ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

செவ்வாய், செப்டம்பர் 12, 2023

குருவின் அருட்பார்வை..!

 ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த உபதேச பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

குருவின் அருட்பார்வை..! நாரதருக்கு ஞானிகளின் அருட் பார்வைக்கு பலன் உண்டா என்ற சந்தேகம்வர அவர் கிருஷ்ணனிடம் கேட்டார். பரமாத்மா கிழக்குத் திசையில் ஓர் குப்பைமேடு இருக்கின்றது அங்கு ஓர் புழு இருக்கின்றது அதனிடம் கேள் என்றார். நாரதர் அவ்விடம் சென்று குப்பை மேட்டில் உள்ள புழுவைப்பார்த்து அந்தக் கேள்வியைக் கேட்டார். உடனே அந்தப் புழு ஒரு துள்ளுதுள்ளி கீழே விழுந்து இறந்தது. வருத்தத்துடன் கிருஷ்ணரிடம் இதைக் கூற அவர் அப்படியானால் மேற்குத் திசையில் கோவில் கோபுரத்தில் வசிக்கும் புறாவினைக் கேள் என்றார். நாரதர் ஆவலுடன் அப்புறாவிடம் அந்தக் கேள்வியைக் கேட்டார். உடனே புறா தன் சிறகைப் படபடத்து நாரதரின் பாதங்களில் விழுந்து உயிரை விட்டது. தன் கேள்வி இரண்டு உயிர்களைப் பழிவாங்கிவிட்டதே என்று மிகவும் வேதனையுடன் கிருஷ்ணரிடம் சென்று நடந்ததைக் கூறினார். சரி, இந்தமுறை நீ வடக்குத் திசையில் ஓர் வீட்டில் அழகிய ஆண்குழந்தை பிறந்துள்ளது. நீ அதனிடம் சென்று கேள். முன்பு நடந்ததுபோல் இம்முறை நடக்காது என ஆறுதல் சொல்லி அனுப்பினார். நாரதர் அந்த வீட்டை அடைந்தார். அந்தக் குழந்தையைப் பார்த்து தன் கேள்விதனை தயக்கத்துடன் கேட்டார்.

அந்தக் குழந்தை சொல்லியது. தேவரிஷியே..! குப்பைமேட்டில் புழுவாக இருந்த என்னை தங்களின் அருபார்வையால் புறாவாக்கினீர்கள். புறாவான எனக்கு மீண்டும் தரிசனம் தந்து உயர்குலத்தில் பிறக்க வைத்தீர்கள். தற்போது மீண்டும் எனக்கு நீங்கள் நேத்திர தீட்சை அளித்து என்னை தேவனாக்கியுள்ளீர்கள். இந்த 3 பிறவிகளிலும் தங்களின் அருளே எனக்கு கிடைத்த வரப்பிரசாதம். என்னை வாழ்த்தி விடைகொடுங்கள் என தேவலோகம் சென்றது. நாரதர் புரிந்து தெளிந்தார்....

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...