ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

செவ்வாய், பிப்ரவரி 20, 2024

நான் அல்லாவிடம்(இறைவனிடம்)சென்று திரும்ப வேண்டும்..

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

நான் அல்லாவிடம்(இறைவனிடம்)சென்று திரும்ப வேண்டும்..

நீ எனது உயிரற்ற உடலை மூன்று நாட்கள் பாதுகாக்க வேண்டும். மூன்று நாட்கள் கழித்துக் காப்பாற்றப்பட்ட அந்த சடலத்தில் எனது உயிர் திரும்பவும் புகுந்துவிடும்...பக்தர் பகத்  மஹல்சாபதியிடம் சீரடி சாயீபாபா கூறியபோது, அப்படியே செய்வதாக அவரும் வாக்களித்தார்..அவர் வாக்களித்த மறுவினாடியே பாபாவின் உயிர் அவரது உடலைவிட்டு வெளியேறியது. பாபாவின் உயிரற்ற உடல் மட்டும் கிடந்தது. ஊரார் கூடினர். உயிரற்ற உடலாகக் கிடந்த பாபாவின் பிரேத விசாரணைக்காக அதிகாரிகள் வந்துவிட்டனர்.

“பாபா இறந்துவிட்டார். இவரது சடலத்தை உடனே நல்லடக்கம் செய்யுங்கள்” என்று அதிகாரிகள் கூறினர்...“அய்யா அது சாத்தியமில்லை. பாபாவின் உயிர் அல்லாவைச் சந்திக்கச் சென்றிருக்கிறது. மூன்று நாள் கழித்து அவர் மீண்டும் உயிர் பெற்று வருவார். அதுவரை நாங்கள் எதுவும் செய்ய முடியாது” என்று பக்தர் மஹல்சாபதி கூறினார்...

“இதென்ன சுத்த பைத்தியக்காரத்தனமாக இருக்கிறதே. செத்தவராவது பிழைத்து எழுவதாவது… பிணத்தை வைத்துக் கொண்டு நாறடிக்காதீர்கள். நீங்கள் கூறயதுபோல் நடக்கவில்லையென்றால் நாங்கள் நான்காவது நாள் வந்து அடக்கம் செய்துவிடுவோம்” என்று வெறுப்படைந்தவராய் அதிகாரி ஒருவர் கூறிவிட்டுப் போய்விட்டார்..ஆனால், என்ன ஆச்சர்யம். சாயிபாபா கூறியபடி மூன்று நாள் கழித்து தமது உயிரற்ற உடலை எழுப்பித்து உயிருடன் நின்றபோது பக்தர்களும், ஊர் மக்களும் ஆனந்தம் அடைந்தனர்...எளிமையான தோற்றத்தில் இருந்தாலும் எண்ணற்ற சித்து விளையாட்டுகளை விளையாடி பக்தர்களின் மனம் கவர்ந்தார் பாபா..சாயீபாபாவிடம் ஒரு சாக்குத் துணி இருந்தது. படுப்பதற்கும், சில நேரங்களில் உட்காருவதற்கும், குளிர் காலத்தில் போர்த்திக் கொள்வதற்கும் அவர் அதனைப் பயன்படுத்தி வந்தார்.

அதனைப்பார்த்து மனம் சங்கடப்பட்ட பக்தர்கள், “பாபா இதென்ன ஒரு சாக்குத் துணியை வைத்துக் கொண்டு எல்லாவற்றுக்கும் பயன்படுத்தி வருகிறீர்கள். நீங்கள் இனிமேல் சாக்குத் துணியில் படுக்கக் கூடாது. நீங்கள் இனிமேல் இந்த பலகை மீதுதான் படுக்கவேண்டும்” என்று அன்புடன் கேட்டுக் கொண்டு ஐந்தடி  நீளமும், ஓரடி அகலமுள்ள ஒரு பலகையைக் கொண்டு வந்து கொடுத்தனர்.

பாபாவும் பக்தர்கள் வேண்டிக் கேட்டுக் கொண்டார்களே என்பதற்காகப் புன்முறுவலுடன் ஏற்றுக்கொண்டார்...பாபா அந்த மரப்பலகையை மசூதியின் கூரையிலிருந்து மூன்றடி தாழ்வாகவும், தரையிலிருந்து ஏழடி உயரத்தில் அந்தரத்தில் இருக்குமாறு செய்து நான்கு மூலையிலும் மண் அகல் விளக்குகளையும் எரியவிட்டு அதன் மீது இரவு முழுவதும் படுத்து உறங்குவார். பின்பு விடியற்காலை நான்கு மணிக்குள் கீழே வந்துவிடுவார்...பாபா அந்தரத்தில் படுத்துறங்கும் செய்தி பக்தர்கள் மூலம் ஊர் முழுக்கத் தெரிய ஆரம்பித்ததும் அவர்கள் அந்த அதிசயத்தினைப் பார்க்க வந்து தொல்லை கொடுத்தனர். இதனால் எரிச்சலுற்ற பாபா அந்தப் பலகையை ஹோம குண்டத்திலிட்டு எரித்துவிட்டார்...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...