ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

வெள்ளி, பிப்ரவரி 16, 2024

ஒரு நாள் மத்தியான ஆரத்தி முடிந்து,...!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻🙏🏻

ஒரு நாள் மத்தியான ஆரத்தி முடிந்து, மக்கள் அவரவர் வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தபொழுது பாபா என்ன திருவாய் மொழிந்தார் என்பதை இப்பொழுது கேளுங்கள்... 

"நீங்கள் எங்கிருந்தாலும் சரி. என்ன செய்தாலும் சரி. இதை நன்கு ஞாபகம், வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது எனக்கு நிரந்தரமாக விவரமாக தெரியும். 

  "நீங்கள் இவ்வாறென நிதர்சனமாக உணரும் நான், எல்லோருக்கும் மிக அருகில் இருப்பவன் ஒவ்வொருடைய இதயத்திலும் உறைபவன், எங்கும் செல்பவன். நான் எல்லோருக்கும் சுவாமி...

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻

ஓம் நமசிவாய..🙏🏻

வியாழன், பிப்ரவரி 15, 2024

ஸ்ரீசீரடிசாய் பகவானின் நேரடி சுயவிழிப்புணர்வு அறிவுரை..🙏

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

ஸ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீன் மறுபிறப்பு இன்னும் அறிவிக்கபடவில்லை..சீரடியில் அவர் இன்னும் உயிருடன் இருப்பதால் உயிருடன் இருக்கும் ஒரு ஆத்மாவுக்கு மறுபிறப்பு என்பது சாத்தியமில்லை ...அதிகாரபூர்வமாக சொல்கிறேன் சாய் க்கு அடுத்த பிறப்பு அறிவிப்பு கண்டிப்பாக இந்த கலியுகத்தில் இல்லை ..இந்த மக்களுக்கு சுயவிழிப்புணர்வு இல்லாமல் ஏமாறுவதே விதி..சாயின் வாக்கு அவரின் சத்சரித்திரம் மட்டுமே....கலியுகத்தில் நிறைய போலி சாய் பகவான்கள் தோன்றுகிறார்கள் அவர்களிடம் இருந்து விலகி தயவுசெய்து மக்கள் சுயவிழிப்புணர்வு கொள்ளவேண்டும்...மீண்டும் மீண்டும் சொல்கிறேன் இந்த கலியுகத்தில் சாய்பகவானுக்கு ஷீரடி அவதாரத்தை தவிர வேறு இல்லை...

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய..🙏🏻🙏🏻

சதாசிவ திரயம்பக் வாதவ்கரின் நினைவலைகள்..!

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻🙏🏻

சதாசிவ திரயம்பக் வாதவ்கரின் நினைவலைகள்..!🙏🏻🙏🏻

சுமார் 28 வருடங்களுக்கு முன்பு அதாவது 1909 ஆம் ஆண்டு நான் தாதாரில் குட்ஸ் கிளார்க்காக இருந்தேன். இன்னுடைய தூரத்து உறவினரான தமாநே என்பவர் தீவிர சாயி பக்தர். அவர் சீரடிக்குச் சென்று பாபாவை தரிசிக்கும்படி என்னிடம் கூறினார். ஆகவே 1909 ஆம் ஆண்டு என் நண்பர் தாமநேயுடன் புறப்பட்டு, கோபர்காம்மிலிருந்து சீரடிக்கு போய்வர ஒரு டோங்கா வண்டியை அமர்த்திக் கொண்டோம்.

நாங்கள் பாபாவிடம் செல்லும் முன்பு,  பாபாவிற்கு பிரசாதம் செலுத்துவதற்காக வாங்கிக்கொண்டு வந்திருந்த மாம்பழங்களில் இரண்டை பின்னர் சாப்பிடுவதற்காக வண்டியிலேயே வைத்துவிட்டு, எஞ்சிய மாம்பழங்களையும், கொஞ்சம் புகையிலை, சில செப்பு நாணயங்கள் ஆகியவற்றையும் பாபாவிடம் கொண்டு போய் கொடுத்தோம்...

நாங்கள் கொடுத்ததை பெற்றுக்கொண்ட பாபா, " அந்த இரண்டு மாம்பழங்கள் எங்கே..?, ஏன் அவற்றை அங்கே வைத்துள்ளாய்..? அவற்றையும் இங்கே கொண்டு வா" எனக்கூறினார்....தமது வியத்தகு சக்தியால் பாபா அனைத்தையும் அறிந்திருக்க வேண்டும் என்பது எனக்கு நன்கு விளங்கியது. உடனே வண்டிக்குச் சென்று மாம்பழங்களை கொணர்ந்து பாபாவிடம் சமர்பித்தோம்.

உடனே பாபா எல்லா பழங்களையும் துண்டுகளாக்கி குழுமியிருந்த அனைவருக்கும் விநியோகிக்கும்படி உத்தரவிட்டார். பின்னர் பாபா புகைபிடித்தார்...நான் வழக்கமாக காலை 9 மணிக்கெல்லாம் சாப்பிட்டுவிடுவேன். ஆனால் அன்று 11 மணி ஆகிவிட்டதால் எனக்கு பசி. காலையில் இருந்து எதுவும் சாப்பிடவில்லை. இருப்பினும் சங்கோஜத்தினால் என் பசியைப் பற்றி நான் எதுவும் பேசாமல் மசூதியிலேயே இருந்தேன்...

அப்போது பாபாவை காண வந்த பக்தர் ஒருவர் ஒரு பாக்கெட் பேடாக்களை பாபாவிற்கு அளித்தார். வழக்கமாக பாபா எதையும் தொடுவதில்லை. ஆனால் இன்று பாக்கெட் கொடுக்கப்பட்ட உடனேயே, பாபா அதைப் பிரித்து அதில் இருந்து ஒரு பேடாவை எடுத்தார். அது நல்ல பெரிய அளவில் இருந்தது.

அவரிடம் இருந்து சற்று தள்ளி அமர்ந்திருந்த என் மடியில் விழும்படி பாபா அந்த பேடாவை வீசினார். அது சரியாக என் மடியில் விழுந்தது. அது வீட்டிற்கு எடுத்துச்செல்ல வேண்டிய மதிப்பு வாய்ந்த பிரசாதம் என்றும், இங்கே நான் அப்போதே சாப்பிட வேண்டிய பிரசாதம் இல்லை என்றும் நான் எண்ணினேன்...ஆனால் நான் அதை சாப்பிடாமல் கையிலேயே வைத்துக் கொண்டி ருப்பதை பார்த்த பாபா, " கையில் வைத்துக்கொள்வதற்காக அது உனக்கு கொடுக்கப்படவில்லை" என்றார். உடனே நான் அதை சாப்பிட வேண்டியதாயிற்று. என்னுடைய பசி ஒரளரவிற்கு அடங்கியதான உணர்வு எனக்கு ஏற்பட்டது.


அப்போது மீண்டும் ஒரு பேடாவை எடுத்து என்னிடம் தூக்கிப்போட்டார். இந்த பேடாவையாவது வீட்டிற்கு எடுத்துச செல்ல வேண்டும் என்று என்னியவாறே என் கையில் வைத்துக்கொண்டிருந்தேன். முன்போலவே பாபா," இது கையில் வைத்துக்கொள்ள அல்ல" என மொழிந்தார்.


ஆகவே அதையும் நான் சாப்பிட என் பசி முழுவதும் அடங்கியது. அதன் பிறகு பாபா பேடா எதைய்ம் தூக்கிப்போடவில்லை. வேறு எவருக்கும் கொடுக்கவில்லை. நான் ஒரு வார்த்தை பேசாமலே என்னுடைய பசி அடங்கியதைப் பற்றி பாபா அறிகின்றார் என்பது விளங்கிற்று...பின்னர் ஆரத்தி முடிந்தது.நானும் நண்பனும் சாப்பிடுவது பற்றி சிந்தித்தோம். அதற்குமேல் போய் சமைப்பதற்கு நேரம் இல்லை. ஆனால் பாபா எல்லாவற்றையும் முன்கூட்டியே அறிகின்றார் அல்லவா..? சீரடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மம்லத்தார், பாலா சாகேப் பாடேயிடம், எங்களுக்கு மதிய உணவு தயார் செய்து வைக்கு படி பாபா கூறியிருக்கின்றார்...அதன்படியே அவருடைய இல்லத்தில் எங்களுக்கு மதிய உணவு தயாராக இருந்தது. ஆரத்தி முடிந்ததும் பாடே எங்களிடம் வந்து, எங்களை அவருடைய இல்லத்திற்கு அழைத்துச் சென்று திருப்தியாக உணவளித்தார்....

அந்த பிரமுகரிடம், எங்களை சாப்பாட்டிற்கு அழைத்துச் செல்லும்போது பாபா, என்னை சுட்டிக்காட்டி, "இந்த சிறுவன் அவசியமின்றி கவலைப்படுகின்றான். அவனது வேலை ஏற்கனவே நடத்தப்பட்டடு விட்டது" எனக்கூறினார். அந்தப் பிரமுகர் பாபா கூறியதை எங்களிடம் கூறிவிட்டு நாங்கள் சீரடிக்கு வந்ததன் நோக்கம் என்னவென்று கேட்டார்...எனக்கு பாபாவிடம் உபதேசம் பெற வேண்டும் என்ற நோக்கம். பாபா எனக்கு உபதேசம் அளிப்பார் என்று எதிர் பார்க்கின்றேன் என்றேன்....

அன்று பிற்பகல் எங்களது வண்டிக்காரன் ஊருக்கு திரும்பிச் செல்ல நேரம் ஆகிவிட்டது என்று எங்களை அவசரப்படுத்திக் கொன்டிருந்தான். அங்கே வந்த அதே தினத்தில் பாபா திரும்பிப் போக அனுமதிக்க மாட்டார் என்று சிலர் கூறினார்கள்...ஆனால் இரண்டு காரணங்களுக்காக நாங்கள் அன்றே திரும்பிப் போக வேண்டியிருந்தது. முதலாவதாக, அன்றே புறப்படாவிட்டாலும் கூட வண்டிக்காரனுக்கு போகவர பேசிய கூலியை கொடுத்தே ஆக வேண்டும். இரண்டாவது, எனக்கு உடம்பு சரியில்லை என்று என் அலுவலகத்தில் கூறிவிட்டு வந்திருந்தேன்...

மறுநாள் காலையில் தாதரில் உள்ள ரெயில்வே மெடிக்கல் ஆபீசரிடம் நான் சென்றாக வேண்டும். இருந்த போதிலும் நாங்கள் வண்டிக்காரனை சிறிது காத்திருக்கச் சொல்லிவிட்டு பாபாவின் முன் அமர்ந்தோம். வண்டிக்காரன் அங்கேயும் வந்து விட்டான். பாபா அவனை உற்றுப்பார்த்து, " என்ன அவசரம்"..? எனக்கூறி போகச் சொல்லி விட்டார்..அதன் பின்னர் நாங்கள் கூறாமலேயே எங்கள் பிரச்சனைகளை அறிந்த அவர் எங்களை போக்ச சொல்லி அனுமதி அளித்தார். உதி எடுத்துக்கொள்ளும் படி என்னிடம் கூறினார். நான் எடுத்துக்கொண்டேன். நாங்கள் புறப்படும் போது பாபா கூறிய சொற்கள், " கவலை வேண்டாம் உன் காரியம் ஏற்கனவே நிறைவேறி விட்டது" என்பது..அவர் எதை என்னுடைய காரியம் என்றும், ஏற்கனவே நிறைவேறி விட்டது என்றும் குறிப்பிடுகின்றார் என்று எனக்கு விளங்கவில்லை. நான் அவரிடம் வந்த ஓரே நோக்கம், அவரிடம் உபதேசம் பெற வேண்டும் என்பதே.! அவர் உபதேசம் எதுவும் அளிக்காததால் அது நிறைவேற வில்லை என்ற கருத்துடன் நான் தாதர் திரும்பினேன்.

எட்டு நாட்களுக்குப்பின் நான் ஒரு கனவு கண்டேன். இந்தூரில் இருந்து எங்கள் குடும்ப புரோகிதர் எனக்கு உபதேசம் அளிக்க வருவதாக கனவு. நான் காலையில் விழித்த போது,புரோகிதர் வரப் போவதாக கடிதமோ, வேறு தகவலோ இல்லை...ஆனால் சில தினங்கள் கழித்து, ஓர் நாள் அவர் திடீரென என் அலுவலகத்திற்கு வந்து ஓர் நாள் என்னுடன் தங்க விரும்புவதாகக் கூறினார். அவரிடம் நான் கண்ட கனவைப் பற்றி கூறினேன். அதற்கு அவர் தனக்கு அதைப் பற்றி நன்றாகத் தெரியும் என்றும், எனக்கு உபதேசம் அளிப்பதற்காகவே தான் வந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

ஆனால் நான் கண்ட கனவைப் பற்றி அவருக்கு எப்படி முன்னமே தெரியும் என அவர் சொல்லவில்லை. அடுத்த நாள் காலை, முறைப்படி செய்யவேண்டி விரதங்களை முடித்த பின்னர் சிவ மந்திர உபதேசத்தை எனக்கு அவர் அளித்தார். நான் ஓர் சைவ சமயத்தை சேர்ந்தவன். இவ்வாறாக என் நோக்கம் நிறைவேற்றப்பட்டது....இந்த உபதேசத்தை எனக்கு அளிக்க வேண்டும் என்று சில காலத்திற்கு முன்பே புரோகிதர் தீர்மானித்திருந்தால், பாபாவின் வாக்கு சத்தியவாக்கு, அல்லது சக்தி மிகுந்த வாக்காகிறது. பாபாவே புரோகிதர் மனதில் எண்ணியிருந்த காரியத்தை செய்யும்படி தூண்டியிருக்க வேண்டும். அதனால்தான், பாபா என்னிடம், உன் காரியம் ஏற்கனவே நிறைவேறி விட்டது என்று கூறியிருக்கின்றார்..என்னளவில் பாபாவின் எல்லாம் அறியும் சக்தி மிகச்சிறப்பாகவே என்னால் உணர்ந்து கொள்ளப்பட்டது. நான் என் கடைசி காலம் வரை பாபாவிடம் நன்றியுணர்வோடு இருந்தேன்...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய..🙏🏻🙏🏻

செவ்வாய், பிப்ரவரி 13, 2024

மௌனம்

 

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

மௌனம்..🙏🏻

மனதிற்குள் மறைந்திருக்கும் ஞானத்தை வெளிப்படுத்த அமைதியாக இருக்க வேண்டியது அவசியம். உங்களிடம் யாரும் சத்தமிட்டு பேசினால், நீங்களும் பதிலுக்கு அப்படியே பேச வேண்டுமென்பதில்லை. அவரது பேச்சிற்கு அமைதியை பதிலாக கொடுங்கள். அதிலேயே அவர் எதிர்பார்க்கும் பல பதில்கள் புதைந்திருக்கும். அதனை புரிந்து கொள்ளும்வரையில்தான் அவர் சத்தமிட்டுக் கொண்டிருப்பார். எதிர்பார்த்த விடை கிடைத்துவிட்டால் அமைதியாக சென்று விடுவார். ஏனென்றால், அமைதியானது விவரிக்கமுடியாத பல அர்த்தங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻

தன்னம்பிக்கை பதிவு...முடிந்தவரை பகிரவும் தன்னம்பிக்கை இழந்து தவிக்கும் மனிதர்களுக்கு..!!



ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻🙏🏻

தன்னம்பிக்கை பதிவு...முடிந்தவரை பகிரவும் தன்னம்பிக்கை இழந்து தவிக்கும் மனிதர்களுக்கு..!!

ஒரு ஆரோக்கியமான ஆண் உடலுறவில் ஈடுபட்டவுடன் வெளியேறும் விந்தணுக்களின் எண்ணிக்கை 400 மில்லியன் என்று அறிவியல் கூறுகிறது. எனவே விவாதத்தின் படி அந்த அளவு விந்தணுக்கள் ஒரு பெண்ணின் வயிற்றில் ஒரு இடத்தைக் கண்டால் 400 மில்லியன் குழந்தைகள் உருவாக்கப்படுவார்கள்..!இந்த 400 மில்லியன்  விந்து, தாயின் கருப்பை நோக்கி பைத்தியம் போல் ஓடும்போது 300-500 விந்து மட்டுமே உயிர்வாழ்கிறது...மற்றும் மீதமுள்ள அணுக்கள் வழியில் சோர்வு அல்லது தோல்வியால் இறக்கின்றனர். இந்த 300-500 விந்தணுக்கள் கருமுட்டையை அடைய முடிந்தது. அவற்றில் ஒன்று மட்டுமே மிகவும் வலுவான விந்து, கருமுட்டையை உரமாக்குகிறது அல்லது கருமுட்டையில் ஒரு இடத்தைப் பிடிக்கும். அந்த அதிர்ஷ்ட விந்து நீங்கள் அல்லது நான் அல்லது நாம் அனைவரும்...இந்த மாபெரும் போரைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா..?

1. நீங்கள் ஓடியபோது "கண்கள், கைகள், கால்கள், தலை இல்லை, இருந்தும் நீங்கள் வெற்றி பெற்றீர்கள் .

2. நீங்கள் ஓடியபோது ​​உங்களிடம் எந்தவிதமான சான்றிதழும் இல்லை,.உங்களுக்கு மூளை இல்லை, ஆனால் நீங்கள் வென்றீர்கள்.

3. நீங்கள் ஓடும்போது உங்களுக்கு கல்வி இல்லை, யாரும் உதவி செய்யவில்லை, ஆனால் நீங்கள் வென்றீர்கள்.

4. நீங்கள் ஓடும்போது உங்களுக்கு ஒரு இலக்கு இருந்தது, நீங்கள் ஒரே மனதுடன் ஓடி அந்த இலக்கை இலக்காகக் கொண்டு, இறுதியில் நீங்கள் வென்றீர்கள்.- அதன் பிறகு, தாயின் வயிற்றில் பல  குழந்தைகள் இழக்கப்படுகின்றன. ஆனால் நீங்கள் இறந்துவிடவில்லை. நீங்கள் 10 முழு மாதங்களை முடித்துவிட்டீர்கள்..பிறக்கும்போதே பல குழந்தைகள் இறக்கின்றன. ஆனால் நீங்கள் உயிர் பிழைத்தீர்கள்... வாழ்க்கையின் முதல் 5 ஆண்டுகளில் பல குழந்தைகள் இறக்கின்றன. நீங்கள் இன்னும் உயிருடன் இருக்கிறீர்கள்..பல குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கின்றனர். உங்களுக்கு எதுவும் நடக்கவில்லை... பலர் வளர்ந்து வரும் வழியில் உலகை விட்டு வெளியேறிவிட்டார்கள். நீங்கள் இன்னும் இருக்கிறீர்கள்.....மற்றும் இன்று ......

ஏதாவது நடக்கும்போது நீங்கள் பீதியடைகிறீர்கள், நீங்கள் விரக்தி அடைந்து விட்டதாக நினைக்கிறீர்கள் ஏன்..? நீங்கள் ஏன் தோற்று விட்டதாக நினைக்கிறீர்கள்..? நீங்கள் ஏன் நம்பிக்கையை இழந்துவிட்டீர்கள்..? இப்போது உங்களுக்கு நண்பர்கள், உடன்பிறப்புகள், படிப்பு சான்றிதழ்கள் எல்லாம் இருக்கிறது. கைகளும் கால்களும் உள்ளன. கல்வி இருக்கிறது. திட்டமிட மூளை இருக்கிறது. உதவி செய்ய மக்கள் இருக்கிறார்கள். ஆனாலும் நீங்கள் நம்பிக்கையை இழந்துவிட்டீர்கள். வாழ்க்கையின் முதல் நாளில் நீங்கள் கைவிடாதபோது. 400 மில்லியன் விந்தணுக்களுடன் மரணத்துடன் போராடி, எந்த உதவியும் இல்லாமல் தொடர்ச்சியாக ஓடுவதன் மூலம் தனியாக போட்டியில் வெற்றி அடைந்தீர்கள்.

ஏதாவது நடக்கும்போது ஏன் மனம் உடைக்கிறீர்கள்..??

நான் வாழ விரும்பவில்லை என்று ஏன் சொல்கிறீர்கள்..?

நான் தோற்றேன் என்று ஏன் சொல்கிறீர்கள்..?

இதுபோன்ற ஆயிரக்கணக்கான விஷயங்களை முன்னிலைப்படுத்த முடியும், ஆனால் நீங்கள் ஏன் விரக்தியடைகிறீர்கள்?

நீங்கள் ஆரம்பத்தில் வெற்றி அடைந்தீர்கள். இறுதியில் வெற்றி அடைவீர்கள். நடுவில் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு நேரம் கொடுங்கள். உங்களிடம் என்ன திறமை இருக்கிறது என்று நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்...பாதுகாப்பாக இருங்கள்; மகிழ்ச்சியாக இருங்கள்...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய..🙏🏻🙏🏻🙏🏻

மனிதர்களுக்கு உதவ வேண்டும்,...!

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

மனிதர்களுக்கு உதவ வேண்டும், அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அனைவரும் அமைதியாக, மனமகிழ்வுடன் வாழ வேண்டும். ஒற்றுமையாக, ஒருவருக்கொருவர் அன்பு செலுத்திய வண்ணம் இருக்க வேண்டும், மற்றும் இறை வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டு இருக்க வேண்டும் போன்ற செயல்களை நிறைவேற்றுவதே ஒரு இறைசேவை செய்பவர்கள் எதிர்பார்க்கும் நிலை....ஒருவர் மன அமைதியுடன் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே இறை வழிபாட்டில் ஈடுபட முடியும். அந்த நிலைக்குச் சென்று விட்டால் தானாகவே இறை வழிபாட்டில் ஈடுபட முடியும்..

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻

ஓம் நமசிவாய..🙏🏻🙏🏻

கடவுள் மறுப்பு கேள்விகளை கேட்க்கும் மனிதர்கள் ஒரு நிமிடம் சிந்திக்க தவறாமல் சிந்தியுங்கள்.

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

கடவுள் மறுப்பு கேள்விகளை கேட்க்கும் மனிதர்கள் ஒரு நிமிடம் சிந்திக்க தவறாமல் சிந்தியுங்கள்...வேதாந்திரி மகரிஷி அவர்கள் கூறியது போல. ஒரு கிண்ணம் நிறைய தயிர் சோறு தருகிறேன். எந்த விஞ்ஞானத்தாலும் அதை ரத்தம் ஆக்கித் தர முடியுமா..? அதே தயிர் சோறு...இதோ நான் சாப்பிட்ட உடன். உள்ளே சென்றுரத்தம் ஆகிவிடுகிறது...அவன் இன்றி ஓர் அனுவும் அசையாது...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻


திங்கள், பிப்ரவரி 12, 2024

பாபாவின் மிக நெருங்கிய அடியவர் பகத் மகல்சபாதி,


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

பாபாவின் மிக நெருங்கிய அடியவர் பகத் மகல்சபாதி..

பகுதி-2 

பாபாவின் முதல் பக்தர் மகல்சாபதியை பாபா ‘பகத்’ என்றுதான் அழைப்பார். தன் எல்லா கவலைகளையும் சாயிநாதனின் திருவடிகளில் சமர்ப்பித்துவிட்டு சலனமின்றி இருந்தார்..அதே போன்று எப்போதும் கண்ணுக்குத் தெரியாமல் உடனிருந்து பாதுகாக்கவும் செய்தார் பாபா....பொதுவாக, பிறர் தன்னை வழிபடுவதை விரும்பாத பாபாவால்கூட, முழுமையாகத் தனக்கு ஆத்ம சமர்ப்பணம் செய்துகொண்ட மகல்சாபதியின் வழிபாடுகளைத் தடை செய்ய முடியவில்லை. தன்னை மனப் பூர்வமாக நேசித்து நம்பும் அடியவர்களின் அன்புக்கு பாபா எப்போதும் அடிமை....

“தேவா நீங்கள் என்னுடன் இருக்கும்போது என் தேவைகளை அறிந்து நீங்கள் தீர்த்து வைப்பீர்கள் எனும்போது நான் என் உலகாயத விஷயங்களை நினைத்துக் கவலைப்பட வேண்டுமா என்ன?” என்று கேட்பார். 

அந்த நம்பிக்கையே பாபா விரும்புவது. மகல்சாபதி பாபாவின் அனுமதியின்றி எதையும் செய்வதில்லை. எப்போதும் கண்ணுக்குத் தெரியாமல் உடனிருந்து பாதுகாக்கவும் செய்தார் பாபா.மசூதி பழுது பார்த்ததில் கூட மகல்சபாதி மூலமாக    பாபாவிடம் சம்மதம் வாங்கப்பட்டது. தாத்யா கோதே பாடீல், பகத் மஹல்ஸாபதி என்ற அத்தகையான இரு அதிஷ்டசாலிகள் சாயிபாபாவின் கூட்டுறவைச் சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர்.  பாபாவும் அவர்கள் இருவரையும் சமமாக நேசித்தார்.  இம்மூவரும் தங்கள் தலைகள் எல்லாம் கிழக்கு, மேற்கு, வடக்கு நோக்கி இருக்கும்படியும், தங்கள் கால்கள் எல்லாம் சந்திக்கும்படியும் மசூதியில் தூங்கினர்.  தங்களது படுக்கையை விரித்து அதன்மீது படுத்துக்கொண்டு பல விஷயங்களை பற்றி  நள்ளிரவு நெடுநேரம் வரை படுத்திருப்பர்.  

அவர்களுள் யாருக்காவது தூக்க அடையாளம் தென்பட்டால் மற்றவர்கள் அவரை எழுப்பி விட வேண்டும்.  உதாரணமாகத் தாத்யா குறட்டைவிடத் தொடங்கினால் பாபா உடனே எழுந்திருந்து பக்கவாட்டில் அவரை அசைத்து, தலையை அழுத்தியும், மஹல்ஸாபதி அவ்வாறு தூங்கினால் அவரை நெருங்கிக் கட்டியணைத்தும், அவரது முதுகைப் பிடித்துவிட்டும், கால்களை உதைத்தும் எழுப்பிவிடுவார்.  இவ்விதமாகப் பதினான்கு முழு ஆண்டுகளும், பாபாவின் மீதுள்ள அன்பால் கூட இருந்தனர்

பாபாவிடம் அருகிலிருந்து அவரின் உயரிய வாழ்க்கை முறை, உபதேசங்கள் ஆகியவற்றை அறிந்து உயர்ந்த ஆன்மிக நெறியில் தன் வாழ்வைச் செலுத்தினார் மகல்சாபதி...

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய....🙏🏻🙏🏻🙏🏻

இப்பொழுது சரணாகதி பற்றி பேச போகிறேன் ...?

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻🙏🏻

இப்பொழுது சரணாகதி பற்றி பேச போகிறேன் ...?
நீங்கள் சரண் செய்ய வேண்டிய எதுவும் ஏற்கனவே இறைவனுடையது அல்லவா...? 

ஆனால், உங்களுடையது என்று நீங்கள் நினைக்கும் எதையும் ‘விட்டு விடுங்கள்’ என்றே நான் சொல்வேன்...! எதையாவது நீங்கள் இறுகப் பற்றிக் கொண்டிருந்தால், ‘தளர்வாகுங்கள்...!’ தளர்வதே சரணாகதி.. வேறு எதுவும் இல்லை. உங்கள் மனதை ஏதாவது உறுத்திக் கொண்டிருந்தால், அந்தக் கவலையை சரண் செய்வதே சரணாகதி. இது ஆகுதி போலத்தான். (ஆகுதி என்பது யாகத் தீயில் பிரார்த்தனையுடன் போடப்படும் பொருட்கள்).எனவே உங்களை என்ன உறுத்திக் கொண்டிருந்தாலும் அல்லது உங்களிடம் கவலை இருந்தாலும் அதை ஆகுதியாகக் கருதி இறைவனிடம் அளித்து விடுங்கள்.

எதை உங்களால் சமாளிக்க முடியவில்லையோ, எது உங்களுக்கு பாரமாக இருக்கிறதோ... எதை சுமப்பதால் நீங்கள் சோர்வடைகிறீர்களோ, அதை அப்படியே போட்டுவிட்டுச் சென்றால் போதும். சரணாகதி என்பதின் பொருள் இதுதான். இல்லையென்றால் சரணாகதிக்கு என்ன இருக்கிறது..? உங்கள் உடம்பு இறைவனுடையது. உங்கள் மனம் கூட இறைவனுடையது தான்...எல்லாம் இறைவனுடையது...ஆனால், இது உங்களுடையது என்று நினைக்கிறீர்கள். எனவே, எல்லாம் போகட்டும், இறுக்கம் தளந்து புன்னகை செய்தால் போதும்.

புத்த சமயத்தில், ‘புத்தம் சரணம் கச்சாமி’, என்பார்கள். அதன் பொருள் உங்களால் சுமக்க முடியாத சுமையை புத்தரிடம் அளித்து விடுங்கள் என்பதே. அல்லது குருவிடம் சமர்ப்பணம் செய்யுங்கள், அல்லது இறைவனிடம் சமர்ப்பணம் செய்யுங்கள், அல்லது உங்களுக்கு நெருக்கமான யாரிடமாவது சமர்ப்பணம் செய்யுங்கள். உங்களைச் சேர்ந்தவர்கள் யாரோ ஒருவர் இருக்கிறார், அவர் உங்களுக்கு அன்பானவர், நீங்கள் அவருக்கு அன்பானவர் என்று நீங்கள் உணரவே இது.உங்களுக்கு ஒரு உதாரணம் தருகிறேன்...ஒரு குழந்தை தன் அம்மா வீட்டில் இருக்கிறாள் என்றால் வசதியாய் உணர்கிறது. அந்தக் குழந்தை இங்கும் அங்கும் ஓடி விளையாடுகிறது. ஆனால்,அந்த குழந்தையால் தன் அம்மாவைப் பார்க்க முடியவில்லை, அவர்கள் எங்கோ சென்றிருக்கிறார்கள் என்றால், தன் தாயைத் தேடி அழ ஆரம்பிக்கிறது சிறு குழந்தைகள் எப்போதும் தன் அம்மா அருகே இருக்கிறார்களா என்று பார்த்தபடியே இருக்கும். ஒரு கண் தன் அம்மா மீது வைத்தபடியே இருக்கும். இது ஏனென்றால், ‘எனக்காக ஒருவர் உண்டு, அவர் இருக்கிறார்’ என்று தெரிந்தால் அந்தக் குழந்தை வசதியாய் உணர்கிறது...சரணாகதி மந்திரம் இதுவே..!!
சரணாகதியின் மகிமையை அனுபவத்தால் மட்டுமே உணரமுடியும்...!
ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

கர்ணன்_கற்றது வித்தை_அல்ல...வேதம்...!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிக....🙏🏻🙏🏻

கர்ணன் கற்றது..வித்தை அல்ல...வேதம்...

கர்ணன் பிறப்பால் சத்ரியன். வீரத்துக்குக் குறைச்சல் இல்லை. இருந்தாலும் குரு வேண்டுமே...?

துரோணாச்சாரியார் மறுத்துவிட, கிருபாச்சாரியாரிடம் ஒரு நாள் அதிகாலை போகிறான் கர்ணன். மாணவர்களின் திறமையை சோதிக்க, வானத்தில் பறக்கும் ஒரு பறவையை குறிபார்த்து வீழ்த்தச் சொல்கிறார் குரு...அர்ஜுனன் ஒரே அம்பில் பறவையை வீழ்த்திவிட்டு தேரேறிப் போய்விட்டான். இப்போது கர்ணனின் முறை. அம்பை நாணில் பூட்டியாயிற்று. ஒரு கணம் பறவையை வானில் குறி பார்த்தவன் வில்லையும் அம்பையும் கீழே வைத்து விட்டான்...மிகச் சிறந்த வில் வீரனான கர்ணன் அப்படிச் செய்தது குருவுக்கு அதிசயம். காரணம் கேட்கிறார்....

குருவே இது மிகவும் அதிகாலை நேரம். இந்த நேரத்தில் ஒரு பறவை விண்ணில் பறக்கிறது என்றால் நிச்சயம் தன் குஞ்சுகளுக்கான உணவைக் கொண்டு போகிறது என்றுதான் பொருள். இப்போது திறமைக்காக அதைக் கொன்றுவிட்டால் நான் வீரனாவேன். ஆனால் அந்த இளம் குஞ்சுகள் அனாதை ஆகிவிடும். எனவே நான் கொல்ல மாட்டேன் என்றானாம்.. கலங்கிப்போன குரு சொன்னாராம், "கர்ணா நீ கற்றது வித்தை அல்ல வேதம்" என்று பாராட்டினார்... !!!

பணத்தாலும், பதவியாலும், அதிகாரத்தாலும் நீங்கள் பலமானவர்களாக இருக்கலாம். அந்த பலத்தை உன்னை நேசிப்பவர்களிடமோ, அல்லது உன்னை விட பலம் குறைந்தவர்களிடமோ... காட்டாதீர்கள்....

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻

ஞாயிறு, பிப்ரவரி 11, 2024

சரியா தவறா.....!!ஞானம் உண்டு..அனுபவம் உண்டா...!!???



ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

குரு தத்துவம் என்ன கூறுகிறது என்றால்...

ஆன்மீக குரு என்பவர் கைகளில் ஜப மாலையுடன் புலித்தோலில் அமர்திருப்பர் என்றும், எப்பொழுதும் அமைதியாக இருப்பார், கோபம் என்றாலே என்ன என தெரியாதவராக இருப்பார் என்று பலர் எண்ணுகிறார்கள் .குரு இப்படித்தான் இருக்க வேண்டும் என முடிவு செய்வது முட்டாள்தனம்...குருவானவர் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

பரபிரம்மதின் வடிவமானவர் குரு. பரபிரம்மம் எப்படி எல்லா இடத்திலும் வியாபித்து இருக்கிறதோ அது போல குருவும் அனைத்து ரூபங்களிலும் இருப்பார்...உங்கள் வீட்டிக்கு வரும் குப்பை அள்ளுபவர் , உங்கள் மனைவி , உங்கள் குழந்தை , உங்கள் செல்ல பிராணியான நாய் என யார் வேண்டுமானாலும் உங்கள் குருவாக இருக்கலாம்..குருவை உங்கள் பார்வையில் தேடாதீர்கள்... அறியாமை இல்லா மனதை திறந்து வையுங்கள் உங்கள் குரு தானே வருவார்...

குரு உஙகளின் கரு...உங்களின் குருட்டை நீக்குபவர்..ஆன்மாவே குரு...குருவே.சிவம்...

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻


நம்பினால் நம்புங்கள்..........!!!!????

 


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

நம்பினால் நம்புங்கள்..........!!!!????

வேதங்களே நமக்குப் பிரமாணங்கள் என்பதால் வேதத்தில் உள்ள மகா வாக்கியங்களே ஏதோவொரு வடிவில் நமக்கு குருவின் மந்திரமாக உபதேசிக்கப்பட்டிருக்கும். இருக்கும் ஆன்மா ஒன்றேயானாலும், ஒவ்வொரு மகா வாக்கியமும் வெவ்வேறு பார்வைகளில் சொல்லப்பட்டவை...அதனால் நாம் அவைகளையே எடுத்துக் கொள்வோம். ரிக் வேதம், ஐதரேய உபநிஷத்தில் சொல்லப்பட்டுள்ள லக்ஷண வாக்கியமான “ப்ரக்ஞாநாம் ப்ரஹ்ம” என்பது “உணர்வே பிரம்மம்” என்ற இலக்கண வடிவில் சொல்லப்பட்டுள்ளது...யஜுர் வேதம், தைத்திரீய உபநிஷத்தில் சொல்லப்பட்டுள்ள அனுபவ வாக்கியமான “அஹம் ப்ரஹ்மாஸ்மி” என்பது “நான் பிரம்மமாய் இருக்கிறேன்” என்ற அனுபவ வாயிலாய் சொல்லப்பட்டுள்ளது. சாம வேதம், சாந்தோக்கிய உபநிஷத்தில் உபதேச வாக்கியமான “தத் த்வமஸி” என்பது “நீ அதுவாக இருக்கிறாய்” என்ற உபதேச வழியில் சொல்லப்பட்டிருக்கிறது. அதர்வண வேதம், மாண்டூக்ய உபநிஷத்தில் சாக்ஷாத்கார வாக்கியமான “அயம் ஆத்மா ப்ரஹ்ம” என்பது “இந்த ஆத்மன் பிரம்மம்” என்ற யுக்திக்குப் பின் வரும் அனுபவ முறையில் சொல்லப்பட்டிருக்கிறது...

இப்படியாக ஏதோவொரு முறையில் குருவினால் வழங்கப்படும் மந்திர உபதேசத்தைக் கேட்டு, அதன் பொருளையும், வீச்சையும், விளக்கங்களையும் அவரிடமே அறிந்துக் கொண்டு, பின்பு அதை மனத்தில் நன்கு அசைபோட்டு, தேவையானால் மேலும் விளக்கங்களைக் கேட்டு அதன் பின்பும் தன் அறிவால் அலசியதும் நன்கு உள்வாங்கிக் கொண்டு, அதை வெறும் அறிவால் மட்டும் அறிந்து கொள்வதை விடுத்து அதன் உண்மையை உணர்வதற்கு அதன் பொருளை மனத்தால் நன்கு தியானித்து அந்தப் பொருளாகவே இருக்க முயல்வதுதான் சாதகனின் முயற்சிகள்...இதற்கு மேல் அவனருளாலே அவன்தாள் வணங்கும் நிலை தானே வரும்....

ஓம் நமசிவாய..🙏🏻🙏🏻

ஓம் ஸ்ரீ நமசிவாய...🙏🏻🙏🏻🙏🏻

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...