ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

புதன், டிசம்பர் 27, 2023

கண்ணனிடம் கேளுங்கள் ..சரணாகதி அடையுங்கள் ...!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

கண்ணனிடம் கேளுங்கள் ..சரணாகதி அடையுங்கள் ...!

எப்படி “இருட்டில் பார்த்த இது பாம்பல்ல, கயிறுதான்” என்று உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அதற்கு வேண்டிய ஒளி தேவைப்படுகிறதோ, அதே போன்று அஞ்ஞானமாகிய இருளில் மூழ்கியுள்ள ஒவ்வொருவருக்கும் ஞானமாகிய ஒளி தேவைப்படுகிறது. அப்படி ஒளி கிடைத்தாலும் பலருக்கு உடனே அது அனுபவமாக மாறாது.தை..இதை  காஞ்சி மகா முனிவர் இப்படிச் சொல்வார். பல வருடங்களாக ஒரு கிணற்றுத் தண்ணீரில் மூழ்கியிருந்த ஒரு பித்தளைச் சொம்பை கிணற்றிலிருந்து வெளியே எடுத்தவுடனே அது பளபளவென்று இருக்காது. பாசி படர்ந்து, களிம்பு ஏறி  அதன் நிறமே மாறிப் போயிருக்கும். அதை புளி, சாம்பல் முதலான பொருட்கள் கொண்டு அழுத்தித் தேய்க்கத்  தேய்க்க பளபளப்பு வருவது போல நமது முயற்சியின் வலிமை கொண்டு நம்மை நாம் அறிய வேண்டும் என்பார். இதுதான் சிரத்தை எனப்படுகிறது...

முயற்சி என்பதன் அளவும் ஒவ்வொருவரின் நிலையைப் பொறுத்தது. வேறோர் இடத்தில் கண்ணபிரானே சொல்வதுபோல் நெருப்பைச் சூழ்ந்துள்ள புகையை அகற்ற ஒரு மெல்லிய தென்றல் போதும். ஆனால் ஒரு கண்ணாடியின் மேல் இருக்கும் கறையை அகற்ற ஓர் ஈரத் துணியும், அழுத்தித் துடைத்தலும் வேண்டும். ஒரு தாயின் சூலில் இருக்கும் சிசு வெளி வருவதற்கோ, அதற்கு வேண்டிய முயற்சிகள் தவிர அதற்குண்டான காலம் வரும் வரை காத்திருக்கவும் வேண்டும். இதுதான் இயற்கை நமக்குச் சொல்லித் தரும் பாடம்...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...