ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

ஞாயிறு, பிப்ரவரி 11, 2024

சரியா தவறா.....!!ஞானம் உண்டு..அனுபவம் உண்டா...!!???



ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

குரு தத்துவம் என்ன கூறுகிறது என்றால்...

ஆன்மீக குரு என்பவர் கைகளில் ஜப மாலையுடன் புலித்தோலில் அமர்திருப்பர் என்றும், எப்பொழுதும் அமைதியாக இருப்பார், கோபம் என்றாலே என்ன என தெரியாதவராக இருப்பார் என்று பலர் எண்ணுகிறார்கள் .குரு இப்படித்தான் இருக்க வேண்டும் என முடிவு செய்வது முட்டாள்தனம்...குருவானவர் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

பரபிரம்மதின் வடிவமானவர் குரு. பரபிரம்மம் எப்படி எல்லா இடத்திலும் வியாபித்து இருக்கிறதோ அது போல குருவும் அனைத்து ரூபங்களிலும் இருப்பார்...உங்கள் வீட்டிக்கு வரும் குப்பை அள்ளுபவர் , உங்கள் மனைவி , உங்கள் குழந்தை , உங்கள் செல்ல பிராணியான நாய் என யார் வேண்டுமானாலும் உங்கள் குருவாக இருக்கலாம்..குருவை உங்கள் பார்வையில் தேடாதீர்கள்... அறியாமை இல்லா மனதை திறந்து வையுங்கள் உங்கள் குரு தானே வருவார்...

குரு உஙகளின் கரு...உங்களின் குருட்டை நீக்குபவர்..ஆன்மாவே குரு...குருவே.சிவம்...

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...