ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻
எந்த ஜீவன் தன் பிறப்பின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு, தனது ஐம்புலன்களாகிய குதிரைகளை மனமெனும் கடிவாளத்தின் மூலம் இறுக்கிப் பிடித்து அடக்கிப் புத்தியென்ற சாரதியை ஆத்மாவின் ஒளியில் இயங்க வைக்கின்றானோ அல்லது ஆத்மாவாகிய பரம்பொருளிடம் யார் சரணடைகின்றார்களோ அத்தகைய உண்மையான பக்தனுக்கு உதவ அந்தப் பரந்தாமனே, தன் அம்சத்தால் புத்தியாக அவனது இதய பீடமாகிய தோ;த்தட்டில் அமர்கின்றார். அவர் இந்த உடலாகிய வாகனத்தை (தேரை) ஒரு கையில் லகானும், மறு கையில் சாட்டையுமாகக் கொண்டு செலுத்துவார்....
இந்த உண்மையைத் தான் ஸ்ரீ கிருஷ்ணர், தன்னைச் சரணடைந்து உதவி கேட்ட அர்ச்சுனனுக்குத் தானே தேரோட்டியாக இருந்து பணிபுரிவதாகக் கூறியிருக்கின்றார்...சரணாகதியின் பெருமை புலப்படுகின்றதல்லவா...!இங்கு நாம் சிந்திக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், உன்னிடமுள்ள சிறப்பு அம்சங்கள் எவையோ அவையெல்லாம் நானே..! என்று கிருஷ்ணர் அறிக்கை விட்டபின் , நம்மிடம் தற்பெருமை இருக்குமா..? “நான்” என்னும் அகந்தை இருக்குமா..? தந்தவர் அவர்..! என்ற எண்ணத்துடன் செயல்பட்டால், கர்மா ஏறுமா...?...
வாழ்க்கையில் கர்மாவை அனுபவிப்பதற்காகப் பிரச்னைக்குள் போக வேண்டியிருக்கிறது. இருந்த போதிலும், இவற்றையெல்லாம் நீ தான் செய்கிறாய்...! என்ற தெளிவு புத்தியில் ஏற்பட்ட பிறகு, வருவது எது என்றாலும் அவற்றை ஏற்றுச் சரியான விதத்தில் தீர்வு காண முற்படுகின்ற மனப்போக்கு எழ வேண்டும். அப்படி அந்தப் பிரச்னையை ஏற்கின்றபோது “தண்ணீருக்குள் மிகச் சுலபமாக இழுபடுகின்ற அம்மி” போல மிக இலேசாக அது தீர்ந்துவிடுகின்றது. கருவி நான், என்னை இயக்குபவர் அந்தப் பரம்பொருளே..! என்பதை நன்றாகத் திரும்பத் திரும்ப சிந்தித்து மனதில் பதித்துக்கொள்வதோடு, இங்கு எல்லாமே அவன் தான்..! என்னிடம் எதிர்த்து நிற்பதும் நானே..! என்ற உண்மையையும் நாம் நினைவிற் கொள்ள வேண்டும். இந்த முயற்சியால் வாழ்க்கை சிறக்கும்...
ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻
ஓம் நமசிவாய.. .🙏🏻🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக