ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏
ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்...🙏
ஶ்ரீசாயீ கூறுகிறார்....நான் கடந்த காலத்தில் நடந்த அனைத்தையும் அறிவேன். நிகழ்காலத்தில் எல்லாவற்றையும் அறிவேன். வருங்காலத்தில் நடக்கப்போகிற எல்லா நிகழ்ச்சிகளை பற்றியும் நான் அறிவேன்.” என்று பகவான் சொல்கிறார். நமக்குள் ஆழ்ந்த நிலையில் உள்ள ஆத்மா எல்லாவற்றையும் அறியும். கடந்த கால நிகழ்ச்சிகளைப் பற்றியும், வருங்காலத்தில் நடக்கப் போகும் அனைத்து நிகழ்சிகளைப் பற்றியும் ஆத்மா அறியும். இவற்றை அறிய வல்லதையே நாம் ஆத்மா என்று சொல்கிறோம். பகவான் சொல்கிறார். நான் எல்லாவற்றையும், எல்லோரையும் அறிவேன். ஆனால் எல்லோரும் என்னை அறிவதில்லை. எல்லாவற்றையும் அறியும் சக்தி ஒன்று மட்டுமே. அது ஆத்மா...
ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக