந்து மதம் கூறுவதைப் பின்பற்றுபவனே இந்து.  சும்மா கோவிலுக்கு மட்டும் போய் நெற்றியில் பட்டையும், நாமமும் போடுபவன் இந்துவாக முடியாது.  மதம் என்ன கூறுகிறது...? 

உண்மையே பேசு, உழைத்து முன்னேறு, உன்னுடைய நன்மைக்கு அடுத்தவனைக் கெடுக்காதே என்பதே. .கிறிஸ்தவமும், இஸ்லாமும் இதையே போதிக்கின்றன. உங்களில் எத்தனை பேர் உண்மை பேசுகின்றீர்...?  கையை உயர்த்துங்கள்’ என்றார் ஆசிரியர் ...  ஒருவன் கூட இல்லை.  ‘ஆதலால் இங்கு இருக்கும் யாரும் இந்துவுமில்லை கிறிஸ்தவனுமில்லை முஸ்லிமுமில்லை.  மக்களும் இப்படித்தான் மதத்தைப் பின்பற்றுவதாக நினைத்து தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றனர்’.  இதற்குக் காரணம் போலி ஆன்மீக குருக்களே. இயற்கை நிகழ்வுகளை உணர்தல் மிகவும் கடினம். 

 ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறேன்.  அரசர் ஒருவர் அடிக்கடி கடற்கரைக்குச் சென்று யோசித்துக் கொண்டிருந்தார்.  பல நாட்கள் காலையில் கடற்கரைக்கு வந்து மாலையில் தான் அரண்மனை திரும்புவது வழக்கம்.  ஒரு நாள் கடற்கரையில் ஒரு சிறுவன் காலையிலிருந்து மாலை வரை கடல் நீரை தேங்காய் மூடியில் எடுத்து கடற்கரைக்கு அப்பால் ஊற்றிக் கொண்டிருந்ததைக் கண்டார்.  சிறுவனின் அருகில் சென்று காரணம் கேட்டார்.  சிறுவனோ, ‘கடலை வற்றச் செய்யப் போகிறேன்’ என்றான். அரசரோ, ‘நீயோ சிறுவன்.  இந்த, சிறு தேங்காய் மூடியால் எப்படி பெருங்கடலை வற்றச் செய்ய முடியும்’ என்றார்...சிறுவனோ, ‘உங்கள் சிறிய தலையில் இருக்கும், சிறிய மூளையால் இப்பெரிய பிரபஞ்சத்தின் இரகசியத்தை அறிந்து கொள்ள நீங்கள் முயற்சிக்கும் போது இந்தக் கடலை வற்றச் செய்ய நான் ஏன் முயற்சிக்கக் கூடாது’ என்றான்.  அரசர் திகைத்தார்.  சிறுவன் மறைந்தான். 

சிறுவனாய் வந்தது இறைவனே என்றறிந்தார்.  ஆம்..! பிரபஞ்ச இரகசியங்களை அறிவது, உணர்வது மிகவும் கடினம்....உண்மையான குரு எல்லோரையும் சமமாகவே பாவிப்பார்...காரணம் அவர் பிரம்மத்தை உணர்ந்தவர்... எல்லா மதங்களும் ஒரே பிரம்மத்தின் வித்தியாசமான வெளிப்பாடுகளே என்று அவருக்குத் தெரியும்.  ஆம் பிரம்மத்தை உணர்பவரே ஆன்மீக குருவாக தகுதி உடையவர்..

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

எங்கும் நிறைந்திருக்கும் பிரபஞ்ச பேராற்றல்.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏

எங்கும் நிறைந்திருக்கும் பிரபஞ்ச பேராற்றல். பிரபஞ்ச ஆற்றல் என்பது ஏதோ ஒரு விசித்திரமான, அதிசயமான, நமக்குத் தொடர்பில்லாத ஆற்றலோ சக்தியோ அல்ல. இயற்கையின் அத்தனை படைப்புகளும், உயிரினங்களும், உயிரற்றவையும், பிரபஞ்ச ஆற்றலின் பரிமாணமாகவும் வடிவமாகவும் இருக்கின்றன. நீங்களும், நானும், மற்ற உயிரினங்களும், உருவாக காரணமாக இருந்த சக்தி அது....

பிரபஞ்ச ஆற்றலானது, தான் இயங்கும் இடத்துக்கும் நோக்கத்துக்கும் தக்கவாறு உருவமும், செயலும், தன்மையும், ஆற்றலும் அமையப்பெறுகிறது...“இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்பாக இறைவனையன்றி எதுவுமே இல்லாதிருந்ததால், ஏதோ ஒன்றை எடுத்து இறைவன் அனைத்தையும் படைத்திருக்கிறான் என்பதல்ல. இறைவன் தன் சுயத்திலிருந்து அனைத்தையும் படைத்திருக்கிறான். அதனால் நாம் காணும் அனைத்தும் இறைவனின் மாறுபட்ட உருவங்களாக இருக்கின்றன” 

இறைவன்  கூறுவதைப் போன்று இந்த பூமியில் எந்த ஒரு படைப்பு உருவானாலும், அந்த படைப்பின் அடிப்படை, பிரபஞ்ச ஆற்றலாக இருப்பதினால், நாம் காணும் அனைத்தும் பிரபஞ்ச ஆற்றலின் மறு உருவமாகவே இருக்கின்றன. எளிமையாகச் சொல்வதானால் கண்ணுக்குத் தெரியாத ஆற்றல் கண்களால் காணக்கூடிய மனிதனாகவும், விலங்குகளாகவும், தாவரங்களாகவும், கருவிகளாகவும், பொருட்களாகவும் பரிமாணம் அடைந்திருக்கிறது.

டார்ச்லைட் வெளிச்சத்தின் மீது மனிதர்களின் கையை நெருக்கமாக காட்டினால், டார்ச்லைட் வெளிச்சம் கையின் மறுபக்கம் தெரியும். இதற்குக் காரணம் மனித உடலானது திடமான அமைப்பைக் கொண்ட உருவமல்ல, பல கோடி நுண்ணிய செல்களின் கோர்வைதான் மனித உடல்...மனித உடலின் செல்கள் உருவாக அடிப்படை ஆதாரமாக இருந்தது பிரபஞ்ச ஆற்றல்..

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏.

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...