ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

சனி, மே 08, 2021

🔥🔥ஶ்ரீசீரடி பகவான் எவ்வாறு அனைத்து பக்தர்களையும் பேதம் பார்க்காமல் சமமாக பாவித்து வழிநடத்தினார் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக ரோஹிலாவின் கதை.....🔥🔥

ஓம் ஶ்ரீ சாய்நாதாய  நமஹ....🙏🙏🙏

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்...🙏🙏🙏

🔥🔥ஶ்ரீசீரடி  பகவான் எவ்வாறு அனைத்து பக்தர்களையும்  பேதம் பார்க்காமல்  சமமாக  பாவித்து  வழிநடத்தினார்  என்பதை எடுத்துக்காட்டும்  விதமாக   ரோஹிலாவின் கதை.....🔥🔥

சீரடி பகவானின் மீது ஆத்மார்த்தமான பக்தி கொண்டவர் ரோஹிலா என்ற பக்தர்..இவர்    உயரமாகவும், வாட்டசாட்டமாகவும், காளையைப் போன்ற வலிமை உடையவராக இருப்பார்... இவர் பகவானை தரிசிக்க சீரடிக்கு  வந்தார்....  நீண்ட கஃப்னி என்னும் உடை அணிந்திருந்தார்.. பாபாவிடமுள்ள அன்பினால் அங்கு தங்கியிருந்தார்...இரவும், பகலும் கலிமாவை (திருக்குரானின்) பாடல்கள் சத்தமாகவும், குரூரமாகவும் ஒப்பித்து 'அல்லாஹு அக்பர்' (கடவுள் பெரியவர்) என்று கத்துவான்....  சீரடியின் பெரும்பாலான மக்கள் பகலெல்லாம் தங்கள் வயலில் வேலை செய்துவிட்டு, இரவு வீட்டிற்குத் திரும்பும்போது ரோஹிலாவின் குரூர இரைச்சல்களாலும், கத்தல்களாலும் வரவேற்கப்படுவார்கள்...அவர்கள் தூங்க முடியாமல் மிகுந்த தொல்லையும், அசௌகரியமும் அடைந்தனர்.... மௌனமாக இத்தொந்தரவைச் சில நாட்கள் பொறுத்திருந்து, அவர்களால் இனிமேல் இத்துயரம் படமுடியாது என்னும் நிலை வந்தவுடன், பாபாவை அணுகி இதைக் கவனித்து ரோஹிலாவின் தொந்தரவை நிறுத்தும்படி வேண்டிக்கொண்டனர்..... 

பகவான் அவர்களின் வேண்டுகோளைக் கவனிக்கவில்லை..மாறாக அவர்களைக் கடிந்தார்...அவர்களைத் தங்கள் வேலைகளைக் கவனிக்கும்படியும், ரோஹிலாவைக் கவனிக்கவேண்டாம் என்றும் கூறினார்... மேலும் பகவான் கூறினார், ரோஹிலாவுக்கு மிகவும் கெடுதலான மனைவி ஒருத்தி இருக்கிறாள் என்றும், அவள் உள்ளே வரமுயன்று ரோஹிலாவையும், தம்மையும் தொந்தரவு செய்கின்றாள்..ஆனால் ரோஹிலாவின் பிரார்த்தனைகளைக் கேட்டவுடன் அவள் உள்ளே  நுழையத் துணியவில்லை. ஆதலால் அவர்கள் மன அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கிறார்கள் என்றும் கூறினார்... உண்மையில் ரோஹிலாவுக்கு ஒரு மனைவியும் கிடையாது...அவனுக்கு மனைவியாக பாபா குறிப்பிட்டது துர்புத்தி அதாவது கெட்ட எண்ணங்களாகும்...ஏனெனில் வேறெதைக் காட்டிலும் கடவுளிடம் வேண்டிக்கொள்வதிலும், முறையிட்டுப் பேரிரைச்சல்கள் செய்வதையும் பகவான்  விரும்பினார்...அவர் ரோஹிலாவின் பக்கம் இருந்து ரோஹிலாவின் இரைச்சல்களையும், கூக்குரல்களையும் பொறுத்துக் கொள்ளுமாறும் அவை சீக்கிரம் மறைந்துவிடும் என்றும் கூறினார்....அங்கு கூடியிருந்த மக்களும் பகவான் உத்தரவை ஏற்றுக்கொண்டனர்...உண்மையான  பக்தியுடனும் ஆத்மார்த்த அன்புடனும்  அனுகுகின்ற பக்தர்களை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு ஆசி வழங்குகின்றார்...

ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...