ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

சனி, அக்டோபர் 28, 2023

கடவுளிடம் தீர்வுகளை எதிர்பார்க்கக்கூடாது என்றால், வேறு எதற்காகத்தான் பிரார்த்தனைகள்...?

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏🙏

கடவுளிடம் தீர்வுகளை எதிர்பார்க்கக் கூடாது என்றால், வேறு எதற்காகத் தான் பிரார்த்தனைகள்...? பிரார்த்தனைகள் என்பது  உங்களுக்கு  இப்படித்தான்..??

சாதகமாக ஏதாவது நடந்துவிட்டால், அது கடவுள் அருளால் நடந்தது என்பார்கள். நடக்கவில்லை என்றால், அது கடவுளின் சித்தம்.. அதைக் கேள்வி கேட்கக்கூடாது என்பார்கள் பிரார்த்தனை...என்பது மண்டியிட்டு, சில குறிப்பிட்ட சுலோகங்களைச் சொல்வதோ, துதிப்பாடல்களைப் பாடி நம் ஆசையை நிறைவேற்றும்படி கடவுளிடம் மன்றாடுவதோ அல்ல... அது கடவுளுக்காக அல்ல....

உங்களுக்காக..! உங்கள் வேதனைகளைக் கடவுளிடம் கொண்டு செல்லாதீர்கள்..துக்கத்தில் இருப்பவர்களால் கடவுளைத் தரிசிக்க முடியாது. முதலில், ஆனந்தமாக வாழ்வது எப்படி என்று உணர்ந்து கொள்ளுங்கள். அதன்பின் கடவுளைப் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்.... எதற்காகப் பிரார்த்தனை செய்கிறீர்கள்..? கடவுளை அறிந்து கொள்வதற்காகவா..? அதல்ல உங்கள் நோக்கம். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் ஒரு முட்டாள் இயந்திரமாகக் கடவுளை நினைத்திருக்கிறீர்கள்..பிரார்த்தனை என்பது வெறும் சடங்காக நின்றுவிடாமல், ஒருவித உள்ளுணர்வாக மலர வேண்டும். ஆலயத்தில் பணிவாக சேவகன் போல் நடந்து கொள்கிறீர்கள். ஆனால், உங்களுக்குக் கீழே வேலை செய்பவர்களிடம் நீங்களே கடவுள் போல் இறுமாப்பாக நடந்து கொள்கிறீர்கள். இதுவா பிரார்த்தனை உணர்வு..?

முதியவர் ஒருவர் பிரார்த்தனை நேரத்தில் கோயிலுக்கு  வருவார். அவரைத் தொடர்ந்து கவனித்து வந்த அர்ச்சகர், ஒருநாள் அவரைக் கூப்பிட்டனுப்பினார்..."பிரார்த்தனை நேரத்தில், நீங்கள் வாய் திறந்து முணுமுணுத்துக்கூடப் பார்த்ததில்லை. பின் எதற்காக வருகிறீர்கள்...?""நான் கடவுளிடம் பேச வரவில்லை. அவர் சொல்வதைக் கவனிக்க வருகிறேன்" என்றார் முதியவர்..."ஓ கடவுள் உங்கள் காதில் மட்டும் பேசுகிறாராக்கும்! அப்படி என்னதான் சொல்கிறார்..?""அவரும் என்னைப் போல்தான். பேச வருவதில்லை. கவனிக்கத்தான் வருகிறார்..!"

வாழ்க்கை அப்படித்தான்...வேறு லயத்தில் இயங்கிக் கொண்டு இருக்கிறது. அமைதியாக, உன்னிப்பாகக் கவனித்தால் போதும்... நீங்கள் விரும்பியதெல்லாம் எங்கே இருக்கிறது என்பது புலப்படும். கடவுளிடம் நீங்கள் இரைச்சலாகப் பேசிக்கொண்டு இருப்பதாலேயே எதையும் கவனிக்க முடியாமல் போகிறது...கவனிக்கத் தவறிவிட்டு, பிரார்த்தனைகள் மூலம் கடவுளைக் கூப்பிட்டால், அவர் தன் சுண்டுவிரலைக்கூட உங்களுக்காக அசைக்க மாட்டார். அது புரியாமல் நீங்களும் இது சாபம், அது அருள் என்று பேசிக் கொண்டு இருப்பீர்கள். உங்களுக்கு நான் சொல்வதெல்லாம் இதுதான்....

கடவுள் சந்நிதியில் சொல்வது மட்டும் தான் பிரார்த்தனை என்பது அல்ல....இந்த உலகமே, இந்தப் பிரபஞ்சமே இறைவனின் ஆலயம். எனவே, நடப்பதை, உணவு உட்கொள்ளுவதை, அடுத்தவரிடம் அன்பு காட்டுவதை என ஒவ்வொரு செயலையுமே பிரார்த்தனை போல் செய்யுங்கள்...உலகில் இருப்பதையெல்லாம் ரசிக்கிறேன், மதிக்கிறேன். வாழ்க்கையையே பிரார்த்தனை போல் நடத்திச் செல்வதுதான் என் நோக்கம். அதற்கொரு பயிற்சியாக கோயிலிலும் பிரார்த்தனைகள் சொல்கிறேன்' என்றால், அதில் அர்த்தம் இருக்கிறது...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...