ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏
ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்...🙏🙏
கர்மயோகத்தின் முழுமைத்தன்மை எதனை வலியுறுத்துகின்றது என்பதை இங்குப் பார்ப்போம்...🙏
கர்மயோகம் குறிக்கோளில்லாமல் இருக்கச் சொல்லவில்லை...அர்த்தமில்லாமல் செயல் புரியச் சொல்லவில்லை. செய்யும் செயலை விட்டேற்றியாகச் செய்யச்சொல்லவில்லை... சிறப்பாகச் செய்து முடித்த ஆத்மதிருப்தியை இழந்து விடச்சொல்லவில்லை...செயலில் கிடைக்கும் சின்னச் சின்ன சந்தோஷங்களை இழந்து விடச்சொல்லவில்லை..மாறாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதிலும் எப்படிச் செய்ய வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கச் சொல்கிறது. நம்மைச் செய்யும் செயலில் முழுமையாக ஈடுபடச் சொல்கிறது. செயலில் கீழ், மேல் என்ற பாகுபாடுகள் இல்லை என்று சொல்கிறது. பலன், புகழ், கவலை, பயம் என்று நமதுசக்திகளை வீணடிக்காமல் செய்யும் செயலில் கண்ணாயிருக்கச் சொல்கிறது. பலன்தானாக வரும் என்கிறது கீதை...
ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக