ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்...🙏🏻🙏🏻🙏🏻
🔥 உங்களுடைய மனதில் துன்பத் துயரங்கள், அச்சம், பயம், சோகம், விரக்தி போன்றவைகள் அழுத்துகிற வேளையில், பகவானை நினைத்துக் கொள்ளுங்கள்..சாயீன் நாமத்தை உச்சரித்து வாருங்கள்... 🔥
எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று புலம்பாதவர்களே இல்லை. ‘நான் ஒரு தப்பும் செய்யவில்லை...’ என்று கண்ணீர் விடாதவர்களே இல்லை எனலாம்...எவ்வளவு சம்பாதித்தும் நாலுகாசு சேர்க்க முடியலையே’ என்று கலங்காதவர்கள் யார்தான் இருக்கிறார்கள்?..ஆகவே இது போன்ற தருணங்களில், எதற்கும் கவலைப்படாமல் மேன்மேலும் பகவானுடன் ஆழமாக பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்....
தினமும் காலையிலும் மாலையிலும் சீரடி பாபாவின் காயத்ரி மந்திரத்தைக் கூறவும்.... மனக்கலக்கத்தில் இருந்து உங்களை விடுவித்து , உங்களுடைய துக்கத்தையெல்லாம் போக்கி அருளுவார் பகவான்.... உங்கள் மீது விழுந்த தேவையற்ற பழிகளைப் போக்கி மாற்றி, அப்பழுக்கில்லாதவர் என்பதை உலகுக்கு உணர்த்துவார்....
சீரடி பகவான் காயத்ரி மந்திரம் இதோ உங்களுக்காக...
🔥ஓம் ஶ்ரீ சீரடி சாயீநிவாஸாய வித்மஹே சர்வ தேவாய தீமஹி தந்நோ சர்வ ப்ரசோதயாத் 🔥
மேலும் மேற்க்கண்ட பகவானின் தியான சுலோகத்தைக் கூறி பத்து நிமிடமாவது அமர்ந்து, கண்கள் மூடி, பகவானை பிரார்த்தனை செய்யுங்கள்...
🔥 பத்ரி க்ராம ஸமத் புதம் துவாரகா மாயீ வாசினம் பக்தா பீஷ்டம் இதம் தேவம் சாயீ நாதம் நமாமி...🔥
மேற்க்கண்ட பகவான் சுலோகத்தையும் ஆத்மார்த்தமாக கூறி வாருங்கள் ...பகவானின் ஆசியும் அனுக்கிரகமும் எளிதாகக் கிடைக்கும்...
ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக