ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

செவ்வாய், பிப்ரவரி 20, 2024

ஒருவருடைய மனம் எப்போது அமைதி பெறுகிறதோ,...!???

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

🔥ஒருவருடைய மனம் எப்போது அமைதி பெறுகிறதோ, எப்போது அது மதிப்பிடுதல் என்பதை நிறுத்துகிறதோ, அது பெற்ற அறிவில் இருந்து எப்போது தன்னை விடுவித்துக் கொள்கிறதோ, அப்போது அவர் தனது வாழ்வின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்...!🔥

இறைவனுடன் ஒரே ஒரு தொடர்பு ஏற்பட்டுவிட்டால், ஓர் உண்மையான, இயல்பான நேர்மையான அனுபவம் ஏற்பட்டுவிட்டால்,அந்த கணத்தில் அந்த அனுபவத்தில், நாம் எல்லாவற்றையும், அதற்கு மேலும் , அறிந்து கொள்வோம்....னணஅதனால்தான் உனக்குத் தெரிந்தது சிறிதளவே ஆயினும் நீ முழு நேர்மையுடன் அதன்படி வாழ்வது மிகவும் முக்கியமாகும் . அப்பொழுது உன்னால் அனுபவங்கள் பெறவும் , அனுபவங்களின்மூலம் அறிந்துக் கொள்ளவும் முடியும்...இங்கே அறிதல் என்று சொல்வது மனத்தினால் அறிதல் அல்ல ,நீ அந்த உண்மைகளின்படி வாழ்வாய்..அவை உன்னுடைய ஜீவனின், உன்னுடைய உணர்வின் ஒரு பாகமாக ஆகிவிடும்...நீ சிறிதளவே தெரிந்து கொண்டிருந்தபோதிலும் அதன்படி வாழ்வதே மேலும் தெரிந்து கொள்வதற்கு மிகச் சிறந்த வழியாகும் . உண்மையிலே நேர்மையாகச் சிறிதளவு நடைமுறைக்குக் கொண்டுவருவது ஆன்மீகப் பாதையில் முன்னேறுவதற்கு மிகச் சக்தி வாய்ந்த சாதனம் ஆகும் ....

உதாரணமாக செய்யக்கூடாது என்று தெரிந்த ஒன்றைச் செய்யாதிருத்தல் . உன்னுடைய ஜீவனில் ஒரு பலவீனத்தை, ஒரு இயலாமையைக் கண்டு கொண்டபின், மீண்டும் அது நிகழுமாறு நீ அனுமதிக்க கூடாது ; நீ எதுவாக வேண்டுமோ அதன் காட்சியைக் கண்டு விட்டப்பின் அதுவாக ஆக வேண்டும் என்பதை நீ ஒரு போதும் மறக்கக்கூடாது...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...