ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ..🙏🏼🙏🏼🙏🏼
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் சாய்சரித்திர அருள்மொழிகள் மற்றும் சுய விழிப்புணர்வு போதனைகள்..🙏🏼🙏🏼🙏🏼
🔥🔥இறை மற்றும் குருமார்களின் மீது நாம் வைக்கின்ற நம்பிக்கையின் மகத்துவத்தை உணர எளிய உவமான விளக்கம்....🔥🔥
நம்பிக்கை என்பது அழகிய நீரூற்று..🙏🏼
ஒருவன் மலை உச்சியில் இருந்த இயற்கை அழகை ரசித்துக்கொண்டி ருந்தான். ..திடீரென்று கால் தவறி அதள பாதாளத்தில் விழுந்த போது, தற்செயலாக பாறையின் விளிம்பில் நீட்டிக் கொண்டிருந்த ஒரு வேரைப்பற்றிக் கொண்டான்...பிடி தளர்ந்தால் கீழே விழுந்து உயிர் போகும் அபாயம்..! அவன் இது வரை கடவுளை நம்பியதில்லை. மரண பயத்தில் திடீர் கடவுள் நம்பிக்கை வந்தது... கடவுளை நினைத்து, நீ தான் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டினான்...அப்போது வானத்திலிருந்து ஒரு அசரீரி..!
அசரீரி : நீ என்னை நம்ப மாட்டாய்..!
மனிதன் : கடவுளே, என்னைக் கை விட்டு விடாதே... நிச்சயம் நம்புகிறேன்.
அசரீரி : எனக்கு நம்பிக்கை இல்லை.
மனிதன் : கடவுளே, உன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது... நீ தான் காப்பாற்ற வேண்டும்.
அசரீரி : சரி, உன்னைக் காப்பாற்றுகிறேன்... முதலில் நீ பிடித்திருக்கும் வேரை விட்டு விடு.
மனிதன் : வேரை விட்டு விட்டால் கீழே விழுந்து இறந்து விடுவேனே...?
அதன் பின் வானத்தில் குரல் எதுவும் கேட்கவில்லை...நம் மீது நாம் வைக்கும் நம்பிக்கை முக்கியம் என்றால், அதை விட முக்கியம், நாம் இறைவன் மீது வைக்கும் நம்பிக்கை என்பதை அறிவீர்களாக....
ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏻🙏🏻🙏🏼
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக