ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏻🙏🏻🙏🏼
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள் மற்றும் சுயவிழிப்புணர்வு போதனைகள்...🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
எமது குழந்தைகளே...முதல் கவளத்திலேயே ஈ விழுந்தது போல, சாதனையைத் துவங்கிய உடனே ஏதேதோ தடங்கல்கள், வேண்டாத எண்ணங்கள், வெறுப்புணர்வு போன்றவை ஆரம்பமாகின்றன.. அவைகள் கர்மாக்களின் வடிவங்களே...அதற்காக உங்கள் பாதையை மாற்றிக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை...அவற்றின் வழியில் அவைகளை வரவிடுவீராக....உங்கள் சித்தத்தை என் பாதங்களின் மேல் ஸ்திரமாக வைத்து விடுவீராக. சபல சித்தனாக இராதே.... உங்களுக்கு சந்தேகமற்ற விசுவாசம் என் மேல் இருந்தால் உங்கள் சாதனைகளில் உங்களை வெற்றி பெறச்செய்கிறேன். உங்களுக்கு அந்த சக்தியை கொடுக்கிறேன்...உங்கள் குறிக்கோளை அடையச் செய்யும் பொறுப்பு என்னுடையதாக இருக்கும். எப்படிப்பட்ட உதவி வேண்டுமானாலும் நான் உங்களுக்குச் செய்கிறேன். உங்கள் லட்சியம் நானாக இருக்கட்டும் என்பதை மட்டும் மறவாதீர்கள்..
ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏻🙏🏻🙏🏼
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக