ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

புதன், நவம்பர் 08, 2023

அனைத்தும் பிரம்மமே என்றாலும், உலகின் இயல்பும், பிரம்மத்தின் இயல்பும் வெவ்வேறானது.


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏🙏

பிரமம் உலகில் பிறிதாகும் அந்தப்

பிரமத்தணுவில் பிறிதாய்ப்  பிரமத்திற்கு

அன்னியம் ஏதும் அவிர்ந்தால் அது மித்தை

உன்னுக கானல் நீர் ஒத்து...!

அறியும் பிரம்மம் அறியப்படும் உலகத்திற்கு மாறான இயல்பு உடையது. பிரம்மத்திற்கு அப்பாற்பட்டு வேறெந்தப் பொருளும் இல்லை. பிரம்மத்திற்கு அன்னியமாக வேறெதுவும் தோன்றினால், அது உண்மையில் இல்லாததாயினும் காட்சிக்குத் தோன்றும் கானல் நீர் போன்றதொரு பொய்த் தோற்றம் ஆகும்...எங்கும் எப்போதும் இருப்பது பிரம்மம் என்றால், காணப்படும் உலகப் பொருட்களைக் கொண்டே பிரம்மத்தை அறியலாகாதா என்ற சந்தேகக் கேள்விக்குப் பதில் அளிப்பது போல இந்தச் செய்யுள் விளக்கம் கொடுக்கிறது.

அனைத்தும் பிரம்மமே என்றாலும், உலகின் இயல்பும், பிரம்மத்தின் இயல்பும் வெவ்வேறானது....உலகம் நிலையற்றது; வரும், போகும் இயல்புடையது. அதனால்தான் நமது விழிப்பு நிலையில் காணப்படும் உலகம் ஆழ்ந்த உறக்கத்தில் அறியப்படுவதில்லை. நமது கனவிலோ நாம் வேறோர் உலகத்தையே உருவாக்கிக் கொள்கிறோம். உலகின் நிலை இப்படி இருக்க, பிரம்மமோ எப்போதும் உள்ளது; நிலையானது. உலகம் ஓர் அறிவற்ற ஜடம்; பிரம்மமோ அறிவுமயமானது. உலகம் துன்ப மயமானது. பிரம்மமோ ஆனந்தமயமானது. அதனால் உலகம் பிரம்மம் அல்ல. நாம் முன்பு கண்ட அனலில் இட்ட ஓர் இரும்புக் குண்டு அனலின் தன்மையை எடுத்துக்கொள்வது போல, உலகில் உள்ள அனைத்துப் பொருட்களின் உள்ளும், புறமும் பிரம்மம் வியாபித்து இருப்பதால், அவைகள் பிரம்மத்தின் தன்மைகளை எடுத்துக் கொள்கின்றன....இப்படியாக பிரம்மத்திற்கு அப்பாற்பட்டு எந்தப் பொருளும் இல்லை என்பதால், பிரம்மத்தை விடுத்து உலகத்தின் உண்மையை அறியமுடியாது. அதனால் உலகில் உள்ளவைகளைக் கொண்டு பிரம்மத்தை அறியமுடியாது...

மேலும் பிரம்மத்திற்கு அன்னியமாக உலகம் இருப்பதாகத் தோன்றினால், அது இருப்பது போலத் தோன்றும் கானல் நீர் போன்றதொரு பொய்க் காட்சியே. உண்மையை அறியாதவனுக்கு இல்லாத கானல் நீர் இருப்பதாகத்தான் தோன்றும். உண்மையை அறிய முயற்சிப்பவனுக்கே அது மாயை என விளங்கும்...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஆசைகளைத் துறந்த பின் வாழ்க்கையில் என்ன இன்பம் இருக்கிறது..?


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏🙏

ஆசைகளைத் துறந்த பின் வாழ்க்கையில் என்ன இன்பம் இருக்கிறது..?

மீன் ஒன்றைத் தூக்கிச் சென்ற ஒரு பருந்தை, வேறு சில பருந்துகளும், பல காக்கைகளும் சூழ்ந்து கொண்டு பருந்தைக் கொத்தி, மீனைப் பிடுங்க முயன்றன. அப்பருந்து எப்பக்கம் சென்ற போதிலும்,விடாது அவை கத்திக்கொண்டு பின் தொடர்ந்தன.. தொந்தரவு பொறுக்காது மீனைப் போட்டுவிடும்படி அதனைச் செய்தன. உடனே மற்றொரு பருந்து அம்மீனைக் கவ்விக் கொள்ள, அவையெல்லாம் இப்பொழுது அதைப் பின்தொடர்ந்தன. முந்தைய பருந்து, தொந்தரவு ஒழிந்து, ஒரு மரத்தின் கிளையில் அமைதியாக உட்கார்ந்தது. ஒருவன் தனக்குள்ள உபாதிகளை விட்ட பிறகே அவனுக்கு இவ்வுலகில் மன அமைதி உண்டாகும். புரிகிறதா..? ஆகவே பற்றின்மையை வளர்த்துக் கொண்டு தேவையற்ற ஆவலைக் குறைத்தால் மனநிறைவும் இயல் ஆனந்தமும் தானாக வெளிப்படும் தானே....ஓம் ஶ்ரீ சாயீராம்....🙏🙏


செவ்வாய், நவம்பர் 07, 2023

பகவான் சொல்...!

 


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏

பகவான் சொல்...!

‘எவன் எல்லாப் பொருள்களிலும் ஆத்மாவையும், ஆத்மாவில் எல்லாப் பொருள்களையும் பார்க்கிறானோ அவனே காட்சியுடையான்’ என்கிறார்...நீயும் கடவுள், நீ செய்யும் செயல்களெல்லாம் கடவுளுடைய செயல்கள்...நீங்கள்  பந்தத்தில் பிறப்பதும் கடவுளுடைய செயல்...மேன்மேலும் பல தளைகளை உனக்கு நீயே பூட்டிக் கொள்வதும் கடவுளுடைய செயல். நீ முக்தி பெறுவதும் கடவுளுடைய செயல்...

ஆனால் நான் எதற்காக தளை நீங்கும்படி பாடுபடவேண்டும்..? எல்லாம் கடவுளுடைய செய்கையாய் இருக்கும் போது முக்தியடையும் படி நான் ஏன் முயற்சி செய்ய வேண்டும்..?’ என்று ஒருவன் கேட்பானாயின், அதற்கு நாம் கேட்கிறோம்,  ‘முக்தியாவது யாது..?’

எல்லாத் துயரங்களும் எல்லா அம்சங்களும் எல்லாக் கவலைகளும் நீங்கி நிற்கும் நிலையே முக்தி. அதனை எய்த வேண்டுமென்ற விருப்பம் உனக்குண்டாயின், நீ அதற்குரிய முயற்சி செய். இல்லாவிட்டால், துன்பங்களிலே கிடந்து ஓயாமல் உழன்று கொண்டிரு. உன்னை யார் தடுக்கிறார்கள்..? ஆனால், நீ எவ்விதச் செய்கை செய்த போதிலும், அது உன்னுடைய செய்கையில்லை. கடவுளுடைய செய்கை என்பதை அறிந்துக் கொண்டு செய். அதனால் உனக்கு நன்மை விளையும் என்று சாஸ்திரம் சொல்லுகிறது.

🙏. ‘ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்’ 🙏என்பது ஸநாதன தர்மத்தின் சித்தாந்தம்... எல்லாம் கடவுள் மயம், எல்லாத் தோற்றங்களும், எல்லா வடிவங்களும், எல்லா உருவங்களும், எல்லாக் காட்சிகளும், எல்லாக் கோலங்களும், எல்லா நிலைமைகளும், எல்லா உயிர்களும், எல்லாப் பொருள்களும், எல்லா சக்திகளும், எல்லா நிகழ்ச்சிகளும், எல்லாச் செயல்களும் – எல்லாம் ஈசன் மயம். (ஆதலால், எல்லாம் ஒன்றுக்கொன்று சமானம்.)  ‘ஈசாவஸ்தம் இதன் ஸர்வம் யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத்’ என்று ஈசாவாஸ்யோப நிஷத் சொல்லுகிறது. அதாவது  ‘இவ்வுலகத்தில் நிகழ்வது யாதாயினும் அது சிவம் மயமானது’ என்று பொருள்படும்....

இந்தக் கருத்தையே ஸ்ரீ கிருஷ்ணன் பகவத் கீதையில்,  ‘இவ்வுலகனைத்திலும் நிரம்பிக் கிடக்கும் கடவுள் அழிவில்லாதது என்று உணர்’ என்று சொல்லுகிறார்..

ஓம் நமசிவாய..🙏

ஓம் ஸ்ரீ சாயீராம்.🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏.

விதை தூங்காது....!


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ....🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏

விதை தூங்காது....!

என்னுடைய மனதைப் போட்டு குழப்பும் பிரச்சனை விரைவில் சரியாகிவிடும் என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லிவிட்டு. வேலையைப் பாருங்கள்....விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்படப் போகும் அதிசயங்களுக்கு நன்றி என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லிக் கொண்டே இருந்தால் போதும்...அது எப்படி சரி ஆகும், சரி ஆகும் வழிகளைப் பற்றியெல்லாம் நீங்கள் ஆராய வேண்டாம்...நமக்கு ஒரு சில வழிகள் தான் தெரியும், ஆனால் பிரபஞ்சத்திற்கு ஆயிரம் வழிகள் இருக்கும். அது எப்படியும் சரி செய்து விடும்...நம் வார்த்தைகள் மற்றும் எண்ணங்கள் பிரபஞ்சத்திற்கு கட்டளைகளாக அனுப்பப்பட்டு எல்லாவற்றையும் விரைவில் சரி செய்துவிடும்…நம்மைச் சுற்றி எதிராக நடப்பதைப் பற்றி கவலைப் படவேண்டாம்...நமக்கு எதிராக எத்தனை பேர் செயல்படுகிறார்கள் என்பதைப் பற்றி பொருட்படுத்த வேண்டாம்...பயம் மற்றும் குழப்பங்கள் வரும் போது பதட்டமில்லாமல் ஆழ்ந்த அமைதியாக இருக்கக் கற்று கொள்ளுங்கள்...நான் மிகுந்த நம்பிக்கையாக இருக்கிறேன், விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்படப் போகும் எல்லா அதிசயங்களுக்கும் நன்றி, பிரபஞ்சத்திற்கும் நன்றி என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லிக் கொண்டே இருங்கள். நிறுத்தாமல் சொல்லிக் கொண்டே இருங்கள்....நமது வார்த்தைகள், சந்தோஷமான மற்றும் நம்பிக்கையான உணர்வுகள் மற்றும் எண்ணங்கள் போதும் எல்லாவற்றையும் சரி செய்துவிடும்...நமது நேர்மறையான சக்தி இந்த பிரபஞ்சத்தைக் காட்டிலும் சக்தி வாய்ந்தது என்பதை மட்டும் உணருங்கள்...

விதைத்தவன் தூங்கி விடுவான் விதை தூங்காது .எண்ணியவன் தூங்கி விடுவான் எண்ணம் தூங்காது ...எண்ணம் போல் வாழ்க்கை...எண்ணுவதெல்லாம் உயர்வுள்ளல்...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏🙏

சரணாகதி என்றால் என்ன என்பதை மீண்டும் ஒரு முறை மிகவும் எளிய முறையில் விளக்குகிறேன். நான் ஒரு உதாரணத்தை உங்களுக்கு கொடுக்கிறேன்.


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏

சரணாகதி என்றால் என்ன என்பதை மீண்டும் ஒரு முறை மிகவும் எளிய முறையில் விளக்குகிறேன்.....நான் ஒரு உதாரணத்தை உங்களுக்கு கொடுக்கிறேன்.....இரண்டு நபர்கள் இருக்கிறார்கள். முதல் நபர் நன்றாக உழைத்து சம்பாதித்து பணம்வைத்துக்கொண்டிருக்கிறார். இரண்டாவது நபர் ஒரு பரம ஏழை... பிச்சைக்காரர் என்று கூட வைத்து கொள்ளலாம்...இருவரும் ஒரு பெரிய கடைக்கு சாப்பிடுவதற்கு தின்பண்டங்கள் வாங்க செல்கிறார்கள்...முதல் நபர்  வாங்கிய பொருளுக்கு பணம் கொடுக்க வேண்டும்...அவர் பணம் கொடுக்க முயலும் பொழுது தன்னிடம் ஒரு நூறு ரூபாய் குறைவாக இருப்பதை உணர்ந்தார். இப்பொழுது முதல் நபர்   நூறு ரூபாய் குறைவாக இருப்பதாக கடைக்காரரிடம் சொல்ல முடியாமல் சுய கௌரவம் தடுக்கிறது.  அதனால் அவரால் தனக்கு வேண்டிய பொருளை வாங்க முடியாமல் திரும்புகிறார். 

இப்பொழுது இரண்டாவது நபர் பிச்சைக்காரர் கடைக்காரரிடம் கேட்கிறார். எப்படி கேட்கிறார். “ஐயா என்னிடம் பணம் இல்லை...சம்பாதிக்கும் திறமையும் இல்லை. பசி காதை அடைக்கிறது.. கொஞ்சம் ஏதாவது சாப்பிட கொடுங்கள் என்று பிச்சை கேட்டால் கடைக்காரர் எதையாவது எடுத்து இரண்டாவது நபர் பசியாற கொடுப்பார்...மேலும் அந்த பிச்சைகாரருக்கு ஏதாவது வேலையோ அல்லது வேறு ஒரு நல்ல வழியையோ சொல்லுவார்...

இப்பொழுது புரிகிறதா..!

நம்முடைய சுய கௌரவத்தை களைந்து இயலாமையை ஏற்றுக் கொண்டு இறைவனிடம் கையை உயர்த்தி என்னை ஏற்றுக்கொள் என்று கேட்டால் நிச்சயம் ஏற்றுக்கொள்வான்..இதைத் தான் சரணாகதி என்று சொல்கிறோம்.

சரணாகதியின் மேலும் ஒரு முக்கிய அம்சம்.

நாம் இறக்கும் தருவாயில் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றோமோ அதுவாகவே பிறப்போம் என்பது வேதத்தில்  கூறப்பட்டுள்ள உண்மை...இது பல புராணங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது... பொதுவாக மரணத் தருவாயில் நம்முடைய உபாதைகளும் கர்மாக்களும் நம்மை இறைவனை நினைக்க விடாது...

அப்பொழுது நம்மால்  இறைவனை அடைவது சாத்தியம்  இல்லாமல்  போகும். சரணாகதி செய்துவிட்டால் நாம்  மறந்தால் கூட  நாம் இறக்கும் தருவாயில் நம்மை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு நம்மை கரையேற்றி விடுவான் நாராயணன்....இது ஒரு சரணாகதியின் முக்கிய அம்சம் ஆகும்...இதனை சிந்தித்தால் சந்திக்கலாம் மெய்ஞானத்தை....

ஓம் ஸ்ரீ சாயீராம்....🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்.....🙏🙏🙏

திங்கள், நவம்பர் 06, 2023

உங்களிடம் ஒரு கேள்வி ...?(ஒவ்வொரு தனி மனிதனுக்கும் )

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ....🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏

இறைவன் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறான்...? (ஒவ்வொரு தனி மனிதனுக்கும் )....நீங்கள் யாராவது ஒருவருக்கு ஒரு பொருளை பயன்படுத்துவதற்கு கொடுத்தால் அந்த பொருளை அந்த நபர் பயன்படுத்தி விட்டு கொடுக்கும் பொழுது  அந்த பொருள் நீங்கள் கொடுத்தது போலவே நன்றாக இருந்தால் நீங்கள் அப்பொழுது என்ன நினைப்பீர்கள் ..?

அந்த நபர் மீது உங்களுக்கு ஒரு நம்பிக்கை வரும் அந்த நம்பிக்கை எப்படி என்றால் அந்த நபருக்கு நீங்கள் திரும்பவும் அவர் கேட்கும்  பொருளை கொடுக்க முன்வருவீர்கள் அப்படிதானே..? அதே அந்த நபர் உங்கள் பொருளை பழுதாக்கியோ அல்லது சேதபடுத்தியோ உங்களிடம் திரும்ப கொடுத்தால் ..உங்களுக்கு அவர் மீது என்ன எண்ணம் தோன்றும்..?

அந்த நபர் திரும்ப எத்தனை முறை கேட்டாலும் நீங்கள் எந்த பொருளையும் கொடுக்க மறுப்பீர்கள் அப்படிதானே..?மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலேயே இப்படிப்பட்ட நம்பிக்கை சார்ந்த செயலாற்றம் இருக்கும் பொழுது நாம் இறைவனிடம் (பிரபஞ்சத்திடம்) கேட்கும் எந்த ஒரு பிரார்த்ததனைக்கும் எவ்வளவு நம்பிக்கை சார்ந்த செயல்முறை தேவை...!!

பிரபஞ்சம் உன்னிடம் கொடுத்த காற்று, நீர்,உணவு,உணர்ச்சி ,நிலம் ஆகியவற்றை அது கொடுத்தது போலவே அவற்றை அதன் தன்மை மாறாமல் நீ இதுவரை கொடுத்திருக்கிறாயா..! அல்லது கொடுக்க முயற்சியாவது எடுத்திருக்கிறாயா..!?தனித் தனியே ஒவ்வொரு  மனிதனுக்கும் இந்த பிரபஞ்சம் மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும் பயன்படுத்த கொடுத்தது...ஆனால் நீ அவற்றையெல்லாம் எப்படி திரும்ப  கொடுத்திருக்கிறாய்..?

கொஞ்சம் சிந்தித்து பார்..?கொடுத்ததை எல்லாம் சேதபடுத்தி வைத்திருக்கிறாய் அதனால் தான் உன் பிராத்தனையோ அல்லது வேண்டுதலோ இறைவனிடம் ஏற்றுக் கொள்ள மறுக்கபடுகிறது....உன் சுயசிந்தனையில் உனக்கு என்றைக்கு இறைவன் கொடுத்ததை நாம் சரியாக தான் பயன்படுத்தியிருக்கிறோம் என்று உணர்கிறாயோ அன்று உனக்கு நீ கேட்கும் பதில் கிடைக்கும்..இதுவும் நம்பிக்கை சார்ந்ததே.... அந்த நம்பிக்கையே இறைநம்பிக்கை...!

உங்கள் சுற்றுசூழல் நன்றாக இருந்தால் நீங்களும் நோய் நொடி இல்லாமல் நன்றாக இருப்பீர்கள்.நீங்கள் உண்ணும் உணவையும் , அருந்தும் நீரையும்,சுவாசிக்கும் காற்றையும் சுத்தமாக இருக்க கவனியுங்கள்.. ..சேதபடுத்திவிட்டு திரும்பவும் உங்களுக்கு புது வாழ்க்கை  கேட்டால் படைப்பின் சக்தி எப்படி கொடுக்கும் ...?!

மீண்டும் பேசுகிறேன்...!? இன்னும் பேசுவேன் ஏனென்றால் பொருள் என்னுடையது...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏

ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ர தாரகம் ந இமா வித்யுதோ பாந்தி குதோயம் அக்னி தமேவ பாந்தம் அநுபாதி ஸர்வம் தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி..!



ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்..🙏🙏🙏

ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ர தாரகம் ந இமா வித்யுதோ பாந்தி குதோயம் அக்னிதமேவ பாந்தம் அநுபாதி ஸர்வம் தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி..!

இதன் பொருள் : அங்கே சூரியன் ஒளிர்வதில்லை... சந்திரனும் நக்ஷத்திரங்களும் ஒளிர்வதில்லை; மின்னல் ஒளிர்வதில்லை. இந்த அக்னி எப்படி ஒளிர முடியும்..? ஒளிர்கின்ற ஆன்மாவை அனுசரித்தே மற்ற அனைத்தும் ஒளிர்கின்றன. அனைத்தும் அதன் ஒளியால் ஒளிர்கின்றன...ஏதோ கோவிலுக்குச் சென்றோம், அங்கு கிடைத்த தரிசனத்தை ரசித்தோம், பிரசாதத்தைப் பெற்று மகிழ்ந்தோம், வீடு திரும்பினோம் என்று நமது தினசரி நடவடிக்கைகளில் அதையும் பத்தோடு பதினொன்றாக சேர்த்துவிட்டு வெறுமனே இருந்து விடக் கூடாது. கோவிலின் தத்துவார்த்த அமைப்புகளைப் பற்றியும், அங்கு வாழ்க்கைக்கு உதவும் தத்துவங்களை உணர நடக்கும் கிரியைகளின் அர்த்தங்களையும் நன்கு மனதில் பதித்துக்கொள்ள வேண்டும்.

இந்த ஆரத்தியின் விசேஷம் என்னவென்றால், “ஐயா, நீ பார்த்துக்கொண்டிருப்பது சூரிய ஒளியில்லை, சந்திர, நக்ஷத்திர, மின்னலின் ஒளியுமில்லை. நீ பார்ப்பது ஒரு அக்னித் துண்டத்தின் ஒளிதான். அது தானாகவே ஒளிர்கின்றது என்று நீ நினைத்துக் கொண்டிருந்தால் அதுவும் உண்மையில்லை. நீ பார்ப்பதனால் அது அங்கு அப்படி இருக்கிறது. பார்த்துக்கொண்டிருக்கும் நீ வெறும் உடலா..? நீ இருப்பதாக நினைக்கும் இந்த உலகம் உண்மையா...? உடல் உணர்வு இல்லாது நீ ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது எங்கே இருந்தது உலகம்..? அதனால் உன் உடல் இல்லாது உன் உலகமும் இல்லை. உனக்கு உடல் உணர்வு வரும்போது, நீ வெறும் தூலமாகிய உடல்தானா..? அப்போது சூட்சமமான மனம், புத்தி, மற்றும் அவைகளிலும் அதிசூட்சமமான நான் எனும் எண்ணமாகிய அகங்காரம் இவைகள் இல்லையா..? ஆக அவை இல்லாமல் உடல் எங்கே இருக்கிறது..? அப்போது அந்த நான் என்னும் அதிசூட்சமமான எண்ணம் வருவதற்கு முன்பேயே, நீ உன்னை நான் என்று உணர்வது இல்லையா..? அந்த உணர்வே பிரம்மம், ‘அதுவே நீ’. நீ அதுவாக இருப்பதாலேயே எதனையும் காண முடிகிறது. அந்த உனது உள்ளொளியை வேறெதுவும் ஒளிர்விக்க முடியாது” என்ற உண்மையை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஆரத்தியைப் பார்க்கும் நம்மில் எத்தனை பேர் இந்தக் கருத்தை உணர்கின்றோம்..? இந்த சத்-சித்-ஆனந்த மய உண்மையை விடுத்து, அதனை நமக்குக் காட்ட வந்துள்ள மாயையாகிய நாம ரூபத்தில் அல்லவா மயங்கி நிற்கின்றோம்..!இதையே தான் ரமணர் “காணும் தனை விட்டுத் தான் கடவுளைக் காணல், காணும் மனோமயமாம் காட்சி..தனைக் காணும் அவன்தான் கடவுள் கண்டானாம்” என்று சொன்னார்...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

ஞாயிறு, நவம்பர் 05, 2023

நான் ஒளி..காண்பதும் நானே காண வைப்பதும் நானே..!



ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏

நான் ஒளி..காண்பதும் நானே... காண வைப்பதும் நானே...🙏

எதன் ஒளியினால் ஒளிருமே இரவி யாதி எதனை அவை ஒளிர்க்க வேலாது  எதனாலே இந்த உலகெல்லாம் இலகும் அதுதானே அந்தப் பிரமம் அறி..! எது தரும் ஒளியால் சூரியன் முதற்கொண்டு அனைத்தும் பிரகாசமாக இருக்கின்றனவோ, எதனை அவைகள் எதுவும் ஒளிரச் செய்ய முடியாதோ, எதன் ஒளியால் இந்த உலகமெல்லாம் பிரகாசமாய் இருக்கிறதோ, அந்தப் பொருளே பிரம்மம் என்று அறிவாய்....

நாம் காணும் ஒளி என்று தொடங்கி நம்மைக் காண வைக்கும் ஒளியைப் பற்றிய மிகவும் ஆழ்ந்த கருத்துக்கள் உடைய இந்த ஸ்லோகத்தை நாம் நன்கு புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். உலகத்தை நாம் காண்பது ஏதேனும் ஒரு ஒளியைக்கொண்டே நடக்கிறது. பகல் நேரம் என்றால் அது சூரிய ஒளியாகவும், இரவு நேரம் என்றால் சந்திரன், நக்ஷத்திரம் அல்லது ஒரு விளக்கின் துணை கொண்டோ நாம் எதனையும் காண்கிறோம். நமக்குப் பார்ப்பதற்குக் கண் இருந்து, நமது அந்தக்கரணங்களும் நம்முடன் ஒத்துழைப்பதனால் ஒன்றை நாம் காண முடிகிறது என்றாலும், ஒளி இல்லையேல் நம்மால் எதையும் பார்த்து அறிய முடியாது.

இந்தத்  தத்துவத்தைத்தான் நாம் கோவிலில் சென்று இறைவனை வணங்கும்போது, நமக்குத் தீபம் அல்லது கற்பூரம் ஆரத்தி காட்டி, பின் வரும் முண்டக உபநிஷத ஸ்லோகத்தையும் சொல்லி நமது உண்மையை நமக்கு நினைவூட்டபடுகிறது....

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஆன்மாவை அறிய சாஸ்திர அறிவோ , புத்தக அறிவோ தேவையில்லை .

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

பகவான்.....

நான் படித்தவள் இல்லை , எனக்கு  ஏழு  குழந்தைகள்...தியானம் செய்ய  இவ்வளவு   பெரிய  குடும்பத்தில்  சிறிதும் நேரம்  கிடைப்பதில்லை ...." ஆன்ம  விசாரம்  எனக்குப் புரியவில்லை...எனவே  எனக்கு   எளிய வழிமுறையை கூறுங்கள்!

பகவான்....

ஆன்மாவை  அறிய  சாஸ்திர  அறிவோ,  புத்தக  அறிவோ தேவையில்லை ....வீட்டு  வேலைகளும் ,பொறுப்பும்  ஆன்மாவை அறிய  தடையில்லை .என்ன   வேலை   செய்து கொண்டுஇருந்தாலும்  சரி , உட்கார்ந்து  இருந்தாலும் , நடந்து  கொண்டிருந்தாலும்  சரி எப்போதும் உன்  மனதிற்கு "நான்,  நான் , நான்   என  இடை விடாமல் கூறிக் கொண்டு இரு...."இது  ஒரு  நாள்  நிச்சயம் ஆன்மாவில் கொண்டு போய்ச்  சேர்த்து விடும் ..."நான் " என்பது  கடவுளின்  பெயர் .... எல்லா  மந்திரங்களைக்   காட்டிலும்   இதுவே முதன்மையான  மிகச்சிறந்த  மந்திரம்....." ஓம்  "  மந்திரம் கூட இதற்கு  அடுத்தபடி தான் வருகிறது ....

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

குருவின் உபதேசம் என் சுய நிலை அறிய எவ்வாறு உதவும் ?



ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏

குருவின் உபதேசம் என் சுயநிலை அறிய    எவ்வாறு  உதவும் ?

பகவான்...காட்டில்  தன்  குடும்பத்தை விட்டு சந்தர்ப்பவசத்தால்  பிரிந்த  சிங்கக்குட்டி   ஒன்று ஆட்டு மந்தையில்  சேர்ந்தது ...இதனால் தானும் ஒரு ஆட்டுக்குட்டியே  என பாவித்துக்கொண்டது .ஆட்டைப் போலவே கனைத்தது ..சில  காலம் கழித்து ஒரு பெரிய சிங்கம் அந்த  ஆட்டு மந்தையை  நோக்கி வந்தது...ஆடுகள் நாலாபுறமும்  சிதறி ஓடின....இந்த   சிங்கக் குட்டியும் தான் ஒரு  ஆடாய்  என்றெண்ணி   பயந்தோடியது ...அதைக்கண்ட   பெரிய சிங்கம்  தன்னினத்தைச சேர்ந்த  அக்குட்டியை   தாவிப்பிடித்து  " நீயும் என்னைப் போல  ஓர்  சிங்கம்  தானே! ஏன் ஆட்டைப்போல   பயந்து  ஓடுகிறாய் ? அருகிலுள்ள  நீர்க் குட்டையில்   உன்  முகத்தைப் பார்  என்றது ..அவ்வாறே   அக்குட்டி  குட்டை நீரில் முகத்தை  பார்த்து   தான்  ஒரு  சிங்கம் தான் என்றுணர்ந்தது .  ஆடுபோல்  கனைப்பதை  விட்டு  அக்கணமே   சிங்கம் போல   கர்ஜித்து  தன்  சுயநிலை   பெற்று  மகிழ்ந்தது...இவ்வாறுதான்   ஒருவன்   குருவின்   உபதேசத்தால்  தன் சுயநிலை  (  ஆத்ம சொரூபம் )  மீட்கப் பெறுகிறான்...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு  தியான பீடம்....🙏🙏🙏

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...