ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏
🙏!..குரு..!🙏
நீங்க நினைக்கற மாதிரி குரு வெளியே இல்லை உள்ளே இருக்கின்றார்..அது ஆத்மா அதை உணருங்கள்..! அங்கேயே எப்பவும் இருங்கள்..!அதுதான் குரு கூடவே இருக்கறது..!அருள் உங்களை எப்பவும் கைவிடாது.. நீங்களும் குருவை விட்டு எங்கேயும் போயிட முடியாது...! காலத்தை, கி.மு, கி.பி என்று பிரிப்பதுபோல, மனிதனின் வாழ்க்கையையும், சத்குரு ஒருவனுக்கு அறிமுகமாவதற்கு முன், அறிமுகமான பின் என்று பிரிக்கலாம். சத்குருவாம் ஷீரடி சாய்பாபாவினை அறிந்துகொள்வதற்கு முன் அவன் பயணித்த பாதையானது,..அவரை அறிந்துக் கொண்ட பின் முற்றிலும் மாறி விடுகிறது. அவன் தன் பழைய பொல்லாத பழக்கங்களை விட்டு, சத் சங்கத்தைத் தேடி ஓடுகிறான். குருவின் நாமத்தை உச்சரித்த வண்ணம் இருக்கிறான். அதனால், அவனுக்கு உண்டாகும் சகல தீமைகளையும் மாற்றி நன்மைகளாக்கிக் கொள்கிறான்...
சாயீ, தன்னை சரணாகதி செய்த கணத்திலிருந்து ஒருவனைக் காக்கிறார். அவன் கூடவேயிருந்து அவனுக்கு அருள்கிறார். அவன் அவரிலிருந்து விலகிச் செல்லும்போது, ஒரு குதிரைக்காரன் தன் குதிரையின் லகானைப் பிடித்துத் தன் பாதைக்குத் திருப்புவது போலத் திருப்புகிறார்...மனித வாழ்க்கை, முன்வினைப் பயன்களால் ஆனது. அதை உணராது, பலர் இந்த வாழ்வில் நிகழும் துயரங்களுக்காக இறைவனைச் சபிக்கிறார்கள். மெய்யான குருவைக் காணும் வரைக்கும் அவர்களுக்கு இந்த சஞ்சலம் இருக்கிறது...
ஸ்ரீசாயீயை பணிக..🙏ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக