ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

சனி, டிசம்பர் 16, 2023

விதியும் மதியும் யாருக்கு...!?!?

 

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

விதியும் மதியும் யாருக்கு...!?!?

" விதிமதி மூலம் விவேகம் இலார்க்கே

விதிமதி வெல்லும் விவாதம்  விதிமதிகட்கு

ஓர் முதலாம் தன்னை  உணர்ந்தர் அவை  தணந்தார்

சார்வரோ பின்னுமவை சாற்று..! "

பொருள் :... விதி மதிகள் என்னும் இரண்டுக்கும் ஆதாரமாயுள்ள அகங்காரத்தின் உண்மையை அறியாத அஞ்ஞானிகளுக்கு விதியை மதி வெல்லுமா, மதியை விதி வெல்லுமா என்ற வாத விவாதங்கள் தோன்றும். விதி மதிகளாகிய இரண்டுக்கும் ஒரே அடிப்படையான அகந்தையின் ஆதார உண்மையாகிய தனது ஞான சொரூபத்தை உணர்ந்தவர் அந்த விதி மதியென்ற இரண்டையும் ஒழித்தவராவர். அவர்கள் மீண்டும் விதி மதிகளாகிய அவற்றைச் சார்ந்து பாதிக்கப்படுவார்களோ..சொல்...!?

சாதாரணமாக விதி என்பதை ஈஸ்வர நியதி என்றும், மதி என்பது நமது முயற்சியால் ஆவது என்றும் சொல்வார்கள். சிலர் இரண்டுமே இறைவனின் சித்தப்படி நடக்கிறது என்று கொள்வர். மற்றவர்களோ மதி என்பதை நாம் நினைத்தபடி செய்வதால் அடைவது என்றும் அதற்குக் காரணம் நாமே என்றும் கொள்வர். ஆனால் தாம் நினைத்தபடி நடக்கவில்லை என்றால் சிலர் அது விதியின் சதி என்று அலுத்துக் கொள்வர். எப்படிப் பார்த்தாலும் விதி-மதி என்ற இரண்டுமே காரணம்-விளைவு (cause and effect) என்ற நியதிக்குள் கொண்டு வரப்படுவது என்று தெரிகிறது. அதாவது நாம் தற்போது நினைத்துச் செய்வதால் விளைவது என்றும் முன்னர் செய்த வினையால் விளைவது என்றும் இவைகளுக்கு காரண கர்த்தாவாக நாமோ, இறைவனோ இருக்கிறோம் என்றும் கொள்ளப்படுகிறது.  

கூர்ந்து கவனித்தால், விதி-மதி என்ற இரண்டுக்குமே மூலமாக நமது தேக-ஆத்ம பாவனையைத்தான் சொல்ல முடியும். ஏனென்றால் நாம் உடம்பு என்று கொள்ளும் போதுதான் நமக்கு ஆன்ம சிந்தனை வேண்டும் என்று தோன்றுகிறது. அப்போதுதான் மற்றவர்களை உள்ளடக்கிய உலகம் தெரிகிறது. அந்த நிலையில்தான் நமது முயற்சி, நமது செயல், அதன் விளைவுகள் என்றெல்லாம் தெரிகிறது. அங்குதான் விதியால் வந்தது, மதியால் விளைந்தது, விதி மதியை வெல்லுமா அல்லது மதி விதியை வசப்படுத்துகிறதா என்ற வாதங்களும் கிளைத்து எழுகின்றன.ஆக இவை அனைத்துக்கும் காரணமான “நான்” என்னும் அகந்தை என்ன என்று அதைத் தேடி அதன் மூலமான ஞான சொரூபத்தை உணர்ந்தவர்கள், விதி-மதி என்று ஏதும் தனியாக இல்லை என்றறிந்து அவை இரண்டையும் அழித்தவர்கள் ஆவர்...ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

எத்தனை முறை என்னை நோக்கி எத்தனை கேள்விகளை எத்தனை பேர் கேட்டாலும் இதுதான் என் மொழி ...!



ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

எத்தனை முறை என்னை நோக்கி எத்தனை கேள்விகளை எத்தனை பேர் கேட்டாலும் இதுதான் என் மொழி ...!

"நானே அனைவருடைய அந்தரங்க ஆட்சியாளனாக இருதயத்தில் அமர்ந்துஇருக்கிறேன். இந்த உலகின் கண் அசையும் அசைவற்ற சர்வ ஜீவராசிகளையும் நானே அரைவணைக்கிறேன். இப்பிரபஞ்சமென்னும் தோற்றத்தை நானே கட்டுபடுத்துபவன்,ஆட்டுவிப்பவன்..எல்லா வர்க்கங்களின் மூலமாதா நானே.நானே எல்லா உணர்ச்சிகளையும் உந்துபவன்,படைப்பவன், காப்பவன்,அழிப்பவனுமாம்"

ஸ்ரீசாயீ சச்சரித்திரம்..🙏🏻

ஓம் ஶ்ரீ சாயீராம்....🙏🏻🙏🏻

அஞ்ஞான இருளை அழித்து ஞானோதயமாகிய ஆத்மா என்னும் சூரியன் உதிப்பதும், மறைவதும் என்றில்லாது எப்போதும் பிரகாசித்துக் கொண்டிருக்கும்.


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻🙏🏻

இதயவெளி தோன்றி இருளையழி ஞான

உதயரவி ஆன்மா ஒளிரும் – நிதமுமே

எல்லாவற்றும் பரவி எல்லாமும் தாங்கி நின்(று)

றெல்லாம் ஒளிர்விக்கும் எண்..!

அஞ்ஞான இருளை அழித்து ஞானோதயமாகிய ஆத்மா என்னும் சூரியன் உதிப்பதும், மறைவதும் என்றில்லாது எப்போதும் பிரகாசித்துக் கொண்டிருக்கும். அது எல்லாப் பொருட்களிலும் வியாபித்து, எல்லாவற்றிற்கும் ஆதாரமாக நின்று, எல்லாவற்றையும் தனது ஒளியினால் ஒளிர்விக்கச் செய்யும் என்று எண்ணுவாய்.

நமது ஊனக்கண்ணைப் பொருத்தவரை நாம் காண்பனவற்றுள் சூரியன் ஒன்றே தானே ஒளிர்வதாகவும், அதிலும் மிகப் பிரகாசமானதாகவும் இருப்பதால் தான்  ஆன்மாவிற்கு அதை ஒப்பிட்டுச் சொல்லப்படுகிறது. நமது உண்மை நிலையைப் பற்றி குரு மூலமோ, வேறு வழிகளிலோ அறிந்த ஒருவன் அதை உணர்ந்துக் கொள்ள, சாதாரணமாக வெளியுலகை நோக்கியுள்ள தனது பார்வையை உள்முகமாகத் திருப்பி, தியானம் செய்து அதனால் இடைவிடாது இருக்கும் உள்ளொளியை அனுபவத்தில் உணர்வதே ஆன்ம போதம் எனப்படுகிறது.

சூரியன் உதித்ததும் வேறு எந்த முயற்சியும் இல்லாது இருள் தானே அகலுவது போல ஆன்மாவைப் பற்றிய ஞானம் பிறந்ததும் நம் உண்மை நிலை பற்றி நமக்கு முன்பு இருந்த அறியாமையும் தானே விலகுகிறது. ஆனால் சூரியனோ காலத்திற்குக் கட்டுப்பட்டு காலையில் உதிப்பதும், மாலையில் மறைவதுமாக இருக்க, அனைத்தையும் ஒளிர்விக்கும் ஆன்மாவைப் பற்றிய போதமோ எப்போது உதிக்கிறதோ அதன்பின் அதற்கு அழிவோ, மறைவோ இல்லாது எப்போதும் நின்று நிலைத்து நிற்கிறது. எப்படி சூரியனின் ஒளியில் நாம் உலகில் உள்ள அனைத்தையும் பார்க்கிறோமோ, அதே போல ஆன்மா தரும் ஒளியினாலேயே நமது அனுபவங்கள் எல்லாமே நிகழ்கின்றன. ஆன்மாவின் தன்மைகளே உலகில் உள்ள பொருட்கள் எல்லாவற்றிலும் வியாபித்து நமக்கு வெவ்வேறு அனுபவங்களைத் தருகின்றன...ஆனால் அதை அறியாத போது நாம் அவைகள் எல்லாம் அந்தந்தப் பொருட்களின் தன்மைகள் என்று தவறாக எண்ணுகிறோம். அந்த அறியாமையைப் போக்குவதே ஆன்ம போதம்.

அதனால் ஆன்மாவே தனது ஒளியால் அனைத்துப் பொருட்களையும் காட்டுவதோடு அல்லாமல், அனைத்திற்கும் ஆதாரமாகவும் அமைகிறது. அது இல்லாமல் அனுபவிப்பவன் இல்லை என்பதாலும், அனுபவிப்பவன் இல்லாமல் அனுபவிக்கப்படும் எதுவும் இல்லை என்பதாலும் அதுவே அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கிறது...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

வியாழன், டிசம்பர் 14, 2023

எதை எதையோ கேட்டும்.,.எதை எதையோ கண்டும் ..எதை எதையோ பேசியும் என்னை சங்கடபடுத்தாதீர்கள் என் மொழி ஒன்றுதான் அது இதுவே...!


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

எதை எதையோ கேட்டும்.,.எதை எதையோ  கண்டும் ..எதை எதையோ பேசியும் என்னை சங்கடபடுத்தாதீர்கள் என் மொழி ஒன்றுதான் அது இதுவே...!

ஆயிரக்கணக்கான மக்களைக் காப்பதற்காக, நான் ஆயிரக்கணக்கான மைல்கள் தூரம் செல்ல வேண்டியவனாக உள்ளேன்.என்னை நினைவில் கொண்டிருப்பவனை நான் எப்போதும் நினைத்துக்கொண்டு இருக்கிறேன்...எனக்கு எவ்வித வாகனமோ, வண்டியோ, இரயிலோ, அல்லது விமானமோ தேவையில்லை...என்னை எவன் அன்புடன் கூப்பிடுகிறானோ அவனிடம்ஓடிச்சென்று நானே வெளிப்படையாகக் கலந்துக் கொள்கிறேன் "...பாபா தமது உடலில் இருந்த போதும், உண்மையில் அவர் உடலில்கட்டுண்டு இருக்கவில்லை. அவர் எல்லா இடங்களிலும் எல்லா உருவிலும் இருந்தார். பாபா அன்றும் இன்றும் ஜீவுடனேயே விளங்குகிறார்...ஆனால் நம்மிலிருந்து முற்றிலும் வேறுபட்ட நிலையில்தான்....இன்றும்கூட அவர் மீண்டும் தமது பக்தர்களுக்கு முன் தோன்ற முடியும் ; தோன்றுகிறார்."

"ஸ்ரீசாயீ சச்சரித்திரம்..🙏🏻

உனக்கான பாதையை நோக்கி ஒரு பயணம் ...!


ஓம் ஶ்ரீ சாலயீநாதாய நமஹ..🙏🙏

ஒருவருக்கு  சொரூப ஞானம் வந்ததும் சீவனுக்கு தன்னையும் உலகையும் பற்றிய குழப்பம் நீங்கிவிடும்...ஜீவன் எனத் தன்னைப் பாவிக்கும் ஒருவன், இப்பரந்த உலகத்தில் தான் மற்ற எல்லோரையும் போல இன்னுமொருவன் என்றே நினைக்கிறான். “நான்என்று ஒருவன்” என்ற அந்த எண்ணத்தில் இருக்கும் அவனுக்கு, “தனக்கு” என்று சில பொருட்களும் சில மனிதர்களும் இருப்பதாகவும் எண்ணங்கள் வளர்கின்றன. இந்த எண்ணம் அவனுக்கு எப்படி வந்தது என்று கேட்டால் அவனுக்கே அது புரியாது. அவனைப் போலவே மற்றவர்களும் “தான் – தனது” என்று இருப்பதால் அவனுக்கு தனக்கு உள்ள அந்த எண்ணத்தைப் பற்றிய சந்தேகமும் வருவதில்லை. இதற்கெல்லாம் காரணம் அவனது உண்மை நிலையை அவன் அறியாமல் இருப்பதே. இந்த அறியாமை தான் அவனது இருள்...

வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் அவனுக்கு தனது நிலையைப் பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயம் வரும்போது, அவனை அதிலிருந்து மீட்பதற்குத் தேவையான சூழ்நிலைகளும் அமைகின்றன. அப்போது அவனுக்குப் பொதுவாக இரண்டு வழிகளே இருக்கின்றன என்று ரமணர் சொல்வார். ஒன்று அவன் தன்னை யார் என்று கேட்டு தன் உண்மை சொரூபம் தெரிந்துகொள்வதற்கு ஞான விசாரம் செய்து தெளிவடைவது. மற்றொன்று தேர்ந்த குருவிடம் தனக்கு வழி காட்டுமாறு வேண்டி அவரைத் தஞ்சம் அடைவது. அப்படி அடைக்கலம் வேண்டிச் சென்றவனின் மனத்தை குரு நிர்மூலம் ஆக்கி அவனது உண்மை சொரூபத்தை அவனுக்குக் காட்டுவார். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரும் அதே போலச் சொல்லி, நரேந்திரர் எப்படி தனது அகங்காரத்தை பூதாகாரமாக்கி பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் தனதாக்கிக்கொண்டார் என்றும், நாக மகாஷயர் எப்படி தனது அகங்காரத்தைச் சுருக்கி தன்னை ஒன்றும் இல்லாமல் செய்துகொண்டார் என்றும் சொல்வார். முன்னது விசாரம் செய்து பிரபஞ்சத்தில் உள்ள எல்லாமே தான் என்று உணர்வது, பின்னது குருவே எல்லாம் என்று அடிபணிந்து தன்னை ஒன்றும் இல்லாமல் ஆக்கிக்கொள்வது.

இந்த இரண்டு வழிகளில் தனக்கு ஒத்துக்கொள்ளும் வழி ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதில் முன்னேறி தனது உண்மை சொரூபத்தை அறிபவனுக்கு, உதிக்கும் சூரியன் முன் இருள் ஓடிப்போய் திசைகள் தானே விளங்குவதுபோல, அதுவரை அவனை ஆட்கொண்டிருந்த அறியாமை தானே விலகும். எல்லாம் அப்போது ஒன்றே என்று தெரியவருவதால் “நான்-எனக்கு” என்ற எண்ணங்களும் அங்கு நிலைப்பதில்லை..

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏

புதன், டிசம்பர் 13, 2023

(தன்னை நன்கு அறிந்த விஞ்ஞானியான யோகி தன்னுடன் ஒன்றி இணைந்து உலகில் காணப்படும் எல்லாம் தன்னில் இருப்பதையும், ஒன்றேயான ஆன்மாவாகும் தானே எல்லாமாய் இருப்பதையும் தனது ஞானக் கண்ணினால் காண்பான் என்பதை உறுதியாக அறிந்துகொள்.)

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

தன்னை அறிந்த விஞ்ஞானியான யோகி தன்னுடன் ஒன்றி இணைந்து உலகில் காணப்படும் எல்லாம் தன்னில் இருப்பதையும், ஒன்றேயான ஆன்மாவாகும் தானே எல்லாமாய் இருப்பதையும் தனது ஞானக் கண்ணினால் காண்பான் என்பதை உறுதியாக அறிந்துகொள்.

இங்கு விஞ்ஞானி என்ற சொல் அனுபவத்தில் காண்பவன் என்ற பொருளைக் குறிக்கிறது. எப்போது ஒருவன் ஆன்ம விசாரம் செய்து அனுபவத்தில் தன்னைத்தான் நன்கு உணர்கிறானோ அப்போதே அவன் யோகியாகிறான். அவனுக்குத் தான் காணும் உலகில் உள்ள எல்லாமுமே, தான் காண்பதால், தன்னுள்ளே இருப்பதாகவும் தெரிகிறது. தன்னிருப்பைச் சார்ந்தே அனைத்தும் காணப்படுவதால் காணப்படும் அனைத்தும் தன்னைப் போலவே ஆன்ம மயமாய் இருப்பதாகவும் உணர்கிறான். இதுதான் யோகம் என்பதன் பொருளாகும்...

சாதாரணமாக ஒருவன் காண்பது என்றால் அங்கு காண்பவன்-காணப்படுவது-காட்சி என்ற முப்புடிகள் வருகின்றன. அது ஒருவனது ஊனக் கண்ணால் காணும் காட்சி. ஒரு யோகியானவன் எல்லாம் ஒன்றே என்று காண்பது அவனது ஞானக்கண் காட்சி. ஒரு யோகிக்கு அந்த சாதாரண ஊனக்கண் காட்சி கிடையாதா என்று கேட்டால் உண்டு என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அப்படி அவன் பார்க்கும்போது பார்க்கப்படும் பொருளும் ஆன்மாவாகவே அவனுக்குத் தெரியும். அதாவது முற்றும் உணர்ந்த யோகிக்கும் உலகம் உண்டு; ஆனால் அது ஆன்ம வடிவாய்த் தெரியும். அதனாலேயே அவனைப் பொருத்தவரை எல்லோருமே ஞானம் அடைந்தவர்கள்தான்; சிலர் அதை அறிந்தவர்கள், வேறு சிலர் அதை அறியாதவர்கள்.....ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻


சாதாரணப் பார்வையில் எல்லோரும் வேற்றுமையைக் காண்கின்றனர்; யோகியோ அனைத்திலும் ஒற்றுமையைக் காண்கிறான். இந்த இரண்டையும் சம்ஸ்க்ருதத்தில் முறையே “பேத திருஷ்டி” என்றும் “அபேத திருஷ்டி” என்றும் கூறுவார்கள். இங்கு இந்த சித்தர் பாடலை நினைவு கூறுவது நல்லது: “கண்ணும் தானே, காணும் பொருளும் தானே; பேணும் அறமும் தானே, பேசா அனுபூதியும் தானே; எல்லாம் தானே, யாதும் அல்லாதானே”. அதாவது எதுவும் இல்லாதான் யாதுமாகி நிற்கின்றான்.

"அன்புக் குழந்தையே...!


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ பகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

"அன்புக் குழந்தையே...!

உனக்கு வருவதாக நினைக்கிற நன்மையும் தீமையும் நான் உன்னை சரிபடுத்துவதால் வருகிறது என்பதை உணர்ந்துகொள். உன்னை மேம்படுத்தவே, இதை மேற்கொண்டு வருகிறேன். உனது உணர்வு பக்தியாக மாறி என்னையே நீ குலதெய்வமாக வழிபடுவாய்.

ரயிலில் பயணம் செய்பவர்கள், தாம் கொண்டுவந்த எல்லாப் பை மூட்டைகளையும், பாரங்களையும் தலையில் ஏன் சுமக்கவேண்டும். தன்னையும் சேர்த்துப் பாரத்தையும் ரயிலே சுமக்கிறது என்பதை அறிவதுபோல் சாய் அனைத்தையும் நடத்துபவர் என்று அவர் மீது பாரங்களைச் சுமத்துவதல்லவா நியாயம்..! வீணாகச் சுமைகளைத் தலையில் (கவலை) சுமப்பது எதற்கு...?

ஓம் ஸ்ரீ சாயீராம்....🙏🏻🙏🏻

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...