ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

ஞாயிறு, செப்டம்பர் 10, 2023

பற்று விடல்..!

 




ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த உபதேச பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

பற்றுவிடல்....சிறு வயதில் ஆசை ஆசையாக மணல் வீடு கட்டி, விளையாடி விட்டு பிறகு அதை காலால் எட்டி உதைத்துவிட்டு வந்தவர்கள்தான், இப்போது பொருட்கள் மீதும் மனிதர்கள் மீதும் பற்று வைத்து கவலைப்படுகிறோம். வாழ்க்கையில் விரும்பாதது வந்தாலும் துன்பம். விரும்பியது விலகினாலும் துன்பம். விரும்பியதை அடைந்து அதை இழந்தாலும் துன்பம்...ஒரு பொருளின் இருப்பில் கிடைக்கும் இன்பத்தைவிட, அதை இழந்துவிடுவோமோ அல்லது கிடைக்காதோ என்ற நினைப்பில் வரும் துன்பம்தான் அதிகம். இவை எல்லாம் ஒன்றின் மீது கொண்ட பற்று காரணமாக வரும் தொல்லை. இரண்டு மணி நேர ரயில்பயணத்தில் இது எனது இடம்; அது உனது இடம் என்று சண்டை போட்டு, அது ஓய்வதற்குள் சேருமிடம் வந்துவிடுகிறது. வாழ்க்கையிலும் இப்படித்தான்..! 

வாழும் சிறிது காலத்துக்குள், இது எனது நிலம், அது உனது நிலம் என்று சண்டை. இப்படி நமது துன்பத்துக்கு வகை வகையான காரணமாக இருப்பது பற்று வைப்பதுதான். அன்புக்கும் பற்றுக்கும் நிறைய வேற்றுமைகள் உண்டு. பறவையின் மீது பற்று கொண்டவன். அதை கூண்டில் அடைக்கிறான். அதை மகிழ்விப்பதாக எண்ணி அதன் சுதந்திரத்தைத் தடுக்கிறான். அதே பறவையின் மீது அன்பு செலுத்துபவன் அது ஆகாயத்தில் பறப்பதை ஆனந்தமாக வேடிக்கை பார்க்கிறான்.....

இது போன்று உலகப் பற்றில் இருப்பவனுக்கு கடவுளைப் பற்றிக்கொள்ள நேரமில்லை. ஆனால், பற்றற்றவன், கடவுளை பற்றிக் கொண்டு, கடவுளை எங்கும் காணும் அனுபவம் கண்டு, உலகப் பற்றை நீக்கி விடுகிறான். கணவன், மனைவி, பிள்ளைகள், பெண்கள் என்று மனிதர்களில் தொடங்கி ஆடு, மாடு, வீடு, செல்பேசி என்று எத்தனை ‘பற்றுக்கள்’ நமக்கு,.! நமக்கு எது நல்லது என்பதை கடவுள் அறிவார். நமது கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் எல்லாவற்றையும் அவர் அறிவார்..!

 நமக்கோ கடந்த வந்த பாதை தெரியும். இப்போது நடப்பது தெரியும்; நாளை என்பது பெரிய கேள்விக்குறி தான். இப்படி இருக்கையில் எல்லாம் அறிந்த கடவுளைப் பற்றாமல் எதை எதையோ பற்றுகிறோம். இந்த உலகில் நாம் பற்றியிருப்பவை நம்மைக் கைவிடலாம்.. நமது வாழ்க்கையை முழுவதும் அறிந்த கடவுள் நம்மைக் கைவிடமாட்டார். கடவுள் தான் நம் பலம். கடவுள் தான் நம் கவசம். அவரிடம் பற்று வைப்பதுதான் உண்மையான பற்று. ....

அவரிடம் எதற்காகப் பற்று வைப்பது என்பதை வள்ளுவர் மிகஅழகாக சொல்கிறார்.. பற்றுக பற்றற்றான் பற்றினை...அப்பற்றை பற்றுக பற்று விடல்... பற்றுக..பிடித்துக் கொள்ளுங்கள் பற்றற்றான் பற்றினை ..பற்றில்லாத கடவுளின் திருவடிகளை அப்பற்றினை ..அந்தத் திருவடிகளை பற்றுக ..கெட்டியாகப் பற்றுங்கள் பற்று விடல் - தேவை இல்லாத ‘பற்று’க்களை விடுவதற்காக..!

ஓம் ஶ்ரீ சாயீராம்....🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்.. 🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...