ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🏻🙏🏻🙏🏻
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் சாய்சரித்திர உபதேச அருள்மொழிகள் மற்றும் சுய விழிப்புணர்வு போதனைகள்.....🙏🏼🙏🏼🙏🏼
🔥🔥பேராசை, மனிதர்களை பல வாய்ப்புகளைக் காட்டி ஈர்க்கிறது. ஒன்று இல்லாவிட்டால் மற்றொன்றில் மாட்டிக்கொள்ள வைப்பதே அதன் திட்டம். அதனால்தான் பகவான் ‘எப்போதும் பேராசை இல்லாதவர்களாக இருங்கள்’ என்று உபதேசம் செய்துக் கொண்டேயிருந்தார்...உலகில் எல்லோரையும் அலைக்கழிக்கும் பேராசையை தன் பக்தர்கள் பக்கம் வரவிடாதபடி காத்தார்...🔥🔥
உலகில், பாதுகாப்பாகத் தெரியும் வழிகளின் முடிவில் அபாயம் மறைந்திருக்கும்.... அழகாகவும் கவர்ச்சியாகவும் தெரிபவை பலவற்றின் மறுபக்கத்தில் குரூரமும், பயங்கரமும் நிறைந்திருக்கும்... வெளிப்புறமாகக் கண்டு அறியமுடியாத பல சூழ்ச்சிகளிலும் சிக்கல்களிலும் மாட்டிக் கொள்ளும் அபாயம் அனைவருக்கும் எப்போதும் இருக்கிறது...ஆனால், பாபாவுடைய பக்தர்களின் வாழ்க்கை வேறுவிதமானது. `சாயீ எப்போதும் நம்மோடு இருக்கிறார்’ என்கிற நம்பிக்கைதான் அவர்களை வழிநடத்துகிறது...
ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏻🙏🏻🙏🏻
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக