ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏🙏
உன்னை போல் பலர் உண்டு...உன் தன்மைப் போல சிலரே உண்டு...!!
தந்தையோடு கடைவீதிக்குச் செல்லும் குழந்தை தந்தையின் சுண்டுவிரலைப் பிடித்துக் கொள்கிறது. அந்த சின்ன ஒரு பற்றுதல் குழந்தைக்கு அதீத நம்பிக்கையைத் தருகிறது. தந்தை தன்னைக் கைவிடமாட்டார், தந்தை தன்னைப் பாதுகாத்துக் கொள்வார் என குழந்தை சந்தேகத்துக்கு இடமின்றி நம்புகிறது. தந்தை மீது அந்த குழந்தை வைக்கும் நம்பிக்கைக்குக் காரணம் என்ன...? தந்தையின் சுண்டு விரலின் வலிமையா...? இல்லை, குழந்தை தந்தையை அறிந்திருக்கிறது என்பது தான்.
அதே போல தான் இறைவனிடம் நாம் வைக்கும் நம்பிக்கைக்கு அடிப்படையும் ‘அவர் எப்படிப்பட்டவர்’ என்பதை நாம் அறிந்து கொள்வதில் தான் அடங்கியிருக்கிறது. இறைவனின் தன்மைகளை முழுமையாய் அறிந்துக் கொள்ளாமல் அவர் மீது நம்பிக்கை வைக்க முடியாது. அறிந்து கொள்ளாமல் வைக்கின்ற நம்பிக்கைகள் வலுவிழந்து போய், வாழ்க்கைப் புயலில் சின்னாபின்னமாகி விடும்.
ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக