ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

வியாழன், மே 27, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு..அத்தியாயம் பதினைந்து🙏

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய  அத்தியாய  வெளியீடு....🙏🏼🙏🏼🙏🏼

🙏🏼ஶ்ரீசாய் சத்சரித்திரம்..🙏🏼

🙏🏻 அத்தியாயம்.::-பதினைந்து (15 ) 🙏🏻

 🔥முதலில் புனித வேத நூலான சாய்  சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள் என்ன என்பதைப்பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல்  என்பது ஶ்ரீசாய் சத்சரித்திரம் என்பதாகும்.. இதில் சீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து  படர்ந்து இருக்கின்றது...

சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல் ,மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம்  செயல்படுகின்றது..ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து  சத் சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்....

இவ்வாறாக நாம் அனைவரும் சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்...ஆகவே சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்..நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக..🙏🏻

🔥குறிப்பு...சாய் சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்... அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரிய தன்மையை அடையலாம்...இவ்வேதப்  பாராயணத்தின் மூலமாக ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரிய நிலையை அடையும் நிலையைப் பெறலாம்...மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம், நேர்மை, மனிதநேயம் போன்ற இறைப் பண்புகளைப் பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுபெறவும்  இந்த சத்சரித  வேதப்பாராயணம் துணைப்புரிகின்றது....

மேலும்இப்பாராயணத்தின் மூலம்   மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்.... அவரவர்கள் வேண்டியது கிடைக்கப்பெறும்.. சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்....🙏🏻

🙏🏻அத்தியாயம்..பதினைந்து15)🙏🏻

🙏🏻முன்னுரை..🙏🏻

சீரடி பகவானால் கீர்த்தனைகள் பாடுவதற்கு தாஸ்கணு  எவ்வாறு நியமிக்கப்பட்டார்..மேலும் கீர்த்தனைகள்  பாடும் போது எவ்வாறு  புறத்தோற்றம் இருக்க வேண்டும் என்பதை அறிவுருத்திய அனுபவ விளக்கவுரை ...

பகவான் தன்னுடைய ஆத்மார்த்தமான எளிய  பக்தரான சோல்கரின்  வேண்டுதலை  நிறைவேற்றி, மிகுந்த தாய்மையுணர்வுடன் பக்தனின் பிரார்த்தனை  சங்கல்பத்தை அறிந்து தேநீரில் சர்க்கரையை சேர்த்து அருந்துமாறு கூறித் தேற்றிய அனுபவ விளக்கவுரை இங்கே...

பகவான் தன்னுடைய ஞான திருஷ்டியால்,அங்கேயுள்ள இரண்டு  பல்லிகளின்  அதிநுட்பமான  சூட்சம உரையாடல் பற்றி தன் பக்தர்களிடம் அறிவுருத்துகின்ற அனுபவ விளக்கவுரை...

மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளைப் ஒவ்வொன்றாக இங்கே பார்ப்போம்....

🔥 முதலில் சீரடி பகவானால்  கீர்த்தனைகள் பாடுவதற்கு  எவ்வாறு தாஸ்கணு நியமிக்கப்பட்டார்..கீர்த்தனைகள் பாடும் போது எவ்வாறு  புறத்தோற்றம் இருக்க வேண்டும் என்பதை அறிவுருத்திய அனுபவ விளக்கவுரை ...🔥

சீரடியில் ராமநவமித் திருவிழாவைப் பற்றி ஆறாவது அத்தியாயத்தில் குறிப்பிட்டதை ஏற்கெனவே பாராயணம் செய்திருப்பீர்கள்... அதாவது  எவ்விதம் ராமநவமி பண்டிகை முதன்முதலாக நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது என்பதைப் பற்றி சென்ற  அத்தியாயத்தில்  பார்த்தோம்...ஆரம்ப வருடங்களில் அவ்விழாவின்போது கீர்த்தனைகள் பாடுவதற்கான ஹரிதாசகர்கள்  பெறுவது மிகக்கடினமாய் இருந்தது.ஆகவே பகவான் தாஸ்கணுவிற்கே இவ்விழாவினுடைய கீர்த்தனைப்  பொறுப்பை நிரந்தரமாக  ஒப்படைத்தார் அதிலிருந்து தாஸ்கணு அதனை  எவ்வாறு மிகவும்  வெற்றிகரமாக நிறைவேற்றிக்  கொண்டு வருகிறார் என்பதைப் பற்றி விரிவாக இங்கே காண்போம்...

பொதுவாக நமது ஹரிதாசர்கள் கீர்த்தனைகள் செய்யும்போது விரும்பியவாறு ஆடம்பர  முழு உடைகளையும் அணிகிறார்கள்...  ஃபேடாவோ, டர்பனோ ஏதோ ஒரு தலைப்பாகை அணிந்து கொள்கிறார்கள்..நீளமான அலைமோதும் கோட், உள்ளே ஒரு சட்டை, தோள்களில்அங்கவஸ்திரம், இடுப்புக்குக் கீழே வழக்கமான நீள வேட்டி ஆகியவற்றை அணிகிறார்கள்..சீரடி கிராமத்தில் ஒரு கீர்த்தனைக்காக தாஸ்கணு ஒருமுறை இவ்வாறாக உடையணிந்து,  பாபாவிடம் வணங்குவதற்காகச் சென்று இருக்கின்றார்... உடனே  பாபா  என்ன  அழகாக  மாப்பிள்ளையைப் போல்  உடையணிந்துக் கொண்டு எங்கே செல்லப் போகின்றீர்கள் என்று கூறினாராம்...அதற்கு தாஸ்கணு  "கீர்த்தனை செய்வதற்கு" என்று பதில் உரைத்திருக்கின்றார்...

அப்போது பாபா, "இச்சிறு அலங்காரப் பொருட்கள் எல்லாம் எதற்கு..? கோட்டு, அங்கவஸ்திரம், குல்லாய் முதலிய எல்லாவற்றையும் எனக்கு முன்னால் கழற்றிவிடு" என்று கூறினாராம்... தாஸ்கணு உடனே அவற்றை எடுத்து பாபாவின் பாதத்தடியில் வைத்திருக்கின்றார்..  அதிலிருந்து கீர்த்தனை செய்யும்போது தாஸ்கணு இடுப்புக்குமேல் ஒன்றும் அணிவதில்லை... கைகளில் ஒரு ஜதை சப்ளாக் கட்டை, கழுத்தில் மாலை இவற்றுடனேயே எப்போதும் இருந்தார்...எல்லாப் பாடகர்களும் கைக்கொள்ளும் முறையுடன் இது ஒத்ததாய் இல்லை....ஆனால் இதுவே மிகச்சிறந்த, மிகத்தூய வழியாகும்...கீர்த்தனை பத்ததிகளை படைத்து உருவாக்கிய நாரத ரிஷியே மேல் உடம்பிலும், தலையிலும் ஏதும் அணியவில்லை. தம் கையில் வீணையேந்தி அனைத்து இடந்தோறும் அலைந்து திரிந்து கடவுளின் புகழைப் பாடினார்..

புனே, அஹமத்நகர் ஜில்லாக்களில் பாபாவின் புகழ் பரவக் காரணமாயிருந்த இருந்தவர்கள்  நானா சாஹேப் சாந்தோர்கர் மற்றும் தாஸ்கணு என்பவர்கள்  குறிப்பிடத்தக்கவர்கள்... தனது சொந்த தனிப்பட்ட முறையிலான  உரையாடல்களால் நானா பாபாவின் உயரிய உபதேசங்களை மக்களிடம் கொண்டுச்   சென்றார். தாஸ்கணு தனது மிக உயர்வான கீர்த்தனைகளாலும் கொங்கணத்தில் பாபாவின் புகழைப் பரப்பினார்.. தாஸ்கணு அவர்கள்,  தமது அழகிய உயரிய  கீர்த்தனைகளால் அங்கேயிருந்த ஏராளமான மக்களை  தெய்வீக இறை  ஆற்றலை  ஈர்க்கும் படிச்செய்து   பாபாவை வழிபடக் காரணமாக இருந்தார்.... கீர்த்தனைகளைக் கேட்கவந்த மக்கள் வெவ்வேறு சுவையுள்ளவர்களாய் இருப்பார்கள்.. சிலர் ஹரிதாசின்  ஆழமான  அறிவுத் திறமையையும் , சிலர்  அவரின் புலமையையும் விரும்புபவர்...சிலர் அவரது அபிநயங்களையும், சிலர் அவரது பாடலையும், சிலர் அவரது விகட நகைச்சுவைகளையும், சிலர் அவரது துவக்க வேதாந்த வியாக்கியானங்களையும்,  மற்றும் சிலர் அவரது முக்கிய கதைகளையும்,இவ்வாறாக  பலர் பலவிதமாக ஆர்வம் கொண்டிருப்பர்..

அவர்களுக்குள் மிகச்சிலரே கீர்த்தனைகளைக் கேட்பதன் வாயிலாக ஞானிகள் மற்றும்  கடவுளிடத்தில்  நம்பிக்கையும், பக்தியும் பெறுகின்றார்கள்..ஆயினும் தாஸ்கணுவின் கீத்தனைகளைக் கேட்கும் அவையோர்களது உள்ளத்தில்  தெய்வீக இறையாற்றல் வியாப்பித்து அனைவரையும் பரவசப்படுத்தியது...தாஸ்கணு ஒருமுறை தாணேவில் கௌபினேஷ்வர் கோவிலில் சாயீபாபாவின் புகழைப்பாடி கீர்த்தனை செய்து வந்துள்ளார்.. அவையோர்களுள் சோல்கர் என்பவர் சிவில் கோட்டில் ஒரு தற்காலிக ஊழியராக வேலைப் பார்த்துவந்த ஒரு ஏழைப் பக்தர் ஆவார்... இவர் மிகவும் கவனத்துடன் தாஸ்கணுவின் கீர்த்தனையை  கேட்டுப் பெரிதும் உருகிப்போனார்...அவர் அங்கேயே, அப்போதே மானசீகமாக  பாபாவுக்கு வணக்கம் செலுத்தி, ஒரு சங்கல்ப  விரதம் எடுத்துக் கொண்ட அனுபவ விளக்கத்தை விரிவாக கீழே காண்போம்...

🔥பகவான் தன்னுடைய ஆத்மார்த்தமான எளிய  பக்தரான சோல்கரின்  வேண்டுதலை எவ்வாறு  நிறைவேற்றினார்...மற்றும் தாய்மையுணர்வுடன் பக்தனின்  ஆழமான பிரார்த்தனை  சங்கல்பத்தை  அறிந்து, தேநீரில்  சர்க்கரையை சேர்த்து அருந்துமாறு கூறித் தேற்றிய அனுபவ விளக்கவுரை இங்கே...🔥

சோல்கர் கூறுகின்றார் பாபாவிடம்...பகவானே  நான் என் குடும்பத்தைக் காப்பாற்ற இயலாத ஓர் ஏழை... தங்களுடைய அருளினால் நான் இலாகாவிற்குரிய தேர்வில் வெற்றிபெற்று, நிரந்தர உத்தியோகம் பெற்றால் சீரடிக்கு வந்து , தங்கள் பாதங்களில் வீழ்ந்து, தங்கள் நாமத்தினால் கற்கண்டை வினியோகிப்பேன்." என்று பிரார்த்தித்து கொள்கின்றார் பாபாவிடம்.. இது நிறைவேறுவதற்குரிய நல்ல அதிஷ்டம் இருந்ததால், சோல்கர் பரீட்ஷையில் தேர்வு பெறவே செய்தார்... எவ்வளவு விரைவில் முடியுமோ, தனது விரதத்தை விரைவில்  நிறைவேற்றுவது  என்பது ஒன்றே அவருக்கு  எஞ்சியிருந்தது...  பெருங்குடும்பத்தைத் தாங்கவேண்டிய ஏழை மனிதர் சோல்கர்...அவரால் சீரடி பயணத்திற்கு நேரும் செலவைத் தாங்குதல் இயலாது...தாணே ஜில்லாவில் உள்ள நாணே காட்டையும்  அல்லது சஹ்யாத்ரி மலைத் தொடரையைக்  கூட ஒருவன் எளிதில் கடந்துவிடலாம். உம்பரேகாட்டை, அதாவது வீட்டின் தலைவாயிலை, ஓர் ஏழை மனிதன் கடப்பது என்பது மிகமிகக் கடினமானது....

எவ்வளவு விரைவில் தனது விரதத்தைப் பூர்த்திசெய்ய முடியுமோ, அவ்வளவு விரைவில் பூர்த்திசெய்ய ஆவலும், கவலையுமுற்ற சோல்கர் தனது செலவைக் குறைத்துச் சிக்கனப்படுத்தி பணத்தைச் சேகரிக்கத் தீர்மானித்தார்..தனது உணவிலும்,  தேநீரிலும் சர்க்கரை உபயோகிப்பதில்லை என முடிவுசெய்து, தேநீரைச் சர்க்கரை இன்றியே அருந்தத் தொடங்கினார்.  இவ்வாறாக அவர் சிறிது பணம் சேகரிக்க இயன்றதும், சீரடியை வந்தடைந்து பாபாவின் தரிசனத்தைப் பெற்றார். அவர் பாதங்களில் வீழ்ந்தார்... இரு தேங்காயை அர்ப்பணித்தார்.. தனது விரதப்படி அந்தக்கரண சுத்தியுடன் கற்கண்டை விநியோகித்தார்...

பாபாவிடம், அவரது தரிசனத்தால் தான் மிகவும் மகிழ்ச்சியுற்றதாகவும், அன்றைய தினத்தில் அவரது ஆசைகள் பூர்த்தியாயின என்றும் சோல்கர்  கூறினார்...விருந்து  உபசரிப்பளராகிய பாபு சாஹேப் ஜோகுடன், சோல்கர் மசூதியில் இருந்தார்... பாபு சாஹேப்பும் , சோல்கரும் எழுந்து மசூதியை விட்டுப் புறப்படப் போனபோது, பாபா, ஜோகிடம் பின்வருமாறு கூறினார்.  "அவருக்கு (சோல்கருக்கு) சர்க்கரை நிறை முழுமையாய் கரைக்கப்பட்ட தேநீரைக் கொடுப்பீராக... இத்தகைய உட்கருத்து சொற்களை பாபா கூறியதைக்  கேட்டு சோல்கர் மிகவும் மனதுருகிப் போனார்...வியப்பால் செயலிழந்தார்.. அவரின் கண்கள் கண்ணீரால் பனித்தன.. மீண்டும் பாபாவின் பாதங்களில் வீழ்ந்தார்....தனது விருந்தினருக்கு அளிக்கபடவேண்டிய தேநீரைப்பற்றிய வழிமுறலயைக் கேட்டு ஜோகும் ஆச்சரியமடைந்தார்..

தமது சொற்களின் மூலம் சோல்கரின் மனத்தில் நம்பிக்கையையும், பக்தியையும் தோற்றுவிக்க பாபா விரும்பினார்.... அவருடைய விரதப்படி தாம் கற்கண்டைப் பெற்றுக் கொண்டதையும், உணவில் சர்க்கரை பயன்படுத்தக் கூடாது என்ற அவரது இரகசியத் திட்டத்தையும் தாம் முழுமையாக அறிந்திருப்பதாக, அங்ஙனம் இருந்தபடியே, பாபா குறிப்பிட்டார்... பாபா கூறியதன் பொருளாவது, "என் முன்னர் பக்தியுடன் உங்களது கரங்களை நீட்டுவீர்களேயானால்,யான்  இரவும், பகலும் உங்களுடன் கூடவே  யான்  இருப்பேன்....யான்  இந்த தேகத்தால்  இங்கேயே இருப்பினும், ஏழ்கடலுக்கப்பால் நீங்கள் செய்வதையும் நான் அறிவேன்.  இந்த பரந்த உலகில்  நீங்கள் விரும்பியபடி எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள்...நான் உங்களுடனேயே இருக்கிறேன்....உங்களது இதயமே எனது இருப்பிடம்.  நான் உங்களுக்குள்ளேயும்  இருக்கிறேன்...உங்களது இதயத்துள்ளும், அதைப் போன்ற சகல ஜீவராசிகளின் இதயங்களினுள்ளும் இருக்கும் என்னையே எப்போதும் வணங்குவீர்களாக..! என்னை இங்ஙனமாக அறிபவர்  உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவரும், அதிஷ்டசாலியும் ஆவர்....

இவ்வாறாக, பகவானால் அழகிய அதி  முக்கியமான  சூட்சம  உபதேசமொழி எளிமையான வார்த்தையால்  சோல்கருக்கு உபதேசிக்கபட்டது...

🔥பகவான் தன்னுடைய ஞான திருஷ்டியால்,அங்கேயுள்ள  இரண்டு  பல்லிகளின்  அதிநுட்பமான  சூட்சம உரையாடல் பற்றி தன் பக்தர்களிடம் அறிவுருத்துகின்ற அனுபவ விளக்கவுரை... 🔥

இரண்டு சிறிய பல்லிகளின் கதையுடன் இவ்வத்தியாயத்தை முடிப்போம்...ஒருமுறை பாபா மசூதியில் அமர்ந்திருந்தார்...  ஒரு பக்தரும் அவர் முன்னர் அமர்ந்திருந்தார்....ஒரு பல்லி, 'டிக்..!.. டிக்..! துடிப்பை விளைவித்தது..  ஆச்சரியத்தால் உந்தப்பட்ட அடியவர், பல்லியின் இத்துடிப்பு, ஏதேனும் பின்விளைவு காட்டுதல் குறித்ததா...?அது நல்ல அடையாளமா அல்லது தீய சகுனமா என்று பாபாவைக் கேட்டார்.. அப்பல்லியின் சகோதரி அதனைப் பார்க்க ஓளரங்காபாத்திலிருந்து வந்துக்கொண்டு இருப்பதாகவும் அதனால் அப்பல்லி மிகவும் மகிழ்ச்சியுற்றிருக்கிறது என்றும் பாபா கூறினார்...பாபா கூறுவதன்  அர்த்தம் புரியாமல் அவர் மௌனமாய் அமர்ந்து இருந்தார்... உடனேயே  ஓளரங்காபாத்திலிருந்து குதிரையில் ஒரு பெருந்தகை பாபாவைப் பார்க்க வந்தார்....அவர் மேற்கொண்டு பயணத்தைத் தொடர விரும்பினார்....ஆனால் அவரது குதிரை பசியாய் இருந்தபடியால், நகர்வதாக இல்லை...அதற்குக் கொள்ளு தேவைப்பட்டது.. கொள்ளு கொண்டு வருவதற்காகத் தனது தோளில் இருந்து ஒரு பையை எடுத்தார்.  தூசியைப் போக்குவதற்காகத் தரையில்  கொட்டினார்... அதிலிருந்து ஒரு பல்லி விழுந்தது....எல்லோர் முன்னிலையிலும் அது சுவரில் ஏறியது... கேள்விகேட்ட பக்தரிடம் அப்பல்லியை நன்றாகக் கவனிக்கும்படி பாபா கூறினார்...அது உடனே தனது பெருமையான சூதுகல  நடையுடன் தன் சகோதரியை நோக்கிச் சென்றது...நீண்ட காலத்திற்குப் பின்னர் இரண்டு பல்லிகளும்  சந்தித்தன....

ஒன்றையொன்று  முத்தம் கொடுத்துக் கட்டியணைத்துக் கொண்டன...சுற்றிச்சுற்றி ஓடி வந்து அன்பால் நடனம் ஆடின... சீரடி  எங்கே இருக்கிறது..? ஓளரங்காபாத் எங்கே இருக்கிறது..? குதிரையிலிருந்த மனிதர் எங்ஙனம் ஓளரங்காபாத்திலிருந்து வந்தார்..?  இரண்டு சகோதரிகள் சந்திக்கப்போவதை எவ்வாறு  பாபா ஞான திருஷ்டியால்  அறிந்தார்.. இவையெல்லாம் உண்மையிலேயே மிகவும் ஆச்சரியமானதும், பாபாவின் எங்கும் நிறைந்த சூட்சம பேராற்றலையும், பேரறிவையும் உணர்ந்து பகவானை  மேன்மேலும் சரணாகதி அடையவே இங்கு உரைக்கப்பட்டுள்ளது..

🔥குறிப்பு....🔥

எவரொருவர் இவ்வத்தியாயத்தை பக்தியுடன் படிக்கின்றாரோ அல்லது தினமும் கருத்தூன்றிப் பயில்கின்றாரோ, சத்குரு சாய்பாபாவின் அருளால் அவரது அனைத்து ஆழ்துயர் நிலைகளும் அகற்றப்படும்....

ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🏻🙏🏼

ஸ்ரீ சாயீயைப் பணிக...அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்...மங்களம்..🙏🏻🙏🏼🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🏻🙏🏻🙏🏼

https://youtube.com/channel/UC_StOEm4cGxRNjlt1vSjs8A

https://youtube.com/playlist?list=PL2wMPZhligflE6VZJndcQUXqkIxidNcmW

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...