ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼
ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாய வெளியீடு....🙏🏼🙏🙏🏼🙏🏼
🙏ஶ்ரீசாய் சத்சரித்திரம்🙏
🙏 அத்தியாயம்:: நாற்பத்தாறு (46 )🙏
🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய் சத்சரித்திரம் பாராயணம் செய்வதன் முக்கியத்துவமும், பெறப்போகும் நன்மைகள் என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்...இதில் ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத எழுத்திலும் வியாப்பித்து படர்ந்து இருக்கின்றது...
ஶ்ரீசாய் சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது..ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்.....
இவ்வாறாக நாம் அனைவரும் சாய் சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்..ஆகவே சாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்... நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக..🙏
🔥குறிப்பு..சாய் சத்சரித்திர வேதப் பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥
தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்.. மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்...இவ்வேத பாராயணத்தின் மூலமாக ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை அடையும் நிலையைப் பெறலாம்...
மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம்,நேர்மை, மனிதநேயம் போன்ற இறைப் பண்புகளைப் பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும் இந்த சாய் சத்சரித்திர வேதப் பாராயணம் துணைப்பு ரிகின்றது..மேலும் இப்பாராயணத்தின் மூலம் மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில் வெற்றி வாகை சூடலாம்...அவரவர்கள் விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும் ஒருசேரப்பெறலாம்..🙏
🙏அத்தியாயம் நாற்பத்தாறு (46)🙏
🙏முன்னுரை..🙏
சத்குருநாதர் சீரடி பாபா, தன்னை நாடிவந்து சரணாகதி அடைந்த பக்தர்கள் அனைவரையும், பேதம் பாராது தாய்மையுணர்வுடன் அரவணைத்து, எவ்வாறு உயரிய நிலையை அடைய வைத்தார் என்பதைப் பற்றிய மறைப்பொருள் சூட்சம விளக்கவுரை....
சத்குருநாதர் சீரடி பாபா, அண்ட சராசரத்திலும் நீக்கமற வியாப்பித்து நிறைந்திருக்கின்றேன் என்பதை நிரூபிக்கும் வகையில், தன் பக்தர்களான காகா சாஹேப் தீஷித் மற்றும் நானா சாந்தோர்கர் ஆகியவர்களின் அழைப்பு விடுத்த இல்லத் திருமண வைபவத்திற்கு ஷாமாவை அழைத்துச் செல்லுமாறு கூறி, மேலும் காசி,கயா மற்றும் பிரயாகைக்குச் சென்றப் பின்பு நான் ஷாமாவை விட முன்னரே சென்று அங்கிருப்போம் என்று அறிவுருத்தி, எங்கும் தான் வியாப்பித்து இருக்கின்றேன் என்பதை, நாம் அனைவரும் உணர வைத்த நிகழ்வின் உவமான விளக்கவுரை....
சீரடி பாபா, ஒரு ஆட்டு மந்தையை தான் கண்டபோது, தன் கவனத்தை ஈர்த்த இரண்டு ஆடுகளை அதிக விலைக் கொடுத்து வாங்கினார்.. அதனைப் பார்த்தவுடன் தாத்யா கோதே மற்றும் ஷாமாவும் ஏன் இவ்வாறு அதிகமாக ரூபாயைக் கொடுக்கின்றீர்கள் என்று விளக்கம் கேட்டதற்கு பாபா கூறியப் பதிலுரையைப் பற்றிய விளக்கவுரை..
மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளைப் பற்றி ஒவ்வொன்றாக இங்கு கீழேக் காண்போம்....
ஓ..! சாயீநாதா..எங்களின் சத்குருநாதரே.. தங்களின் பாதக் கமலங்களும், தங்களைப் பற்றிய நினைவுகளும், தங்களது தரிசனமும் புனிதமானவை...அவை எங்களை கர்ம வினை போராட்டங்களிலிருந்தும், அனைத்து அறியாமை தன்மைகளிலிருந்தும், மாயைச் சுழற்சியிலிருந்தும் எங்களை விடுவிக்கிறது... எங்களுக்குத் தங்கள் ரூபம் தெரியாமலிருந்தாலும், இப்போதும் அடியவர்கள் தங்களை நம்பினால், பிரத்தியட்சமான அனுபவங்களை உடனே தங்களிடமிருந்து பெறுகின்றார்கள்..
கண்களினால் தென்படாத சூட்சமமான நூலால், தாங்கள் அருகிலும், தொலைவிலுள்ள பக்தர்களைத் தங்கள் பாதகமலங்களுக்கு ஈர்த்து இழுத்து, அன்பும் பாசமுமுள்ள தாயாரைப் போல மிகுந்தக் கனிவுடன் அரவணைக்கின்றீர்கள். தாங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை அடியவர்கள் அறியவில்லை என்றாலும், தாங்கள் அவர்களின் அருகிலேயே இருந்து, அவர்களுக்கு உதவி புரிந்து ஆதரித்து ஆசி வழங்குகின்றீர்கள் என்பதைக் கடைமுடிவாக ஒவ்வொரு பக்தனும் உணர்ந்துக் கொள்ளும்படி அவ்வளவு சாமர்த்தியமாக நூலை இழுக்கின்றீர்கள்...
ஒவ்வொரு மனித உயிரும், தன்னுடைய அகங்காரத்தின் காரணமாக அதாவது புத்திசாலிகள், அறிவாளிகள், கற்றறிந்தோர் ஆகியோர்கள் அனைவரும் சம்சாரக் குழியில் விழுகின்றார்கள..ஆனால் மிகவும் ஏழ்மையான, சாதாரண பக்தர்களைத் தங்கள் சக்தியினால் காப்பாற்றுகிறீர்கள்.. ஆன்மஸ்வரூபமாகவும், யாரும் அறியாதபடியும், எல்லா லீலைகளையும் புரிந்துவிட்டு, அவற்றுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாதது போல் தோற்றமளிக்கின்றீர்கள்... தாங்களே செயல்களைச் செய்கின்றீர்கள்.. ஆனால் செய்யாதவரைப் போன்று காட்சியளிக்கின்றீர்கள்..ஒருவருக்கும், ஒருபோதும் தங்கள் வாழ்க்கையைப் பற்றித் தெரியாது..எனவே எங்களது பாவங்களைப் போக்கும் எங்களுக்கு உண்டான சிறந்த வழி, மனம், மொழி, மெய் இவற்றால் தங்கள் பாதார விந்தங்களைச் சரணடைந்து தங்களது நாமத்தை எப்போதும் ஸ்மரணம் செய்வதேயாகும்...
அடியவர்களின் ஆசைகளைத் தாங்கள் பூர்த்தி செய்கின்றீர்கள்....பற்றற்றவர்களுக்குப் பேரானந்தப் பெருநிலையை அளிக்கின்றீர்கள்... தங்கள் இனிமையான நாமத்தை ஸ்மரணம் செய்வதே அடியவர்களுக்கு மிகமிக எளிதான சாதனமாகும்...இச்சாதனங்களால் ராஜச, தாமசப் பண்புகள் மறைந்து சத்துவ குணமும், நேர்மையும், சத்தியப் பண்புகளையும் அடியவர்கள் அடைகின்றனர்.. விவேகம், பற்றின்மை, ஞானம் முதலியவையும் நம்மை ஆட்கொள்கின்றது. பின்னர் நாம், நமது ஆன்மாவுடனும், குருவிடமும் ஒன்றிவிடுவோம்.. (இரண்டும் ஒன்றே) இதுவே குருவிடம் பூரண சரணாகதி அடைவது என்பதாகும்...மேலும் நமது மனம் அமைதியும், சாந்தியும், பற்றின்மையும் பெறுவதே இதற்கான ஒரே தீர்விற்கான அடையாளமாகும்...இச்சரணாகதியானது, பக்தி, ஞானம் இவற்றின் பெருமையும், தனித் தன்மையும் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.... ஏனெனில் அமைதி, பற்றின்மை, புகழ், முக்தி முதலியவை அதைத் தொடர்ந்து வருகின்றன...
ஒரு அடியவரை பாபா ஏற்றுக்கொண்டால், அவரை முக்காலமும் தொடர்கின்றார்..இரவும், பகலும், வீட்டிலும், வெளியிலும் அவருடனேயே இருக்கின்றார்...அவர் விரும்பியவாறு எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும்... ஆராய்ச்சிக்கும், அறிவுக்கெட்டாத வகையில் ஏதாவது ஒரு ரூபத்தில் தன் பக்தர்களுக்கு முன்பாகவே சென்று பாபா அங்கு இருக்கிறார். கீழ்வரும் கதை இதை விளக்குகிறது.
🔥சத்குருநாதர் சீரடி பாபா, அண்ட சராசரத்திலும் நீக்கமற வியாப்பித்து நிறைந்திருக்கின்றேன் என்பதை நிரூபிக்கும் வகையில், தன் பக்தர்களான காகா சாஹேப் தீஷித் மற்றும் நானா சாந்தோர்கர் ஆகியவர்களின் அழைப்பு விடுத்த இல்லத் திருமண வைபவத்திற்கு ஷாமாவை அழைத்துச் செல்லுமாறு கூறி, மேலும் காசி,கயா மற்றும் பிரயாகைக்குச் சென்றப் பின்பு நான் ஷாமாவை விட முன்னரே சென்று அங்கிருப்போம் என்று அறிவுருத்தி, எங்கும் தான் வியாப்பித்து இருக்கின்றேன் என்பதை, நாம் அனைவரும் உணர வைத்த நிகழ்வின் உவமான விளக்கவுரை இங்கே..🔥
காகா சாஹேப் தீஷித் என்பவர் பாபாவின் மீது ஆத்மார்த்தமான அன்பும், பக்தியும் கொண்ட பக்தர்.. தனது மூத்த மகன் பாபுவுக்கு, நாக்பூரில் பூணூல் திருமணம் நிகழ்த்த நிச்சயித்தார்.. ஏறக்குறைய அதே தருணம் நானா சாஹேப் சாந்தோர்கர் என்ற பக்தரும், தமது மூத்த மகனுக்கு குவாலியரில் திருமண வைபவம் நிகழ்த்த நிச்சயித்தார். காகா சாஹேப் தீஷித், மற்றும் நானா சாஹேப் சாந்தோர்கர் ஆகிய இருவரும் சீரடிக்கு வந்து, இவ்வைபவங்களுக்கு பாபாவை அன்புடன் வரவேற்றனர்...தமது பிரதிநிதியாக ஷாமாவை ஏற்றுக் கொள்ளும்படி பாபா அவர்களிடம் கூறினார்...தன்னுடைய சத்குருநாதர் பாபாவே நேரடியாக வரவேண்டும் என்று வற்புறுத்தப்பட்ட போது, ஷாமாவை அவர்களுடன் கூட்டிக்கொண்டு செல்லும்படி அவர்களிடம் கூறி, காசிக்கும், பிரயாகைக்கும் சென்றபின்பு நாம் ஷாமாவைவிட அங்கு முன்னால் சென்றிருப்போம் என்று சூட்சமமாக கூறினார். இந்த சூட்சமம் வாய்ந்த பாபாவின் மொழிகளைக் குறித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அவைகள் பாபாவின் சர்வ வியாபகத்தைக் காண்பிக்கின்றன..
ஷாமா, பாபாவின் அனுமதியைப் பெற்றுக்கொண்டு இந்த வைபவங்கள், விழாக்கள், ஆகியவற்றுக்காக நாக்பூருக்கும், குவாலியருக்கும் சென்றுவிட்டு பின்னர் காசி, பிரயாகை மற்றும் கயாவுக்கும் செல்லத் தீர்மானித்தார். ஆபாகோதேவும் ஷாமாவுடன் செல்வதாக இருந்தார்...இருவரும் முதலில் நாக்பூருக்கு பூணூல் விழாவுக்குச் சென்றனர்... காகா சாஹேப் தீஷித், ஷாமாவுக்கு அவரின் செலவுக்காக ரூ.200 வழங்கினார்..பின்னர் அவர்கள் குவாலியருக்குத் திருமண வைபவத்திற்காகச் சென்றனர்..அங்கே நானா சாஹேப் சாந்தோர்கர், ஷாமாவுக்கு நூறு ரூபாயும், அவரது சம்பந்தியான ஜடார் நூறு ரூபாயும் அன்பளிப்பாக வழங்கினார்கள்... பின்னர் ஷாமா காசி, அயோத்தி முதலிய இடங்களுக்குச் சென்றார்...காசியில் ஜடாரின் அழகான லக்ஷ்மி நாராயணர் கோவிலிலும், அயோத்தியில் ராமர் கோவிலிலும் ஜடார் என்பவரின் அதிகாரியால் நன்கு வரவேற்கப்பட்டார்.
ஷாமாவும் , ஆபாகோதேயும் அயோத்தியில் இருபத்தொரு நாட்களும், காசியில் இரண்டு மாதங்களும் தங்கினர்...பின்னர் அங்கிருந்து கயாவுக்குப் புறப்பட்டனர்...கயாவில் பிளேக் பரவியிருக்கிறது என்பதை ரயிலில் அவர்கள் கேள்விப்பட்டு மனக்கிலேசம் அடைந்தனர்... இரவில் கயா இரயில் நிலையத்தில் இறங்கி தர்மசாலையில் தங்கினார்கள்...காலையில் கயாவாலா (யாத்திரீகர்களுக்கு உணவும், இருப்பிடமும் அளிக்கும் அந்தணர்) வந்து "யாத்ரீகர்கள் எல்லாம் முன்னரே புறப்பட்டு சென்றுவிட்டனர்.. ஆகவே நீங்களும் சீக்கிரம் புறப்படுவது நல்லது" என்றார்... ஷாமா தற்செயலாக அவரை கயாவில் பிளேக் இருக்கிறதா என்று வினவினார்...இல்லை என்றார் கயாவாலா. "தயவுசெய்து எவ்விதக் கவலையும், பயமுமின்றி வந்து தாங்களே பாருங்கள்" என்றார்... பின்னர் அவர்கள் அவருடன் சென்று அவரது இல்லத்தில் தங்கினார்கள்..அது பெரிய விசாலமான சத்திரமாகும்..தனக்குக் கொடுக்கப்பட்ட இடத்தைப் பற்றி ஷாமா மிகவும் மகிழ்ந்தார்...ஆனால் கட்டிடத்தின் முற்பகுதியில் நடுவே மாட்டப்பட்டிருந்த பாபாவின் பெரிய அழகான பகவான் படமே அவரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது...இப்படத்தைப் பார்த்ததும் ஷாமாவுக்கு உணர்ச்சி பொங்கியது...ஷாமா அப்போது பாபா கூறிய வார்த்தைகளை நினைவு கூர்ந்தார்...பாபா கூறிய வார்த்தைகள் என்னவென்றால் , காசிக்கும்,கயாவிற்க்கும் பிரயாகைக்கும் சென்ற பிறகு ஷாமாவுக்கு முன்னதாகவே நாம் அங்கு இருப்போம்" என்ற பாபாவின் மொழிகள் தற்போது அப்படியே நிகழ்ந்தது...ஷாமாவிற்கு கண்களில் கண்ணீர் பொங்கியது... மயிர்க்கூச்செறிந்து தொண்டை அடித்துத் தேம்பி அழத் தொடங்கினார்...அங்கு பிளேக் இருப்பது குறித்துப் பயந்து, அதனால் அவர் அழுகிறார் என கயாவாலா நினைத்தார்... ஆனால் ஷாமா பாபாவின் படத்தை எங்கிருந்து, எப்போது அவர் பெற்றார் என்று கயாவாலாவிடம் விசாரித்தார்...கயாவுக்கு வரும் யாத்ரீகர்களின் வசதிகளைக் கவனித்துக் கொள்வதற்காக கயாவாலாவிற்கு, இருநூறு இடைத்தரகர்கள் மன்மாடிலும், புண்தாம்பேயிலும் வேலை செய்வதாகவும், அவர்களிடமிருந்து பாபாவின் புகழைக் கேள்விப்பட்டதாகவும் கூறினார்...
மேலும் ஏறக்குறையப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், கயாவாலா சீரடிக்குச் சென்று பாபாவின் தரிசனத்தைப் பெற்று இருக்கின்றார்...அங்கு ஷாமாவின் வீட்டில் தொங்கவிடப்பட்டிருந்த பாபாவின் படத்தை பாபாவின் அனுமதிபெற்று, ஷாமா கயாவாலாவிற்கு அப்பொழுது கொடுத்து இருக்கின்றார்..அந்தப் புகைப்படம் தான், ஷாமா தற்போது பார்த்தப் புகைப்படம்..இந்த முந்தைய நிகழ்ச்சியை ஷாமா இப்போது நினைவுக் கூர்ந்தார் கயாவாலாவிடம்....முன்னால் தனக்கு பணிவன்பு புரிந்த அதே ஷாமாதான் தனது விருந்தினர் என்று தெரிந்தவுடன் கயாவாலாவின். மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.. பின்னர் இவர்களிருவரும் அன்பையும், சேவையையும் பரிமாறிக் கொண்டார்கள்.. மிகமிக உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருவரும் இருந்தனர்..கயாவாலா அவருக்குச் சரியான ராஜோபசாரம் செய்தார்..அவர் பெரும் பணக்காரர்... தான் ஒரு பல்லக்கில் அமர்ந்து, யானையின் மேல் ஷாமாவை அமரச்செய்து அவரது தேவை, சௌகர்யங்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டார்..
இக்கதையின் நீதியாவது பாபாவின் மொழிகள் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே உண்மையாகின்றன..தமது அடியவர்கள்பால் அவர் கொண்டுள்ள அன்பு எல்லையற்றதாகும்.. பகவான் அனைத்து ஜீவராசிகளையும் பேதமின்றி சமமாக நேசித்தார்...ஏனெனில் அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் வியாப்பித்து, நீக்கமற நிறைந்து ஒன்றியவராக இருந்தார்.... பின்வரும் நிகழ்வு இதனை பறைச்சாற்றுகின்றது...
🔥சீரடி பாபா, ஒரு ஆட்டு மந்தையை தான் கண்டபோது, தன் கவனத்தை ஈர்த்த இரண்டு ஆடுகளை அதிக விலைக் கொடுத்து வாங்கினார்.. அதனைப் பார்த்தவுடன் தாத்யா கோதே மற்றும் ஷாமாவும் ஏன் இவ்வாறு அதிகமாக ரூபாயைக் கொடுக்கின்றீர்கள் என்று விளக்கம் கேட்டதற்கு பாபா கூறியப் பதிலுரையைப் பற்றிய விளக்கவுரையை இங்கே காண்போம்..🔥
ஒருமுறை பகவான் லெண்டியிலிருந்து திரும்பி வந்துக் கொண்டிருக்கும்போது, ஆட்டு மந்தையொன்றைக் காண நேர்ந்தது.. அவைகளில் இரண்டு அவரின் கவனத்தைக் கவர்ந்தன...ஆடுகளிடம் சென்று அவற்றைத் தடவிக்கொடுத்து அன்புசெலுத்தி , அந்த ஆடுகளை ரூபாய் 32-க்கு விலைக்கு வாங்கினார்..பாபாவின் இந்தச் செயலைக் ழ்கண்டு பக்தர்கள் ஆச்சரியமுற்றனர். இவ்வியாபாரத்தில் பாபா ஏமாற்றப்பட்டார் எனவும், ஒரு ஆடு ரூ.2 வீதம் அல்லது அதிகபட்சம் ரூ.3 அல்லது 4 வீதம் இரண்டு ஆடுகளும் ரூ.8 மட்டுமே பெறும் எனவும் நினைத்தனர்..ஆகவே அவர்கள் இதற்காக பாபாவைக் கடிந்துக் கொண்டனர்...ஆனால் பாபா அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தார்...ஷாமாவும், தாத்யா கோதேவும் விலை அதிகம் கொடுத்ததற்காக பாபாவிடம் விளக்கம் கேட்டனர்.. தமக்கென வீடும், கவனிக்கக் குடும்பமும் இல்லாதபடியால் தாம் பணத்தைச் சேமிக்கக்கூடாது என்று பாபா கூறினார்...தமது செலவில் நான்குசேர் பருப்பு வாங்கி ஆடுகளுக்கு அளிக்கும்படி கூறினார்... இது முடிந்தபின், பாபா அவ்வாடுகளை மந்தையின் சொந்தகாரருக்குக் கொடுத்து விட்டு, பின்னர் ஆடுகளைப் பற்றிய பூர்வ ஜென்மக் கதையைக் கூறினார்...
"ஓ...! ஷாமா, தாத்யா...! இவ்வியாபாரத்தில் நான் ஏமாற்றப்பட்டு விட்டேன் என நீங்கள் நினைக்கின்றீர்கள்..அவ்வாறு கிடையாது... அவைகளின் பூர்வ ஜென்மக் கதையைக் கேளுங்கள்..இந்த ஆடுகள் முந்தைய பிறவியில் மனிதர்களாய் இருந்தனர். எனது நண்பர்களாய் இருந்து, எனது அருகில் அமரும் நல்லதிர்ஷ்டம் பெற்றிருந்தனர்...அவர்கள் ஒருதாய் மக்கள். முதலில் ஆழமாக ஒருவரையொருவர் நேசித்தனர்..ஆனால் பிற்காலத்தில் பகையாளிகளாய் ஆகிவிட்டனர்...மூத்தவன் சோம்பேறி, பின்னவன் சுறுசுறுப்பானவன்...ஆதலால் சிறியவன் பெரும்பொருள் திரட்டினான்.. மூத்தவன் பேராசையும், பொறாமையும் கொண்டு பின்னவனைக் கொன்று பணத்தை எடுத்துக் கொள்ள விரும்பினான்...
தங்கள் சகோதர உறவை மறந்து, ஒருவருடன் ஒருவர் சண்டையும், வாக்குவாதமும் செய்யத் தொடங்கினர்..மூத்தவன் இளையவனைக் கொல்லப் பல வழிமுறைகளைக் கையாண்டு அவனது முயற்சிகளில் தோல்வியடைந்தான். இவ்வாறாக அவர்கள் மரண விரோதியானார்கள்.... முடிவாக ஒரு சந்தர்ப்பத்தில் மூத்தவன், இளையவன் தலையில் தடிக்கம்பால் பலத்த மரணஅடி ஒன்று கொடுக்க, இளையவன் மூத்தவனை கோடாரியால் தாக்க இதன் விளைவாக இருவரும் அவ்விடத்திலேயே மாண்டனர்... அவர்களின் வினைப்பலனின் காரணமாக இருவரும் ஆடுகளாகப் பிறந்தனர்...சற்றுமுன் என்னைக்கடந்து சென்றபோது, நான் அவர்களை அறிந்துக் கொண்டேன்... அவர்களின் முந்தைய பிறவிகளை நினைவுக் கூர்ந்து இரக்கம் கொண்டு, ஆடுகள் ரூபத்தில் இருக்கின்ற அவைகளுக்கு இளைப்பாறுதலும், சௌகரியமும் தர விரும்பி என்னிடம் இருந்த எல்லாப் பணத்தையும் செலவழித்தேன்... இதற்காகத்தான் நீங்கள் என்னைப் குறை கூறுகின்றீர்கள்....
நீங்கள் என்னுடைய பேரத்தை விரும்பாததால் நான் அவைகளை மேய்ப்பவனிடமே திருப்பி அனுப்பிவிட்டேன்", என்றார்..இன்றளவு வரை பகவான், தமது சூட்சம பேராற்றலாள் நம் அனைவரின் மீதும் பேதமின்றியும் தாய்மையுணர்வுடனும் நீங்காத அன்பு செலுத்துகின்றார்..அதற்கு ஈடு இணையில்லை என்றேக் கூறலாம்...
ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏼🙏🏼
ஸ்ரீ சாயீயைப் பணிக....அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்...🙏🏼🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக