ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

ஞாயிறு, மே 09, 2021

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏻🙏🏻🙏🏻 ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்....

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏻🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாய்பாபாவின்  சாய்சரித்திர உபதேச அருள்மொழிகள் மற்றும் சுய விழிப்புணர்வு போதனைகள்...🙏🏼🙏🏼🙏🏼

🔥🔥நான் சிலகாலமாக மிகுந்த கஷ்டத்தில் இருந்து வருகிறேன். என்னுடைய பிரார்த்தனைகளுக்கு பாபா செவி சாய்க்காததால் பல சமயங்களில் என்னுடைய நம்பிக்கையை இழக்கிறேன்..பாபாவின் உதவியை நாடி நான் பிரார்த்தனை செய்தபோதிலும், பாபா அதற்க்கும் செவி சாய்த்ததாகத் தெரியவில்லை... பாபாவிடமிருந்து எனக்கு ஏன் எந்த உதவியும் கிடைக்கவில்லை.? என்று நினைப்பவரா நீங்கள்....இதோ கேளுங்கள் ....🔥🔥

பகவான் குழந்தைகளே  சற்று கவனியுங்கள்.. தன்னுடைய பக்தர்களுக்கு  சீரடி பகவான் ஆசியையும், அனுக்கிரகத்தையும்  பேதம் பார்க்காமல் அனைவருக்கும்  ஒரே மாதிரித் தான்  வழங்குகின்றார். சீரடி பகவான் கேட்டதை வழங்கும்  கற்பக விருக்ஷமாக இருந்து வழங்குவது  என்பதில் பாரபட்சம் இல்லாமல் இருக்கின்றார்...ஆனால் குரு வழங்குவதைப் பெற தகுதியை வளர்த்துக் கொண்டோமா அல்லது அவர் காட்டிய சத்திய நெறி முறைகளைப் பின்பற்றி, அதனை வாழ்வியல் இயக்கத்தில் செயல்படுத்தினோமா அல்லது  ஆத்மார்த்தமான, உண்மையான, நிலைமாறாத  பக்திச்  செலுத்தி, முழுமையாகத் தன்னை அவரின்பால் ஒப்படைத்தோமா என்று, நாம் நம்மை ஆராய்தல் வேண்டும்....

குரு மற்றும் இறை நமக்கு அனைத்தையும் வழங்கத் தானே காத்துக் கிடக்கின்றது..ஆனால் நாம் தான், நான் என்ற அகந்தை, அகங்காரம் என்ற  மாயையினால் தன்னை மறைத்துக் கொண்டு குருவின் ஆசியைப் பெற தகுதியற்றவர்களாக  இருக்கின்றோம்...நமக்கு கிடைக்காதவை கூட ஒரு விதத்தில் நன்மையாக முடியும்...ஆதிசக்தி படைத்த  தன்  குழந்தைகளுக்கு  என்ன வழங்க வேண்டும் என்பது தெரியாதா...நம்மைக் கேட்டா அனைத்தையும் படைத்து கொண்டாடி இந்த களத்தை அலங்கரித்தது..நாம் கேட்டால் அவர்கள் வழங்குவதில் சிறிது குறைவாகவே இருக்கும்...ஆனால் நாம் கேட்காமலேயே நம்மை அறிந்து, அவர்கள்  நமக்குரியதை வழங்கும் போது அதன் வெளிப்பாடு அபரிமிதமாக, நீங்கள் கேட்க வேண்டும் என்று நினைத்ததை விட உங்களை வியப்பில் ஆழ்த்தக் கூடிய வகையில் இருக்கும்...இது தான் நிதர்சனமான உண்மை ....

ஆதி மூல திரு ஆற்றலின் இருப்பிடமே, குரு என்ற பேராற்றலின் தன்மையாக தாய்மை உணர்வோடு, நம்முன்னே பிரசன்னமாகி இருக்கின்றது...குரு என்பவர், நமக்கு  அனைத்தையும் வழங்கி நாம் பிறவி எடுத்ததன் வீர்யத்தை உணர்த்தி, மனித உயிர்களுக்கு என்று வகுத்த ஆதி மூல சத்தியக்  கோட்பாடுகளைப் பின்பற்றிட வழிமுறைகளை சூட்சமமாக  உணர்த்திட, நம்மோடு பாதுகாவலனாக  இருந்துக்  கொண்டு வழிநடத்துகின்றார்..ஆனால் நாம் அதனை விழிப்புணர்வோடு இருந்தால்  மட்டுமே,அவர் உணர்த்துகின்ற வழிமுறைகளை உள்வாங்க முடியும்..உணர்ந்து கடைப்பிடிக்கவும் முடியும்..இதற்குத் தான் நான் என்ற அகந்தையின்றி, சாட்சியாக விழிப்புணர்வோடு,எதன் மீது பற்று வைக்காமல்  இயங்கச் சொல்கின்றார்.

ஏனென்றால் நீங்கள், எந்த செயலைச் செய்யும் போதும், நான் தான்  அனைத்தையும் செய்கின்றேன் என்று இருமாப்போடு செயல்படும் போது, நீங்கள் இறைத் தன்மையை விட்டு சற்று விலகுகின்றீர்கள். .இந்த நான் எனது என்ற தன்மையானது, உங்கள் குருவின் பேராற்றலை செயல்பட அனுமதி அளிக்காமல் போகின்றீர்கள்.. இங்கே ஒரு அகங்கார மாய ஆதிக்கத்தை,அதாவது நான் என்ற தன்மையை எடுத்து விட்டீர்கள்...மீண்டும் அறிவுருத்துகின்றேன்...இது நான் எனது என்ற தன்மையில் என்னுடைய வேலையைத் தானே பார்த்தேன்..அவ்வாறுப் பார்த்தால் தானே கடமைகளை முடிக்க முடியும் என்று நீங்கள் நினைக்கலாம்.தவறில்ல..

ஆனால்  செயல்பாடுகளை பற்றில்லாமல்  மேற்க்கொள்ளல் வேண்டும்..ஆனால் நான் ..எனது என்ற தன்மையினால், குருவை உங்களுக்காக இயங்க வைப்பதில் தடையை  நீங்களே ஏற்படுத்துகிறீர்கள்..ஏனேன்றால் நான்..எனது.. என்ற நிலையில் எதைச் செய்தாலும் அங்கே அந்தச் செயலுக்கு நீங்கள் பொருப்பாளியாகிறீர்கள்..சாட்சிப் பாவனையைக் கடைப்பிடிக்கவில்லை... உங்களின் அனைத்து செயலையும் பற்றுடன்  பற்றிக்கொள்கிறீர்கள்.  அதாவது நான் ..எனது. என்ற அகந்தையில், நீங்கள் இறையாற்றலை எங்கே அனுமதிக்கிறீர்கள்... இடைவெளியே கொடுக்கவில்லை...

ஆகையால் தான்  குருவானவர், எதனையும் விழிப்புணர்வோடு பற்றில்லாமல்  சாட்சியாக செயல்பட  முயற்சி செய்யுங்கள் என்று தாரக மந்திரமாக செப்புகின்றனர்...அனைத்தையும் படைத்த மூலப் பொருளோன் பார்த்துக் கொள்வான்...நம்மை இயக்குவான் ...நம்மை இயங்கவும் வைப்பான்...நாம் இக வாழ்க்கை என்ற மேடையில் நடிக்க வந்த  நடிகனாக, அவன் வகுத்தப் பாதையில் பயணிகளாக இருக்க வந்தவர்கள் என்பதை ஆழமாகமனதில்  பதியம் போடுங்கள்..நாம்  ஆத்மார்த்தமாக, நம்பிக்கையோடும்,  பேரன்போடும், அவனின் பால்  அனைத்தையும் ஒப்படைத்து விட்டு   நாம் குருவை  நமக்குள்  இயங்க அனுமதிக்க வேண்டும்...இவ்வாறு முழுதும் நம்மை  குருவிடம்  ஒப்படைத்நு சரணாகதி அடைந்தால் நாம் பெறப் போகும் பலன்கள் ஏராளமாக இருக்கும்...அது நிலைத்து நிற்க கூடியதாக இருக்கும்...

சத்குருவானவர்  தன் குழந்தைகளுக்காக  செய்யும் எல்லா செயல்களையும்,  பக்தர்கள் அந்தந்த நேரத்தில் அறியமாட்டார்கள்..ஆனால்  பக்தருடைய முன்வினைகளை ( முந்தைய கர்மாக்களை ) நன்கு அறிந்த பாபா, அமைதியாக பக்தரிடம் மனமாற்றத்தை ஏற்படுத்த பல்வேறு நிலைகளில் முயற்சி செய்கின்றார்...அதனை விழிப்புணர்வோடு கவனித்தால் போதுமானது. பாபாவின் ஆசிகளின் பலனை ஒருவர் பெற வேண்டுமானால் அதற்கு மிகுந்த நம்பிக்கையும், பொறுமையும் தேவைபடுகிறது.... இக்காரணத்தினால் தான் சிரத்தாவுடன் கூடிய சபூரி அதாவது நம்பிக்கையுடன் கூடிய பொறுமை என்பதை பாபா முக்கிய தகுதிகளாகக் கூறியுள்ளார். ஒன்று, மற்றொன்று இல்லாமல் நிலைக்க முடியாது. ..

ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தை தினமும் படியுங்கள்... காதால்  கேளுங்கள்...முடிந்தளவு மீண்டும் மீண்டும் மனதில் பதியும் படி  சத்சங்க அருள்மொழிகளை  உருவேற்றுங்கள்.. நீங்கள் ஆத்ம மலர்ச்சிப் பெற்ற  சாயீன்  அருள்மொழிகளை, சத்திய வார்த்தைகளை குறைந்தது நான்கு பேருக்காவது எடுத்துரையுங்கள்..இதுவே குருவிற்கு நாம் செய்கின்ற  மானசீக அபிஷேகம்..சத்சரிதத்தை  விழிப்புணர்வுடன் பாராயணம் செய்யும் போதே, உங்களுடைய பல  கேள்விகளுக்கு பாபா தனக்கே உரித்தான முறையில்  சத்சரித வாசிப்பின் மூலமாகவே சூட்சமமாக பதில் கூறி வருகின்றார்...எதிலும் சற்று சுய விழிப்புணர்வுடன் இருப்பீராக...

ஓம் ஶ்ரீ  சாய்ராம்.....🙏🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...