ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

வெள்ளி, அக்டோபர் 27, 2023

சிவனும்,.கார்த்திகேயன்(முருகன் ) அவதாரமும்..குருதத்துவமே என்று உணர்க...!?



ஓம்  ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்... 🙏🙏🙏

சிவனும்,.கார்த்திகேயன்(முருகன் ) அவதாரமும்..குருதத்துவமே என்று உணர்க...!?

சிவபெருமான் ஆட்சி செய்யும் ஐம்பெரும் பூதங்கள் (நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் வெளி) சக்தியுடன் (சுத்த பிரக்ஞை) ஒன்றான போது கார்த்திகேயர் பிறந்தார்..சிவபெருமானை பஞ்சானனா என்கிறோம் – ஐந்து தலைகள் கொண்ட கடவுள். இந்த ஐந்து தலைகள் இயற்கையின் ஐந்து கூறுகளை குறிக்கிறது. இந்த ஐந்து கூறுகளும் ஆறாவதுடன், அதாவது சுத்த பிரக்ஞையுடன் இணையும்போது ஷடானனன் (ஆறு தலை கொண்டவர்) பிறந்தார். இவர்தான் கார்த்திகேயர் எனப்படுகிறார்.....

குண்டலினி சக்தியின் கூறுகளின் மூலமும் இதைப் புரிந்து கொள்ளலாம். (குண்டலினி -ஆதியான, சலனமில்லாத,..ஆனால் பெருஞ்சக்தி கொண்டதும், சுருண்ட வடிவில் முதுகுத் தண்டின் அடிப்பகுதியில் இருப்பதும்). நம்மிடம் ஏழு சக்கரங்கள் (சக்தி மையங்கள்) இருக்கிறது. ஆறு சக்கரங்களில் சக்தி ஊற்றெடுக்கும் போது அது ஆறாவது சக்கரமான‘ஆக்ஞை’(நம் இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ளது) சக்கரத்தில் நிலை பெறுகிறது, அதுவே திருக்கார்த்திகேயர் ஆக மலர்கிறது....

கார்த்திகேயர் குருதத்துவத்தின் அடையாளம். இந்த ஆக்ஞை சக்கரம்தான் குரு தத்துவத்தின் இடம். இங்குதான் குரு தத்துவம் மலர்ந்து தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. குரு தத்துவம் தான் கார்த்திகேய தத்துவம்....சிவ பெருமான் என்பவர் தன்னை வெளிபடுத்தாத இறை..கார்த்திகேயர் என்பவர் அதன் வெளிப்பாடு. எனவே குண்டலினி சக்தியின் அடையாளமாக நீங்கள் திருக்கார்த்திகேயரை நினைக்கலாம்....

இச்சா சக்தி (முனைப்பு சக்தி) மற்றும் ஞான சக்தி (சுயம் பற்றிய ஞானம்) என இவ்விரண்டும் குண்டலினி சக்தியுடன் கூடுகின்றன. உண்மையில், இச்சா சக்தியும், கிரியா சக்தியும் (ஆக்க சக்தி) அதிக அளவில், ஞான சக்தியின் ஒரு வடிவங்களே....இச்சா சக்தியும் கிரியா சக்தியும் - இரண்டுமே குண்டலினி சக்தியின் (கார்த்திகேயா) பாகங்கள். அவையே வள்ளி மற்றும் தெய்வயானையாக, கார்த்திகேயரின் இரு துணைவியராக வெளிப்பட்டு இருக்கிறது.  திருக்கார்த்திகேயர் ஞானத்தின் உருவம். எனவே கார்த்திகேய தத்துவம்தான் குரு தத்துவம்...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...