ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏🙏
உன்னைப் படைத்த சக்தியே..இந்த உலகத்தையும் படைத்துள்ளது..அது உன்னை காக்குமானால், அதுவே உலகத்தையும் காக்கும்...இறைவன் இந்த உலகை படைத்தார் என்றால்...அதை காக்கும் பொறுப்பு அவருடையதே...
இதில் நீ யார்... ?
சந்தேகத்தை நீக்குவதால் எந்த பயனும் இல்லை. ஒரு சந்தேகத்தை நாம் தீர்த்துக் கொண்டால் மற்றொன்று எழுகிறது, சந்தேகங்களுக்கு முடிவே இருக்காது. சந்தேகப்படுபவர் மற்றும் அவரது ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே அனைத்து சந்தேகங்களும் நிறுத்தப்படும். சந்தேகப்படுபவரின் மூலத்தைத் தேடுங்கள், அவர் உண்மையில் இல்லாதவர் என்பதை நீங்கள் காண்கிறீர்கள். சந்தேகம் நீங்கும், சந்தேகங்கள் நீங்கும்.
( ஆசை , இன்பம், சுக போகங்கள் )
விஷயங்களை அனுபவித்து ஒழித்தல் என்பது தீயைப் பெட்ரோலால் அணைக்க முயல்வது போன்றதே...அனுபவிக்க அனுபவிக்க விஷய வாசனை வலுத்து, மேன்மேலும் நம்மை துன்புறுத்தும புலனின் இன்பத்தைத் தவிர்த்தாலேயே அவற்றின் நாட்டம் பலவீனமுறும் அப்பொழுதே ஆன்ம நாட்டத்தால் அவற்றை அறவே அகற்ற முடியும்....எது இங்கு உன்னை இழுத்து வந்ததோ, அது தன் வேலையை கால கர்மத்தில் செய்யும் இறைவன்கிட்டே முறையிடாதே...
சரணடையுங்கள்..அகங்காரம் ('அஹந்தா') தோன்றினால், அனைத்தும் இருப்புக்கு வரும்; ஈகோ இல்லை என்றால், எல்லாம் இல்லை. ஈகோ தானே எல்லாம். ஆதலால், அது என்னவென்று விசாரிப்பதே அனைத்தையும் துறப்பது என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்..
ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🙏.
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக