ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏🏼
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் சாய்சரித்திர அருள்மொழிகள் மற்றும் சுய விழிப்புணர்வு போதனைகள் இங்கே...🙏🙏🏼🙏🏼
எனதருமை குழந்தைகளே...உங்களுக்கு எதிராக எத்தனை பேர் செயல்படுகின்றார்கள் என்பதைப் பற்றி பொருட்படுத்த வேண்டாம்... மனதைக் குழப்பும் பிரச்சனைகள் விரைவில் சரியாகி விடும் என்று மனதில் கூறி விட்டு வேலையைப் பாருங்கள்..விரைவில் எங்களது வாழ்வில் அதிசயம் நடக்கும் என்றும், ஏற்படப் போகும் அதிசயங்களுக்கு நன்றி என்று ஆழமாகக் கூறிக்கொண்டே இருந்தால் போதுமானது...அது எப்படி சரியாகும் என்பதன் வழிகளைப் பற்றியெல்லாம் நீங்கள் ஆராய வேண்டாம்....
நமக்கு ஒரு சில வழிகள் தான் தெரியும், ஆனால் பிரபஞ்சத்திற்கு ஆயிரம் வழிகள் இருக்கும்.... அது எப்படியும் சரி செய்து விடும்...உங்கள் வார்த்தைகள் மற்றும் எண்ணங்கள் பிரபஞ்சத்திற்கு கட்டளைகளாக அனுப்பப்பட்டு விரைவில் சரி செய்து விடும்...உங்களைச் சுற்றி எதிராக நடப்பதை பற்றி கவலை பட வேண்டாம்.. பயம், குழப்பங்கள் வரும் போது பதட்டம் இல்லாமல் ஆழ்ந்த அமைதியாக இருக்கக் கற்று கொள்ளுங்கள்...நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன், விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்படப்போகும் அனைத்து அதிசயங்களுக்கும் நன்றிக்கூறவும்...
பிரபஞ்சத்திற்கு நன்றி என்று ஆழமாக மனதில் கூறிக்கொண்டே இருங்கள்... நிறுத்தாமல் கூறிக்கொண்டே இருங்கள்.. உங்கள் வார்த்தைகள், நம்பிக்கையான உணர்வுகள், சந்தோஷமான எண்ணங்கள் போதும் எல்லாவற்றையும் சரி செய்து விடும்...உங்களின் நேர் மறையான சக்தி இந்த பிரபஞ்சத்தை காட்டிலும் சக்தி வாய்ந்தது என்பதை மட்டும் உணருங்கள்...
ஓம் ஸ்ரீ சாய்ராம்...🙏🙏🙏🏼
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியான பீடம்...🙏🏼🙏🏼🙏🏼
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக