ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

திங்கள், பிப்ரவரி 12, 2024

பாபாவின் மிக நெருங்கிய அடியவர் பகத் மகல்சபாதி,


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

பாபாவின் மிக நெருங்கிய அடியவர் பகத் மகல்சபாதி..

பகுதி-2 

பாபாவின் முதல் பக்தர் மகல்சாபதியை பாபா ‘பகத்’ என்றுதான் அழைப்பார். தன் எல்லா கவலைகளையும் சாயிநாதனின் திருவடிகளில் சமர்ப்பித்துவிட்டு சலனமின்றி இருந்தார்..அதே போன்று எப்போதும் கண்ணுக்குத் தெரியாமல் உடனிருந்து பாதுகாக்கவும் செய்தார் பாபா....பொதுவாக, பிறர் தன்னை வழிபடுவதை விரும்பாத பாபாவால்கூட, முழுமையாகத் தனக்கு ஆத்ம சமர்ப்பணம் செய்துகொண்ட மகல்சாபதியின் வழிபாடுகளைத் தடை செய்ய முடியவில்லை. தன்னை மனப் பூர்வமாக நேசித்து நம்பும் அடியவர்களின் அன்புக்கு பாபா எப்போதும் அடிமை....

“தேவா நீங்கள் என்னுடன் இருக்கும்போது என் தேவைகளை அறிந்து நீங்கள் தீர்த்து வைப்பீர்கள் எனும்போது நான் என் உலகாயத விஷயங்களை நினைத்துக் கவலைப்பட வேண்டுமா என்ன?” என்று கேட்பார். 

அந்த நம்பிக்கையே பாபா விரும்புவது. மகல்சாபதி பாபாவின் அனுமதியின்றி எதையும் செய்வதில்லை. எப்போதும் கண்ணுக்குத் தெரியாமல் உடனிருந்து பாதுகாக்கவும் செய்தார் பாபா.மசூதி பழுது பார்த்ததில் கூட மகல்சபாதி மூலமாக    பாபாவிடம் சம்மதம் வாங்கப்பட்டது. தாத்யா கோதே பாடீல், பகத் மஹல்ஸாபதி என்ற அத்தகையான இரு அதிஷ்டசாலிகள் சாயிபாபாவின் கூட்டுறவைச் சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர்.  பாபாவும் அவர்கள் இருவரையும் சமமாக நேசித்தார்.  இம்மூவரும் தங்கள் தலைகள் எல்லாம் கிழக்கு, மேற்கு, வடக்கு நோக்கி இருக்கும்படியும், தங்கள் கால்கள் எல்லாம் சந்திக்கும்படியும் மசூதியில் தூங்கினர்.  தங்களது படுக்கையை விரித்து அதன்மீது படுத்துக்கொண்டு பல விஷயங்களை பற்றி  நள்ளிரவு நெடுநேரம் வரை படுத்திருப்பர்.  

அவர்களுள் யாருக்காவது தூக்க அடையாளம் தென்பட்டால் மற்றவர்கள் அவரை எழுப்பி விட வேண்டும்.  உதாரணமாகத் தாத்யா குறட்டைவிடத் தொடங்கினால் பாபா உடனே எழுந்திருந்து பக்கவாட்டில் அவரை அசைத்து, தலையை அழுத்தியும், மஹல்ஸாபதி அவ்வாறு தூங்கினால் அவரை நெருங்கிக் கட்டியணைத்தும், அவரது முதுகைப் பிடித்துவிட்டும், கால்களை உதைத்தும் எழுப்பிவிடுவார்.  இவ்விதமாகப் பதினான்கு முழு ஆண்டுகளும், பாபாவின் மீதுள்ள அன்பால் கூட இருந்தனர்

பாபாவிடம் அருகிலிருந்து அவரின் உயரிய வாழ்க்கை முறை, உபதேசங்கள் ஆகியவற்றை அறிந்து உயர்ந்த ஆன்மிக நெறியில் தன் வாழ்வைச் செலுத்தினார் மகல்சாபதி...

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய....🙏🏻🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...