ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻
ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்....🙏🏻🙏🏻
ஸ்ரீகிருஷ்ண பகவான் கூறுகிறார்,...‘தர்மத்திற்கு எதிராக இல்லாத ஆசைகள் அனைத்தும் நானே. தர்மத்தின் வழியில் நடப்பவர்கள் மற்றும் தன் ஸ்வதர்மத்தை (தன் பொறுப்புகளை ஒரு இயல்பாக அல்லது கடமையாகச் செய்வது) பின்பற்றுபவர்கள், இவர்களுள் எழும் ஆசை நான் தான், நான் மட்டுமே.’ இதை நீங்கள் எல்லோரும் அனுபவித்திருப்பீர்கள்: உங்கள் இதயத்தில் எழும் ஒரு ஆசையின் படி நீங்கள் செயலாற்றும் போது, அது உங்களையும் உங்களைச் சுற்றி உள்ளோரையும் மேன்மையடையச் செய்யும். எல்லோரும் பயனடைவார்கள்....அப்படிப்பட்ட ஆசைகள் இறைவனின் அம்சம்....நாம் தர்மத்தின் வழியில் செயலாற்றும் போது, நம்மால் தவறு ஏதும் செய்ய முடியாது. மேலும், தர்மத்தோடு, ஆசைகளும் கூட எழுகின்றன.ஆனால் அப்படிப்பட்ட ஆசைகள் தெய்வீகமானது (இறைவனின் விருப்பதால் தூண்டப்படுவது)
‘தன்மேய மனஹா சிவ சங்கல்பமஸ்து’என்று அதனால் தான் வேதங்களில் சொல்லப்பட்டுள்ளது...அப்படியென்றால் எல்லோருக்கும் நன்மை தரக்கூடிய ஆசைகள் மனதில் எழட்டும். எல்லோருக்கும் நன்மை தரக்கூடிய ஆசைகள் எனக்கு இருக்கட்டும். உண்மையை நோக்கி, மற்றும் புனிதமானது எல்லாவற்றையும் நோக்கி என் ஆசைகள் இருக்கட்டும். இப்போது உண்மைக்கான ஆசையும் ஆசை தான். வாழ்க்கையில் நீங்கள் முன்னேற விரும்பினால், அதுவும் ஆசை தான். எல்லோரும் நன்மையடைய ஆசைப்படுவதும் ஆசை தான்....
ஆசைகள் இல்லாமல் வாழ்க்கையில் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது. வாழ்வில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலின் பின்னாலும் ஒரு ஆசை இருக்கிறது. வாழ்வில் நீங்கள் எதைச் செய்தாலும் அதற்கு ஒரு காரணம் உண்டு, அந்தக் காரணம் ஆசை. எனவே, என்ன விதமான ஆசையாக இருக்க வேண்டும்..? தர்மத்திற்கு முரணான ஒன்றாக இல்லாமல் அது தர்மத்தின் வழியில் இருக்க வேண்டும். எனவே, ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார், ‘தர்மத்தின் வழியில் இருக்கும் எல்லா ஆசைகளும் நான்...
ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🏻🙏🏻.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக