ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

வியாழன், டிசம்பர் 14, 2023

எதை எதையோ கேட்டும்.,.எதை எதையோ கண்டும் ..எதை எதையோ பேசியும் என்னை சங்கடபடுத்தாதீர்கள் என் மொழி ஒன்றுதான் அது இதுவே...!


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

எதை எதையோ கேட்டும்.,.எதை எதையோ  கண்டும் ..எதை எதையோ பேசியும் என்னை சங்கடபடுத்தாதீர்கள் என் மொழி ஒன்றுதான் அது இதுவே...!

ஆயிரக்கணக்கான மக்களைக் காப்பதற்காக, நான் ஆயிரக்கணக்கான மைல்கள் தூரம் செல்ல வேண்டியவனாக உள்ளேன்.என்னை நினைவில் கொண்டிருப்பவனை நான் எப்போதும் நினைத்துக்கொண்டு இருக்கிறேன்...எனக்கு எவ்வித வாகனமோ, வண்டியோ, இரயிலோ, அல்லது விமானமோ தேவையில்லை...என்னை எவன் அன்புடன் கூப்பிடுகிறானோ அவனிடம்ஓடிச்சென்று நானே வெளிப்படையாகக் கலந்துக் கொள்கிறேன் "...பாபா தமது உடலில் இருந்த போதும், உண்மையில் அவர் உடலில்கட்டுண்டு இருக்கவில்லை. அவர் எல்லா இடங்களிலும் எல்லா உருவிலும் இருந்தார். பாபா அன்றும் இன்றும் ஜீவுடனேயே விளங்குகிறார்...ஆனால் நம்மிலிருந்து முற்றிலும் வேறுபட்ட நிலையில்தான்....இன்றும்கூட அவர் மீண்டும் தமது பக்தர்களுக்கு முன் தோன்ற முடியும் ; தோன்றுகிறார்."

"ஸ்ரீசாயீ சச்சரித்திரம்..🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...