ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த உபதேச பொன்மொழிகள்...🙏🏻🙏🏻
ஆன்மீகத்தில் எப்படி சிறிய சொற்களில் பெரிய தத்துவங்களை உணர வைக்க முடிந்தது..?
ஆன்மீகத்தின் பெரிய வலிமையே அதுதான்...!எடுத்துக்காட்டாக, நம்மாழ்வாரை, ஆதிநாதன் ஆலயப் புளியமரத்தடியில் கண்மூடி மௌனத்தில் அமர்ந்திருந்த நம்மாழ்வாரைக் காண, அருகே திருக்கோளூரிலிருந்த மதுரகவி ஆழ்வார் வருகிறார்...! நல்மாழ்வாருக்கு அருகில் ஒரு சிறு கல்லை இடுகிறார்...! ஓசை கேட்டுக் கண்மலர்ந்த நம்மாழ்வார் மதுர கவியை ஏறிடுகிறார்....
மதுர கவி ஒரு புதிர் போடுகிறார், “செத்தது வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்” என வினவுகிறார்...!
நம்மாழ்வார், புன்னகையுடன் விடையளிக்கிறார், “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்”...!
விடையைக் கேட்ட மதுரகவி, ஆஹா! என மகிழ்ந்து நம்மாழ்வார் அடிகளில் வீழ்ந்து வணங்குகிறார்..?
இவர் என்ன கேட்டார், அவர் என்ன பதில் சொன்னார் ஏதாவது புரிந்ததா..? இது தான் ஆன்மீகப் புதிர்...!
அவர் கேட்டது, அழியும் (செத்தது) உடலை அடையும் ஆன்மா ( சிறியது) எத்தைத் தின்று ( எதனைத் துய்த்து) எங்கே இருக்கும்...?
இவர் சொன்னது. அத்தைத் தின்று (உடலின்பம் துய்த்து) அங்கே கிடக்கும் ( உடலெடுத்தவாறே இருக்கும்).
இந்த ரீதியில்தான் ஆன்மீக சொற்கள் இருக்கும்...!
நீ இருக்கிறேன் என உணருகிறாயல்லவா, அதைப் பின்பற்றி ஆழ யோசி’ என்கிற ரீதியில் இருக்கும்...!
ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக