ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

ஞாயிறு, நவம்பர் 05, 2023

நான் ஒளி..காண்பதும் நானே காண வைப்பதும் நானே..!



ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏

நான் ஒளி..காண்பதும் நானே... காண வைப்பதும் நானே...🙏

எதன் ஒளியினால் ஒளிருமே இரவி யாதி எதனை அவை ஒளிர்க்க வேலாது  எதனாலே இந்த உலகெல்லாம் இலகும் அதுதானே அந்தப் பிரமம் அறி..! எது தரும் ஒளியால் சூரியன் முதற்கொண்டு அனைத்தும் பிரகாசமாக இருக்கின்றனவோ, எதனை அவைகள் எதுவும் ஒளிரச் செய்ய முடியாதோ, எதன் ஒளியால் இந்த உலகமெல்லாம் பிரகாசமாய் இருக்கிறதோ, அந்தப் பொருளே பிரம்மம் என்று அறிவாய்....

நாம் காணும் ஒளி என்று தொடங்கி நம்மைக் காண வைக்கும் ஒளியைப் பற்றிய மிகவும் ஆழ்ந்த கருத்துக்கள் உடைய இந்த ஸ்லோகத்தை நாம் நன்கு புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். உலகத்தை நாம் காண்பது ஏதேனும் ஒரு ஒளியைக்கொண்டே நடக்கிறது. பகல் நேரம் என்றால் அது சூரிய ஒளியாகவும், இரவு நேரம் என்றால் சந்திரன், நக்ஷத்திரம் அல்லது ஒரு விளக்கின் துணை கொண்டோ நாம் எதனையும் காண்கிறோம். நமக்குப் பார்ப்பதற்குக் கண் இருந்து, நமது அந்தக்கரணங்களும் நம்முடன் ஒத்துழைப்பதனால் ஒன்றை நாம் காண முடிகிறது என்றாலும், ஒளி இல்லையேல் நம்மால் எதையும் பார்த்து அறிய முடியாது.

இந்தத்  தத்துவத்தைத்தான் நாம் கோவிலில் சென்று இறைவனை வணங்கும்போது, நமக்குத் தீபம் அல்லது கற்பூரம் ஆரத்தி காட்டி, பின் வரும் முண்டக உபநிஷத ஸ்லோகத்தையும் சொல்லி நமது உண்மையை நமக்கு நினைவூட்டபடுகிறது....

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...