ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻🙏🏻
சத்திய சொரூபமே சாயீநாதனே...உன்னை காண ஓடோடி வருகிறேன்..என் நினைவும் நீயே..உயிரும் நீயே.....🙏🏻🙏🏻
தொழுத கைகளை பொருளால் நிரப்பி, அழுத கண்களை அருளால் துடைத்திடும் கருணை வடிவாய், நினைப்பவர் மனதில் நினைக்கும் தெய்வமாக வந்து அருள்புரியும் சீரடி நாதனை. கண்டோபா கோயிலில் முதன் முதலாகப் பார்த்த, மஹல் ஸாபதி ‘யா ஸாயி’ (ஸாயி வர வேண்டும்) என்று அழைத்தவர். அதன்பின் சீரடி நாதனைக் காணும் அத்தனை பக்தர்களும் அப்பெயராலேயே அவரை அழைக்கத் தொடங்கினர். பின்னர் சாயி என்றும் அப்பெயரே சீரடி நாதனுக்கு நிலைத்து விட்டது. சீரடி சாயி தாம் வாழ்ந்த எளிமையான வாழ்க்கை மூலம் மானிடர்க்கு போதனைகளையும், தத்துவங்களையும் சொல்லாமல் சொல்லி, அதற்கேற்ப செயல்முறைகளை அமைத்தவர்...…
‘சா அய்’ என்னும் தமிழ்ச் சொல்லுக்கு ‘உள்ளதன் நுணுக்கம்’ என்ற ஒரு பொருளும் உண்டு. நுணுக்கம் என்பது ‘கூர்மையாய் இருத்தல்’ (Sharpness) என்று வழங்கப்படும். ‘‘பொய்யாதின்றி புலமை நுணுக்கி’ என்பது சீவக சிந்தாமணித் தொடர். கூரிய மெய்யறிவினால் உளங்கொண்டு உணர்பவர்களுடைய கருத்தினால், நோக்குவதற்கு அரிய நோக்கமாகவும், கூரியதாய் உணர்தற்கும் அறிய நுண்ணிய உணர்வாக விளங்குபவன் இறைவன் என்பதை,‘கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர்வார் தங்கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே’ என்று சிவபுராணம் கூறும்...
ஸ்ரீசங்கரர் ஸ்ரீரங்கநாதப் பெருமானை,
‘‘ஸசித்ரசாயீ ஜகதேசாயீ நந்தாங்கசாயீ கமலாங்கசாயீ
அம்போதிசாயீ வடபத்சாயீ ஸ்ரீரங்கசாயீ ரமதாம் மணேமே II’’
– என்று போற்றும் ஸ்லோகத்தில் ‘சாயீ, சொல்லாட்சி கிடைக்கிறது...
ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻
ஓம் நமசிவாய..🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக