ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

ஞாயிறு, செப்டம்பர் 17, 2023

பகவான் ஸ்ரீகிருஷ்ணர்...

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேச பொன்மொழிகள்.....🙏🏻🙏🏻

அவர் ,’நான் இந்த பௌதீக உடல் தான் என்று நீ நினைக்கிறாயா..? இல்லை...! நான் பூமி, நான் நீர், நான் நெருப்பு, நான் காற்று, நான் ஆகாயம். நான் மனம், புத்தி மற்றும் அகங்காரம். இவைகள் எட்டு விதமான சக்திகள், அதாவது நான், நான் இவைகளை என்னுடைய அபார-ப்ரக்ருதி (பௌதீக பிராந்தியத்தில், தெய்வீகத்தின் எட்டு விதமான குணங்கள் அல்லது வெளிப்பாடுகள்). நான் இந்த எட்டுமே. நான் இந்த பூமியின் ஒவ்வொரு துகளின், நீரின் மூலக்கூறு. நீர் எல்லா இடங்களிலும் உள்ளது.. பூமியில், ஆகாயத்தில், காற்றில் மேலும் கடலில்; அது எங்குமிருக்கிறது. உனக்குத் தெரியுமா, உன் உடலில் 60% நீர் நிறைந்தது என்று..? ஆகவே, இங்கு, இன்று அமர்ந்திருக்கும் மக்கள் அனைவரும் பல லிட்டர்கள் நீரே (சிரிப்பு).

அறுபது கிலோ உங்களின் எடை என்றால் அப்போது உன்னுடைய உடலில் சுமார் 36 கிலோ நீரை தவிர வேறொன்றுமில்லை. ஒவ்வொரு நபரும் நீரால் நிரப்பப்பட்ட ஒரு மண்பாண்டம் போன்றவரே. அது போலவே, உன் உடலின் 15% காற்றாலானது. உன்னுடைய உடலும் பூமியின் அம்சத்தை கொண்டது. மேலும் இவைகள் அனைத்தும் நெருப்பு அம்சத்தால் ஒன்றாக பிணைக்கப்பட்டுள்ளன, அங்கிருந்து தான் உடல் வெப்பம் வருகிறது. ஆக, நெருப்பு அம்சத்தால் உடலில் வெப்பம் உள்ளது. பிறகு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ‘நான் மனம், புத்தி மற்றும் அகங்காரம்’ என்றும் சொல்கிறார். பல சந்தர்பங்களில் மக்கள் என்னிடம் வந்து சொல்கிறார்கள், ‘குருதேவ், நான் என் அகங்காரத்தை விட ஆசைப்படுகிறேன்.’

நீ எதை விட வேண்டுகிறாய்..? அகங்காரமும் ஒரு வடிவான இறைவன், ஆகவே, அதை சும்மா இருக்க விடு. உன்னுடைய ஆழத்தில் அமர்ந்திருக்கும் அகங்காரமும் ஒரு வகையான தெய்வீகம். அவர், ‘இந்த எட்டு விதமான குணங்களும் உன்னுள் இருக்கின்றன... அவைகளெல்லாம் என்னுடைய வெவ்வேறு வடிவங்களைத் தவிர வெறொன்றுமில்லை, இதுதான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்  சொல்வது..அறிந்து உணர்ந்து வாழ்வில் அனைவரும் உயர்வடைவோமாக...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...