ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

சனி, மே 08, 2021

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏 ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்...

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்...🙏🏻🙏🏻

வியாதிகளுக்கும், கவலைகளுக்கும், வலிகளுக்கும், இன்னல்களுக்கும் எங்கு இடமில்லையோ, யாருமே பசியாலும், தாகத்தாலும், முதுமைபற்றிய பயத்தாலும் எங்கு வருத்தப்படுவதில்லையோ, எவ்விடத்தில் மரணபயம் இல்லையோ, எவ்விடத்தில் விதிக்கப்பட்டது, விதிக்கப்படாதது என்னும் பேதத்திற்கு இடமில்லையோ, எவ்விடத்தில் ஜீவன்கள் பயமற்று உலவுகின்றனவோ, அவ்விடமே துவாரகை (சொர்க்கம்) என்பதை அறிவீராக....           

புலனின்பங்களை அனுபவிப்பதற்குச் செல்வம் தேவை. செல்வத்தை தேடுவதற்கு வானளாவிய முயற்சிகள் எடுக்கப்படும்போது சுகபோகங்களுக்கான தாகம் மேலும் மேலும் அதிகரிக்கிறது...அதிலிருந்து விடுபடவே முடிவதில்லை!...நிலைமை இப்படி இருக்க உன்னுடைய பணத்திலிருந்து  நீ மனமுவந்து  ஒரு  பைசா கொடுத்தாலும்  அது எனக்கு ஒரு லட்சத்திற்கு ஈடாகும்.... கொடுப்பதை மனமுவந்து கொடுக்கவேண்டும்.... உனக்கு எது சொந்தமோ அதிலிருந்து எவ்வளவு சிறியதானாலும், அதை பெறுவதில் நான் திருப்தி அடைகிறேன்....

தேவைப்படும் நேரத்தில் மிகப் பணிவாகவும், இரக்கமாகவும், கெஞ்சுகிறாய்... காரியம் கைகூடிய பிறகு அதைப்பற்றிச் சிறிதும் கவலைபடுவதில்லை! என் பக்தர்களில் எவர் கடன் பாக்கி இல்லாதவரோ அவரே எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறார்"... 

ஸ்ரீசீரடி சாய்பாபா...🙏

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...