ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🏼🙏🏼
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகளும் மற்றும் சுய விழிப்புணர்வு போதனைகளும்...🙏🏼🙏🏼🙏🏼
🔥🔥சத்குருநாதர் சீரடிபகவான் தம்முடைய பக்தர்களுடைய தீவிர நோய்களை எவ்வாறு எளிதாக குணப்படுத்தினார் என்பதன் விளக்கம்...🔥🔥
1930..ஆம் ஆண்டு டாக்டர் ருஸ்தம்ஜி என்பவர், நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு மும்பை பார்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்...மருத்துவர்கள்அவர் குணமடைவார் என்ற நம்பிக்கையை இழந்து விட்டார்கள்...மயக்க நிலையில் இருந்த மருத்துவர் ருஸ்தம்ஜியின் முன்பு ஒரு பக்கீர் தோன்றி என்னைத் தெரியுமா..? என்று கேட்டார். தெரியாது என்று பதிலளித்தார் ருஸ்தம்ஜி.... முதலில் உன் உடல் நிலை தேறட்டும், அதன் பிறகு என்னைத் தெரியவரும் என்று கூறிய பக்கீர்,ஒருமுறை ருஸ்தம்ஜியின் கட்டிலை சுற்றி வந்து பிறகு மறைந்துவிட்டார். சற்று நேரத்தில் அவர் கண் விழித்துவிட்டார்...அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ருஸ்தம்ஜி பிழைத்துக் கொண்டதையும், உடல்நிலை நல்ல முறையில் இருப்பதையும் அறிந்து வியந்தனர்.
மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த ருஸ்தம்ஜி, தன்னை ஆசிர்வதித்த பக்கீரைக் காண ஏங்கினார், ஆனால் முடியவில்லை.... ஒருநாள் அவர் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, பக்கத்தில் அமர்ந்து ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்த நபரின் கையிலிருந்த புத்தகத்தில் தான்பார்த்த பக்கீர் படம் இருப்பதை அறிந்து இவர்தான் தன்னைக் காப்பாற்றினார் என சந்தோஷப்பட்டார்...அதன் பிறகு சாயீபாபாவின் புத்தகத்தை வாங்கிப் படித்தார்.. 1949-ஆம் ஆண்டு சீரடி சமஸ்தானத்தின் மருத்துவராக நியமிக்கப்பட்டார்...ஒருமுறை இவரது மனைவி கண் வலியால் பாதிக்கப்பட்டபோது, மருத்துவர்கள் எத்தகைய சிகிச்சை அளிப்பது எனத் திகைத்தார்கள்... ருஸ்தம்ஜி தனது மனைவியை சீரடிக்கு அழைத்துவந்து, பாபாவின் சமாதியை தினமும் சுற்றச் செய்தார்...தனது கண்கள் குணமடைந்து விட்டால், பாபா பல்லக்கிற்கான அழகிய வேலைப்பாடு அமைந்த ஒரு துணியை அளிப்பதாக, மருத்துவரின் மனைவி வேண்டுதல் வைத்தார்....படிப்படியாக நோய் குணமடைந்துவிட்டது ...
ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏼🙏🏼🙏🏼
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏼🙏🏼🙏🏼
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக