ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

புதன், செப்டம்பர் 27, 2023

கடவுள் யார்....? எப்படி இருப்பார்...?

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ....🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏

கடவுள் யார்....? எந்த ரூபத்தில் எப்படி இருப்பார்...? என்கிற பாமரனின் கேள்விக்கான விழிப்புணர்வு விளக்கம்...🙏

மகாபாரதத்தில் அர்ச்சுனன் கண்ணனிடம், "என் அன்பு கேசவா..! பரம்பொருளாகிய பரமாத்மா என்னும் கடவுள் யார்.? அவர் எங்கே இருப்பார்...? எப்படி இருப்பார்..?" என்று வினவினார்...

அப்போது பரந்தாமனாகிய கண்ணன் பின்வரும் அற்புதமான விளக்கத்தை அருளினார். இந்த விளக்கம் எக்காலத்துக்கும் பொருந்தும்..

"தனஞ்சயா..! பாதாளத்தின் இருளறையில் இருக்கும் ஒருவன் கதிரவனின் தரிசனத்தைப் பெறவேண்டுமாயின் அவனிடம் நீ என்ன உரைப்பாய்..? பாதாள இருட்டறையிலிருந்து வெளியே வந்து அகண்ட ஆகாயத்தின் கீழ் நில். உனக்கு சூரிய தரிசனம் கிட்டும் என்பாய். அதேபோல் மனிதன் தன்னைச் சூழ்ந்துள்ள சுயநலம், பயம், பேராசை, பொறாமை மற்றும் அனைத்து அதர்ம குணங்களிலும் இருந்து வெளிவந்து தன் தூய ஆத்மாவை எப்போது உணர்கின்றானோ அப்போது கடவுள் அவனுள்ளேயே குடிகொண்டு இருப்பதை உணர முடியும்.

பார்த்தா..! நானே பரமாத்மா..! என்னைப்போல் நீயும் பரமாத்மாதான். ஆனால் இன்னும் நீ அந்த உண்மையை உணரவில்லை..!நம் கூட்டில் குடியிருப்பது ஆத்மாதான். நாம் பரமாத்மாவின் அங்கம் எனும் உண்மையை உணர்ந்தவன் கடவுளை அறிய முடியும்"...

அனைவரின் நம்பிக்கை என்கிற ஊற்றின் வடிவமே கடவுள்....எவ்வாறு கல்லைக் கூட இறைவனாக நினைத்து பாவித்தால் அதிலும் இறைவனானவன் வெளிப்பட்டே தீருவான்....ஆகவே நம்பிக்கையே ஸ்திரப்படுத்துங்கள்...வாழ்வில் உயரிய நிலையைப் பெறுவது உறுதி....

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏🙏


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...