ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

செவ்வாய், செப்டம்பர் 12, 2023

நான் எனும் அகந்தை...!????

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த உபதேச  பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

நான் எனும் அகந்தை...!????

நானார் என மனம் உள்நாடி உளம் நண்ணவே

நானாம் அவன் தலை நாணமுற – நான் நானாய்த்

தோன்றும் ஒன்று தானாகத் தோன்றினும் நானன்று பொருள்

பூன்றம் அது தானாம் பொருள்...

பொருள் :...

“நான் யார்..?” என்னும் ஆன்ம நாட்டத்தினால் மனம் உள்முகமாக நாடி விசாரித்து, இதயத்தைச் சார்வதால் நான் என்று தேகாத்ம வடிவில் தோன்றும் அகங்காரத்தின் தலை சாய்ந்து இதயத்தில் ஒடுங்கிவிடும். அகங்காரம் ஒடுங்கியதும், “நான்-நான்” என்று இடைவிடாமல் ஒன்று தானாகவே தோன்றும். அவ்வாறு தோன்றினாலும், அது தேகத்தை நானென்று நினைக்கும் அகங்காரமல்ல. அது குறைவற்ற பரிபூரண பரம்பொருளான ஆத்மாவாகிய உண்மைப் பொருளாகும்.

நமது முதல் உணர்வே நான் எனும் தன்மை உணர்வு. இதையே அகந்தை, அகங்காரம், மனம் என்று விதவிதமாகச் சொல்லப்படுகிறது. இந்த “நான் யார்..?” என உள்முகமாக தன்னை விசாரிக்க, நான் எனும் பொய்த்தோற்றம், கயிற்றில் காணப்பட்ட பாம்பு போல், மறைந்து விடுகிறது. அப்படி ஞான விசாரம் செய்து மனம் அழிந்தோர்க்கு, அகங்காரம் தலை தூக்க வாய்ப்பேயில்லை. அந்த “நான்” என்பது மறைந்து “நான்-நான்” என்ற மெய்ப்போதம் தானே பிரகாசிக்கிறது. இது எப்படியென்றால் திரைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஒளி விளக்கு திரையை விலக்கியதும் பிரகாசிப்பது போல என்பார்கள். இதில் நாம் காண வேண்டிய முக்கிய அம்சமானது ஒளி என்றுமே இருந்தது, புதிதாக வந்ததில்லை என்பதே. அதே போல் நாம் என்றும் உள்ள நிலை நமது எண்ணங்களால் மறைந்திருந்தது. அவை நீங்கியதும் நமது உள்ள நிலையை உணர்கிறோமே அன்றி, அது முன்பு இல்லாமல் புதிதாக வந்த ஒன்று அல்ல..

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...