ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

சனி, மே 08, 2021

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏🙏 ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்..

 ஓம்  ஶ்ரீ  சாய்நாதாய நமஹ...🙏🙏🙏

ஶ்ரீசீரடி  சாய்பாபாவின் உபதேச  பொன்மொழிகள்....🙏🙏🙏

நம்முடைய மனமே நமக்கு விரோதி என்பதும்,  பரம விரோதியும் செய்ய நினைக்காத கெடுதல்களையும் உற்பத்தி செய்யும் என்பதும், எல்லோருக்கும் நிச்சயமாகத் தெரியும்.. மற்றவர்களுக்கு நமது எண்ணங்கள் தெரியாமல் இருக்கலாம்...ஆனால்  மகாராயரான பகவானுக்கு  உடனே தெரிந்துவிடும்...நம் மனத்தில் குதர்க்கமான எண்ணங்கள் எழலாம்...அவற்றை அறவே விடுத்து, பாபாவின் பாதங்களின்மேல் மனத்தைச் செலுத்தினால், மனம் ஒருமுகப்படுத்தல் விருத்தியடையும்... ஒருமுகப்பட்ட மனத்தில் சாயீ சிந்தனை பின்தொடரும்...இதைத்தான் பகவான்  நம்மைச் செய்ய வைக்கிறார்....எடுத்த காரியமும் தடங்கலின்றி நிறைவேறுகின்றது...

இவ்வுலகம் அழியும்வரை புலன்கள் அவற்றுக்குரிய நாட்டங்களால் ஈர்க்கப்பட்டே தீரும்.. இதைத் தடுக்க இயலாது...ஆனால், அந்த நாட்டங்களை பாபாவின் பாதங்களில் சமர்ப்பித்துவிட்டால் அவை இயற்கையாகவே வலுவிழந்துவிடும்...உன் அகந்தை, ஆணவம், இறுமாப்பு இவைகளை விடுத்து, சற்றே குனிந்து மலர்களை பொறுக்கி மாலையாக்கி, மீண்டும் நீ எம்மை  நோக்கி வருவீராக...நான் இன்னும் உம்மை  கூராக்குவேன்...உம்மை  எனக்கு மிகவும் பிடிக்கும்...தயவு செய்து என்னிடம் நடித்து விடாதீர்கள்.... பரவசப்படாதே..!  நீ புண்ணிய ஆத்மாவாக உன்னை மாற்றிக் கொண்டால், நான் நினைத்தது மிக விரைவில் நடக்ககூடும்...நீர் வேண்டியது அனைத்தும் கிடைக்கப்பெறும்....

ஓம் ஶ்ரீ சாய்ராம்....🙏🙏🙏

ஶ்ரீசாயீ சர்வ சக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏🏻🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...