ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

திங்கள், ஆகஸ்ட் 28, 2023

நீங்கள் எது செய்தாலும், அது கடவுளின் பணி. ..!

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்...🙏🙏

நீங்கள் எது செய்தாலும், அது கடவுளின் பணி. உதாரணமாக, நீங்கள் மூச்சு விடுவதும் கூட – உள்மூச்சு, வெளிமூச்சு ஒரு ஆனமீக சாதனைதான். மூச்சை உள்ளிழக்கும் போது, அது ‘ஸோ’ என்ற ஒலியுடன் (அது), இணைத்துப் பார்க்கப்படுகிறது. மூச்சை வெளியிடும் போது, ‘ஹம்’ (நான்) என்ற ஒலியுடன் வெளிவருகிறது. ஆகவே ‘ஸோஹம்’ என்பது ‘I am that’ (இறைவன்) என்ற பொருள் தருகிறது. ‘ஸோ’ என்பது தெய்வீகத்தையும், அஹம் என்பது அஹங்காரத்தையும் குறிக்கிறது. ஆகவே ‘ஸோஹம்’ என்பது நல்லதை உள்ளிழுத்து அல்லதை வெளித்தள்ள வேண்டும் என்பதை பாடமாக் கற்பிக்கிறது. இந்த உள்மூச்சு, வெளிமூச்சு என்பதை ஒரு நாளில் 21,600 முறை தொடர்ந்து நடைபெறுகிறது. அதாவது உன்னுள் ஒரு குரல், ஒரு நாளைக்கு 21,600 முறை உன்னைக் கடவுள் நீதான் என உணர்த்துகிறது. துரதிருஷ்டவசமாக நீதான் அந்தச் செய்தியை ஏற்கத் தயாராக இல்லை. இந்த உண்மையைப் புரிந்து கொள்ளத்தான், இறைவன் உனக்கு இந்த உடலைப் பரிசாகத் தந்திருக்கிறார். கடவுளை உன்பூஜையறையுடன் நிறுத்தி விடாதே. கடவுள் உனது உயிர் மூச்சு...

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...