ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

செவ்வாய், மார்ச் 12, 2024

தன்னைப்பற்றி அறிய முற்படுபவர்கள் அரிதிலும் அரிது.

 ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

குருவின் பணி...

என்னவன்றால் ஒரு தனிப்பட்ட மனித உயிரின் மனதின் உள்ள மனமாயைகளை அகற்றி, அவ்வுயிரின்  ஆத்ம திருப்திக்காகவும் மறுமலர்ச்சிக்காகவும்  பாடுபடுவதே...அவ்வாறு குரு என்பவர் மனதை உழுகின்ற உழவன் போல் மனதை செம்மைப்படுத்தக்கூடிய  முயற்சியை சிஷ்யனுக்காக மேற்க்கொள்கிறார்....இதற்கு இறைவன் என்பவரே தான் படைத்த உயிரின் அக புறத்தேவைகளை நிறைவேற்றும் விதமாக அந்தந்த உயிருக்கு எந்த ஊடகம் வாயிலாக அதாவது புறத்தேவைகளுக்கு பல பற்பல மனித உயிர்கள் மூலமாகவும் தானே செயலாற்றுகிறார்...அகத்தேவைகளுக்கு  எவ்வாறு நாம் விரும்பி தேர்ந்தெடுத்த குருவின் மூலம் நாம்  போதிக்க முடியுமோ அவ்வாறாக போதிக்கவே குருமூலமாகவும் மனித உயிரின் ஆன்ம விடுதலைக்காக பாடுபடுகிறார்....தன் சிஷ்யனுக்காக இறைவனிடம் தான் பெற்றதை பகிர்கின்றார்...ஆகவே ஆன்மாவே குரு...குருவே சிவம்...

தன்னைப்பற்றி அறிய முற்படுபவர்கள் அரிதிலும் அரிது. அப்படி முயல்பவர்களும் தானாக அறிந்துகொள்ள முடியாது. பிரம்மத்தைப்பற்றி அறிந்த, பிரம்மத்தைத் தான் என்று உணர்ந்துகொண்ட, அந்த பிரம்மத்திலேயே தன்னை மூழ்கடித்துக்கொண்ட, அதைப்பற்றி அறிந்தவர்களின் தொடர்பிற்குள்ளே இருப்பவரான தக்க குருவின் மூலமாகவே ஒருவன் இந்த அறிவைப் பெற முடியும்.

ஓம் நமசிவாய..🙏🏻🙏🏻

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...