ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

திங்கள், ஏப்ரல் 15, 2024

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷிகளால் உணர்ந்து உரைக்கப்பட்டவையான இதில் ஜகத் என்பது நமக்குள் இருக்கின்ற எண்ண உலகம், உணர்ச்சி உலகம், மன உலகம் ஆகியவையும், வெளி உலகமும் சேர்ந்தது ஆகும். ஜகத் என்றால் உலகம் என்று மட்டும் தான் நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். ஆனால் நமக்குள்ளேயும், வெளியேயுமாக விரிந்திருக்கின்ற ஜகத் பற்றி இப்போது தான் தெரிய வருகின்றது இல்லையா...?

கண்களால் நாம் காண்பது மட்டும் உலகம் அல்ல. நமக்குள்ளேயே இருக்கின்ற மேற்குறித்தவையும் உலகங்களே. ஜீவனாகிய நம்மைப் பற்றியும் ஜகத் எனப்படுகின்ற நாம் காணும் உலகத்தையும் ஈசன் என்று குறிப்பிடுகின்ற உண்மை இருப்பைப் பற்றியும் மேலும் எனக்கும் உலகத்திற்கும், எனக்கும் ஈசனுக்கும் என்ன சம்பந்தம் என்பதையும் ஆராய்ந்து தகுந்த சொற்களால் எடுத்துரைப்பதே வேதாந்தத்தின் நோக்கமாகும். இந்த மூன்றும் ஒன்றே என்ற ஆராய்ச்சியில் தான் குருவும் சிஷ்யனும் சேர்ந்து ஈடுபடுகின்றனர். இந்த ஞானவேள்வியில் பங்குபெற்று ஞான ஆராய்ச்சி செய்கின்ற மாணவனுக்கு ஜிக்ஞாசு என்று பெயர்...

ஓம் நமசிவாய..🙏🏻🙏🏻

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

உண்மையை உணரவே போராடுகிறேன்...!!!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

எந்த ஜீவன் தன் பிறப்பின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு, தனது ஐம்புலன்களாகிய குதிரைகளை மனமெனும் கடிவாளத்தின் மூலம் இறுக்கிப் பிடித்து அடக்கிப் புத்தியென்ற சாரதியை ஆத்மாவின் ஒளியில் இயங்க வைக்கின்றானோ அல்லது ஆத்மாவாகிய பரம்பொருளிடம் யார் சரணடைகின்றார்களோ அத்தகைய உண்மையான பக்தனுக்கு உதவ அந்தப் பரந்தாமனே, தன் அம்சத்தால் புத்தியாக அவனது இதய பீடமாகிய தோ;த்தட்டில் அமர்கின்றார். அவர் இந்த உடலாகிய வாகனத்தை (தேரை) ஒரு கையில் லகானும், மறு கையில் சாட்டையுமாகக் கொண்டு செலுத்துவார்....

இந்த உண்மையைத் தான் ஸ்ரீ கிருஷ்ணர், தன்னைச் சரணடைந்து உதவி கேட்ட அர்ச்சுனனுக்குத் தானே தேரோட்டியாக இருந்து பணிபுரிவதாகக் கூறியிருக்கின்றார்...சரணாகதியின் பெருமை புலப்படுகின்றதல்லவா...!இங்கு நாம் சிந்திக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், உன்னிடமுள்ள சிறப்பு அம்சங்கள் எவையோ அவையெல்லாம் நானே..! என்று கிருஷ்ணர் அறிக்கை விட்டபின் , நம்மிடம் தற்பெருமை இருக்குமா..? “நான்” என்னும் அகந்தை இருக்குமா..? தந்தவர் அவர்..! என்ற எண்ணத்துடன் செயல்பட்டால், கர்மா ஏறுமா...?...

வாழ்க்கையில் கர்மாவை அனுபவிப்பதற்காகப் பிரச்னைக்குள் போக வேண்டியிருக்கிறது. இருந்த போதிலும், இவற்றையெல்லாம் நீ தான் செய்கிறாய்...! என்ற தெளிவு புத்தியில் ஏற்பட்ட பிறகு, வருவது எது என்றாலும் அவற்றை ஏற்றுச் சரியான விதத்தில் தீர்வு காண முற்படுகின்ற மனப்போக்கு எழ வேண்டும். அப்படி அந்தப் பிரச்னையை ஏற்கின்றபோது “தண்ணீருக்குள் மிகச் சுலபமாக இழுபடுகின்ற அம்மி” போல மிக இலேசாக அது தீர்ந்துவிடுகின்றது. கருவி நான், என்னை இயக்குபவர் அந்தப் பரம்பொருளே..! என்பதை நன்றாகத் திரும்பத் திரும்ப சிந்தித்து மனதில் பதித்துக்கொள்வதோடு, இங்கு எல்லாமே அவன் தான்..! என்னிடம் எதிர்த்து நிற்பதும் நானே..! என்ற உண்மையையும் நாம் நினைவிற் கொள்ள வேண்டும். இந்த முயற்சியால் வாழ்க்கை சிறக்கும்...

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய.. .🙏🏻🙏🏻🙏🏻

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...