ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த உபதேச பொன்மொழிகள்...🙏🏻🙏🏻
இறைவனின் அருளைப் பெற தடைகளாக இருப்பது என்னென்ன..? தடைகளை நீக்கி கொள்வது எப்படி..?
இறைவன் எப்போதுமே அருள் செய்கிறான். அதனை உணர நமக்கு இருக்கும் தடை என்பது மும்மலங்கள்....ஆணவம் , கன்மம் , மாயை . என்பர். பெரியோர்..ஆணவம் - நான் எனது என்று வருவது...
கன்மம் - எனது என்கிற அகந்தையால் பிறரை இழிவாகவும் குறைவாகவும் நினைப்பது நடத்துவது , பொறாமைப் படுவது..
மாயை - வேடிக்கைகளில் மூழ்கி இருப்பது.
இவற்றை இந்த நொடி மட்டும் நீக்கினாலும் இறைவன் அருள்வதை உணரலாம். முயற்சித்துப் பாருங்கள்...அதற்கான உபாயமும் கூறுகின்றேன்....
நான் என்பதை விட எனது என்பனவற்றை சற்றே விலக்குங்கள்...அனைவரையும் உங்களின் ஒரு பிரதியாக பாருங்கள்....
மாயையை விலக்க உலக ஒட்டத்திலிருந்து சில நிமிடம் தள்ளி நின்று பாருங்கள்...
ஓம் ஶ்ரீ சாயீராம்....🙏🏻🙏🏻
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக