ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻
ஶ்ரீசீரடி சாயீபாபாவின் உபதேச பொன்மொழிகள்...🙏🏻🙏🏻
பக்தர் :
யோகம் என்பது என்ன...?
பகவான் :..முடிவாம் உண்மை நிலையை அடைவதற்குற்ற வழிகள் யாவுமே யோகமெனப்படும் . கர்மம் , பக்தி , ஞானம் யாவுமே யோகமெனப்படும் . யோகம் என்பது ஒன்று சேருதல் என்று பொருள்படும் . ஒன்று சேருதற்கு , யார் எதனின்று பிரிபட்டிருக்கிறானென்று பார்த்தால் , பிரிவுணர்ச்சியுறும் ஜீவவகந்தை மறைந்து , பிரிவேதுமில்லா அகண்ட - ஏகசொரூபம் ஒன்றே என்றுமிருப்ப தென்று உணர்வோம் . அதுவே யோகம்.
பக்தர் :
தியானிப்பது எப்படி...?
பகவான் :
ஒரே விருத்தியில் மனத்தை நிறுத்தலே சாதாரணமாய் தியானமெனப்படுகிறது . அதனால் மனம் பலவாறு சிதறாது ஒருமுகமாய்க் குவிகிறது . அப்போது , அவ்வொரு விருத்தியும் ஓய்ந்து , சுத்த சைதன்யம் ஒன்றே துலங்கும் . அதுவே நமது இயல்பு நிலை ...
ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🏻
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக