ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏
சரணாகதி என்றால் என்ன என்பதை மீண்டும் ஒரு முறை மிகவும் எளிய முறையில் விளக்குகிறேன்.....நான் ஒரு உதாரணத்தை உங்களுக்கு கொடுக்கிறேன்.....இரண்டு நபர்கள் இருக்கிறார்கள். முதல் நபர் நன்றாக உழைத்து சம்பாதித்து பணம்வைத்துக்கொண்டிருக்கிறார். இரண்டாவது நபர் ஒரு பரம ஏழை... பிச்சைக்காரர் என்று கூட வைத்து கொள்ளலாம்...இருவரும் ஒரு பெரிய கடைக்கு சாப்பிடுவதற்கு தின்பண்டங்கள் வாங்க செல்கிறார்கள்...முதல் நபர் வாங்கிய பொருளுக்கு பணம் கொடுக்க வேண்டும்...அவர் பணம் கொடுக்க முயலும் பொழுது தன்னிடம் ஒரு நூறு ரூபாய் குறைவாக இருப்பதை உணர்ந்தார். இப்பொழுது முதல் நபர் நூறு ரூபாய் குறைவாக இருப்பதாக கடைக்காரரிடம் சொல்ல முடியாமல் சுய கௌரவம் தடுக்கிறது. அதனால் அவரால் தனக்கு வேண்டிய பொருளை வாங்க முடியாமல் திரும்புகிறார்.
இப்பொழுது இரண்டாவது நபர் பிச்சைக்காரர் கடைக்காரரிடம் கேட்கிறார். எப்படி கேட்கிறார். “ஐயா என்னிடம் பணம் இல்லை...சம்பாதிக்கும் திறமையும் இல்லை. பசி காதை அடைக்கிறது.. கொஞ்சம் ஏதாவது சாப்பிட கொடுங்கள் என்று பிச்சை கேட்டால் கடைக்காரர் எதையாவது எடுத்து இரண்டாவது நபர் பசியாற கொடுப்பார்...மேலும் அந்த பிச்சைகாரருக்கு ஏதாவது வேலையோ அல்லது வேறு ஒரு நல்ல வழியையோ சொல்லுவார்...
இப்பொழுது புரிகிறதா..!
நம்முடைய சுய கௌரவத்தை களைந்து இயலாமையை ஏற்றுக் கொண்டு இறைவனிடம் கையை உயர்த்தி என்னை ஏற்றுக்கொள் என்று கேட்டால் நிச்சயம் ஏற்றுக்கொள்வான்..இதைத் தான் சரணாகதி என்று சொல்கிறோம்.
சரணாகதியின் மேலும் ஒரு முக்கிய அம்சம்.
நாம் இறக்கும் தருவாயில் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றோமோ அதுவாகவே பிறப்போம் என்பது வேதத்தில் கூறப்பட்டுள்ள உண்மை...இது பல புராணங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது... பொதுவாக மரணத் தருவாயில் நம்முடைய உபாதைகளும் கர்மாக்களும் நம்மை இறைவனை நினைக்க விடாது...
அப்பொழுது நம்மால் இறைவனை அடைவது சாத்தியம் இல்லாமல் போகும். சரணாகதி செய்துவிட்டால் நாம் மறந்தால் கூட நாம் இறக்கும் தருவாயில் நம்மை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு நம்மை கரையேற்றி விடுவான் நாராயணன்....இது ஒரு சரணாகதியின் முக்கிய அம்சம் ஆகும்...இதனை சிந்தித்தால் சந்திக்கலாம் மெய்ஞானத்தை....
ஓம் ஸ்ரீ சாயீராம்....🙏🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்.....🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக