ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

வியாழன், ஏப்ரல் 04, 2024

ஒரு விசை இல்லாமல் ஒரு பொருள் நகராது, நகர்த்தவும் முடியாது. அப்படி என்றால் இப்பிரபஞ்சம் உருவாக்கிய இறைவன் யார்...?

 

ஓம்  ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻🙏🏻

ஒரு விசை இல்லாமல் ஒரு பொருள் நகராது, நகர்த்தவும் முடியாது. அப்படி என்றால் இப்பிரபஞ்சம் உருவாக்கிய இறைவன் யார்...? 

இதைப் புரிந்து கொள்ள முதலில் பொறுமை, பணிவு தேவை. இறைவனின் மகிமையை  ஒரு கேள்வியின் மூலம் புரிந்து கொள்ள முடியுமா..? நம் அறிவிற்கு அப்பாற்பட்ட ஒரு விஷயத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்றை சில வார்த்தைகளில் அடக்கி விட முடியுமா..?ஆயினும் சிறிய முயற்சி எடுப்போம்..! ஒரு உவமை கொண்டு தான் இதை புரிந்து கொள்ள முயலமுடியும்.

கடவுள் என்பதன் ஸ்வபாவம், அதாவது இயல்பு "சுயஒளிர்வு". இதை வடமொழியில் ஸ்வயம்பிரகாசம் (Self Illuminated). வள்ளலார் இதை அருட்பெரும்ஜோதி என்று சொன்னார். சுய ஒளிர்வு என்றால், அது எப்பொழுதும் ஒளிமயமானதாக இருக்கிறது, தோன்றவும் இல்லை, அழிவதும் இல்லை. இதை தான் ஆதியும் அந்தமும் இல்லாதவன் என்று சொல்வார்கள். இன்னொரு இயல்பு, தன்னை வெளிப்படுத்துதல். அது இறைவனின் விருப்பம் மற்றும் ஆற்றல். அவன் இல்லாமல் ஓர் அணுவும் அசையாது. இந்த ஆற்றல் தான் அதன் சக்தி...

இதையே மனித அறிவினால் புரிந்து கொள்ள உவமையாக சும்மா இருக்கும் பொழுது சிவனாகவும், வெளிப்பட செய்யும் பொழுது சக்தியாகவும் கருதப்படுகிறது. இறைவனுக்கு பால்வகை (gender) கிடையாது. நம் அறிவுக்கு எட்டாத ஒன்றை விவரிக்கும் பொழுது ஒரு அளவுகோல் தேவை படுகிறது. அதனால் இறைவனுக்கு பெண் பால் கொடுத்து சக்தி என்றும், ஆண் பால் கொடுத்து சிவன் என்றும் விவரிக்கப்படுகிறது.

உங்கள் கேள்வியின் படி அந்த விசை தான் சக்தி, பராசக்தி, ஆதி சக்தி என்று நம் விருப்பத்திற்கு ஏற்ப அழைக்க படுகிறது. அந்த விசை ஒடுங்கி, அசைவற்று இருக்கும் பொழுது, சிவம், அச்சலம் என்று அழைக்கபடுகிறது. அதனால் தான் திருவண்ணாமலையில் இறைவனை அருணாச்சலம் என்று அழைப்பர். அருணா என்றால் ஒளி, அது மௌனமாக, அசைவற்று இருக்கும் பொழுது அச்சலம். (ஹிமாச்சலம் என்றால் அசையாது இருக்கும் பனிமலை என்று பொருள்). அதனால் தான் சிவனுக்கு மௌனகுரு என்று பெயர். இதையே ரமண மகரிஷி, அருணகிரிநாதர், தாயுமானவர் போன்றோர் "சும்மா இரு" என்று சொன்னார்கள். இயேசுநாதரின் "Be Still and know that I am God" என்ற வாக்கியமும் இதையே குறிக்கிறது...

ஆற்றல் வெளிப்படும் பொழுது இப்பிரபஞ்சம் உருவாகிறது. ஆற்றல் ஒடுங்கும் பொழுது பிரபஞ்சம் மறைகிறது....ஆற்றல் குண கலவைகளால் (சத்வ, ரஜோ மற்றும் தமோ குணங்கள்), வேறு வேறு உருவம் பெறுகிறது. ஆணாக, பெண்ணாக, பல உடல்களில், உருவங்களில் இந்த ஆற்றல் நிகழும். எல்லா குணங்களும் ஒடுங்கியபின் சிவம் நிலைக்கிறது. இந்த ஆற்றல் நிகழும் பொழுது மாயையும் சேர்த்து உருவாக்குகிறான் இறைவன். அதனால் நாம் இந்த உடல் என்று நினைத்து அல்லல்படுகிறோம். இந்த மாயையில் சிக்கி, ஆணவ மலம், மாயா மலம் மற்றும் கர்ம மலம் உண்டாகிறது. அதுவே மீண்டும் மீண்டும் பிறப்பு எடுக்க வைக்கிறது...

இதில் இருந்து விடுபட வேண்டும் என்று தோன்றும் பொழுது, ஒரு தக்க குரு அமைகிறார். அவர் வழிபடி நடந்தால் மாயையில் இருந்து விடுபட்டு சுதந்திரம் அடைகிறோம். இதையே மோட்சம், நிர்வாணம், சமாதி நிலை, ஆன்ம விடுதலை, வீடுபெறுதல் என்று பலவாறு அழைக்கபடுகிறது....

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...